சுகாதார உதவியாளர்களுக்கு 3 மாதங்களாக சம்பளமில்லை, ஆளுநரிடம் முறைப்பாடு

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றும் 10 பேருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ்.பளிஹக்காரவிடம் இன்று (11) தெரிவித்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நியமனம் பெற்ற இவர்கள், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றனர்....

இம்மாத இறுதிக்குள் 1,000 ஏக்கரில் மீள்குடியேற்றம்

யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் அக்காணிகளில் பொதுமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் இன்று தெரிவித்தார். மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் புதன்கிழமை (11) இடம்பெற்றது. இதன்போதே அவர்...
Ad Widget

அம்மாவின் விடுதலைக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி – விபூசிகா

எனது அம்மா ஜெயக்குமாரி பாலேந்திரனை விடுதலை செய்வதற்கு போராடிய சட்டத்தரணிகள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜெயக்குமாரியின் மகள் விபூசிகா தெரிவித்துள்ளார்.

இ.போ.சபையின் வடபிராந்திய ஊழியர்கள் ஒருமணிநேர பணிப்பகிஸ்கரிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலையின் ஊழியர்கள் இன்று ஒருமணிநேர பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். இன்று காலை 10 மணியிலிருந்து 11 மணிவரையே இ.போ.சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பில் தெரிய வருவது, யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுமலசலகூடத்தில் இருந்து மலக்கழிவுகள் 15 நாட்களாக அகற்றப்படாமையினால் பொதுமலசலகூடம் பூட்டப்பட்டுள்ளதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது.இதனால் அதிகாலையில்...

வலி.வடக்கு மீள்குடியேற்றம் ; இன்று இறுதி தீர்வு

வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்ட வலி.வடக்கு பிரதேசத்தில் ஆரம்பக் கட்டமாக மக்களுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி விடுதலை செய்வது தொடர்பில் அண்மையில் ஆராயப்பட்டதுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசே குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. குறித்த குழுவின் நடவடிக்கைகளின்...

நான் அநாதையாப் போயிட்டன், மகனை தந்து விடுங்கள் – ஜெயக்குமாரி

"என்ர காணாமற் போன பிள்ளை வரவேணும். அவனை எப்படியாவது கண்டுபிடிச்சு தாங்கோ'' பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரி கண்ணீர் மல்க நீதி மன்றத்துக்கு முன்பாக இவ்வாறு கோரினார். ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி நிபந்தனைப் பிணையுடன் நேற்று விடுவிக்கப்பட்டார். அவர் நீதிமன்ற வாயிலினூடாக வெளியே வந்ததும், வெளியில் நின்றிருந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அவரை...

நோ பயர் ஷோன் ஆவணப் படத்தை இலங்கையில் ஒளிபரப்ப அனுமதியுங்கள்!!

இலங்கை இறுதிப் போரில் இடம்பெற்ற போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறலை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய 'நோ பயர் ஷோன்' ஆவணப் படத்தை இலங்கையில் ஒளிபரப்பு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால அனுமதிக்க வேண்டும் என அதன் தயாரிப்பாளர் கெலும் மக்ரே கேட்டுள்ளார். சிங்கள மொழியில் பிரயாக்கம் செய்யப்பட்ட இந்த ஆவணப்படம் பிரிட்டன் நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை திரையிடப்பட்டது....

ஆசிரிய இடமாற்றக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன

வருடாந்த இடமாற்றம் கோரிய ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் 3.50 மணியளவில் வடமாகாண கல்வித் திணைக்களத்தில் வைத்து ஆசிரியர்களிடம் கைளிக்கப்பட்டதோடு, மாகாண கல்வித் திணைக்களத்திலும் காட்சிப்படுத்தப்பட்டது. வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 54 ஆசிரியர்களுக்கும், மன்னார் கல்வி வலயத்தில் 11 ஆசிரியர்களுக்கும், மடு கல்வி வலயத்தில் 20 ஆசிரியர்களுக்கும், வவுனியா தெற்கு கல்வி...

யாழ் வைத்தியசாலை கழிவகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு

யாழ். போதனா வைத்தியசாலை கழிவுகளை அகற்றும் பணியை தனியாருக்கு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். கடந்த காலங்களில் வைத்தியசாலை கழிவுகளை யாழ். மாநகர சபையே அகற்றி வந்தது. மாநகர சபை, ஒழுங்காக கழிவுகளை அகற்றாதமையால் அந்தப் பணியை தனியாரிடம் வழங்கவுள்ளோம். கடந்த சில நாட்களாக அகற்றப்படாமல் இருந்த...

எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் பெண் உயிரிழப்பு

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (10) உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிகண்டி, கொற்றாவத்தையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அன்பழகன் அமுதா (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இந்த பெண், எரிகாயங்களுடன் கடந்த 3ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்....

சிறைக் கைதி மரணம்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதியொருவர், திங்கட்கிழமை (09) இரவு, மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி, பாரதிபுரம், 145ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான தேவதாஸ் குணசீலன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர்,...

மாத்திரை சிக்கியதில் பாலகன் பலி

தொண்டையில் மாத்திரையொன்று சிக்கியதில் 3 வயது சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவமொன்று அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றது. சம்பவத்தில், கி.அருண் என்கின்ற சிறுவனே உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அச்சிறுவனுக்கு, அவனது தாயார் மாத்திரையொன்றைக் கொடுத்த போது, அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சிறுவனை அவனது பெற்றோர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு அழைத்துச்...

இலங்கை அரசின் சொற்கள் செயல்களாக மாறவேண்டும் – டேவிட் கேமரன்

இலங்கையின் புதிய ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞைகளை வரவேற்பதாக தெரிவித்திருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், ஜனாதிபதியின் அறிவிப்புக்கள் அனைத்தும் வாய்வார்த்தைகள் என்பதைத் தாண்டி செயல்களாக மாறுவதைக் காணவே பிரிட்டன் விரும்புகிறது என்று கூறியிருக்கிறார். காமன்வெல்த் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்திருக்கும் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனவை செவ்வாய்க்கிழமை தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வரவேற்று உபசரித்துப்பேசிய...

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை வரவேண்டாம் – சுரேஸ்

கடந்த இரு மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 10 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புபிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள், புதிய அரசாங்கம் அவர்களை நாடு திரும்புமாறு விடுத்த அழைப்பை ஏற்று நாடு திரும்பியவர்கள் அவர்கள் நம்பிக்கையுடன் நாடு திரும்பியபோதிலும், விமான நிலையத்தில் அவர்கள் நடத்தப்பட்டவிதம்,...

அனைத்து நாடுகளினதும் உதவிகளை பெறுவதே எமது வௌிநாட்டு கொள்கை – ஜனாதிபதி

தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை, அனைத்து நாடுகளினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலானதாகும் என்றும் இலங்கை அதன் அபிவிருத்திச் செயற்பாடுகளில் எல்லா நாடுகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையுடன் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் செயன்முறையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நேற்று பிரித்தானியாவின் பாதுகாப்புத் தலைமையகத்தில் ஐக்கிய...

நஞ்சு கலந்த உணவையே நாமின்று உட்கொள்ளவேண்டியுள்ளது

தற்காலத்தில் எமது உணவுகளில் இரசாயணப் பயன்பாடு அதிகரித்தே வருகின்றது. விவசாயத்தில் விஞ்ஞான முறை கலந்து அனைவரும் நஞ்சினை உண்டு கொண்டிருகின்றோம். அந்தளவிற்கு இந்த விவசாயத்தில் இரசாயணத்தைக் கலந்திருக்கின்றோம். இந்தச் சவால்களை ஏற்றுக் கொண்டு எதிர்நீச்சல் போட வேண்டியவர்களாக இருக்கின்றோம். என கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார். நேற்று (09) தனது...

சிப்பாய் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், மயிலிட்டி படைமுகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதவிவெல, ரந்தனியகலவைச் சேர்ந்த புஷ்பகுமார (வயது - 25) என்ற சிப்பாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். நேற்றிரவு படைமுகாமுக்குள் உள்ள மாமரம் ஒன்றில் இவர் தூக்கில் தொங்கிய நிலையிலல், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார் என்றும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க இந்தியா உதவ வேண்டும்

சுயநிர்ணய உரிமையை இழந்து நிற்கின்ற தமிழினத்தின் தலைவிதியை மாற்றுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உன்னதமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அகில இலங்கை சைவ மகா சபை கோரிக்கை விடுத்திருக்கின்றது. இந்தியப் பிரதமரை வரவேற்கும் கடிதம் கடந்த 6 ஆம் திகதி சைவ மகா சபையின் பிரதிநிதிகளால் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம்...

 ரங்கா எம்.பி.யின் கார் தீப்பற்றியது

நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பயணித்த கார், நாவுல நாலந்தவுக்கு அண்மையில் தீப்பற்றி கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காரை செலுத்தி சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரும் எவ்விதமான காயங்களும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெயகுமாரிக்கு பிணை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பாலேந்திரன், இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். பிணை வழங்குமாறு கடந்த 6ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் பிணை மனுத் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிக்கையை...
Loading posts...

All posts loaded

No more posts