மலசல கூடத்துடன் இணைந்த குளியறைக்குள் கோழி இறைச்சி விற்பனை!!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப் பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட நாட்களாக இடம்பெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் கதிரேசு வீதிக்கு திரும்பும் சந்தியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடை ஒன்றில் அக்கடைக்குரிய கோழிகள் மலசலகூடம் மற்றும் அதனுடன்...

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை!!

நாட்டின் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (13) திங்கட்கிழமை வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்' இன்றைய தினம் பகல் வேளையில் இந்த மாவட்டங்களின் சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும்...
Ad Widget

கூட்டுறவுச் சங்கக் களஞ்சியசாலையை உடைத்து நெல்மூடைகளை நாசம் செய்த யானை!!

முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் 14ஆம் கட்டைப் பகுதியில் காட்டுயானைகளின் நடமாட்டம் மற்றும் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து காட்டுயானைகள் சேதம் விளைவித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நெல் மூடைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ஒரு அச்சநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும்கூட,...

ஏ9 வீதியில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு!!

கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது என கடந்த 30ஆம் திகதி மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக, இன்று வெள்ளிக்கிழமை (3) கிளிநொச்சி நகர்ப்பகுதியில் ரிப்பர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி...

முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கு புதிய நோயாளர் காவு வண்டி!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரச் சேவை, நோயாளர் போக்குவரத்து மற்றும் அவசரச் சிகிச்சைச் சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கான புதிய நோயாளர் காவு வண்டி (Ambulance) ஒன்று நேற்று முன்தினம் (30) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன...

பேருந்து ஊழியர்களுக்கு முறைப்பாடு இலக்கத்துடன் சீருடை!

வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (01) நடைபெற்றது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்....

பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

கடந்த 22 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில் பெருமாள் கணேசன் என்ற 64 வயதுடைய ஓய்வு பெற்ற அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரின் இறப்புக்கு நீதி...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் – அர்ச்சுனா

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் உறுதியளித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (23) அமர்வில் இடம்பெற்ற கரைவலை மீனவர்கள் பிரச்சனை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு...

பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த ஓய்வுபெற்ற அதிபர் மோட்டார் சைக்கிள் மோதி பலி!

கிளிநொச்சி, ஏ - 9 பிரதான வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் என்பவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான அதிபர் வழமை போன்று தனது மாலை நேர நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு...

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்படட பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறி விழுந்த இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார். நேற்று மாலை (22) இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தர்மபுரம், பிரமந்தனாறு பகுதியில் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குறித்த...

அனுமதியின்றி வாகன பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் ; மோட்டார் சைக்கிள் பறிமுதல் ; பலருக்கு எதிராக வழக்கு!

வவுனியா நகரில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் நடத்தப்பட்ட, அனுமதி பெறப்படாத வாகனப் பேரணி ஒன்றின்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பேரணியினர் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவர்களால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் பெரும் எண்ணிக்கையிலான...

சட்டவிரோத மணலுடன்பூநகரி பிரதேச சபை உழவு இயந்திரம் STF ஆல் கைப்பற்றப்பட்டது; சாரதி கைது

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு பூநகரி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், கைது செய்யப்பட்ட சாரதியினையும் சட்டநடவடிக்கைக்காக நீதி மன்றில் முற்படுத்த பூநகரி பொலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஜெயபுரம் பகுதியிலிருந்து அனுமதியற்றவகையில் மணலுடன் பயணித்த உழவு இயந்திரத்தினை...

குழந்தை விற்பனை முயற்சி: தாய் உட்பட இருவர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட தாய் மற்றும் தந்தை எனக் கூறப்படும் ஆண் ஒருவரும் அப்பகுதி மக்களால் தருமபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த மேலும் தெரியவருவதாது, யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியைச் சேர்ந்த...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை கணக்காளர் உட்பட இருவர் கைது

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரையும் 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் படுக்கை விரிப்புகளைச்...

இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

முல்லைத்தீவு, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இராணுவத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த நபர் ஒருவரை முல்லைத்தீவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு – துண்டை, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வலை இழுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் சோதனையிட்டபோது,...

மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற கப் வாகனத்தை பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது, அதனை நிறுத்தாது தப்பிச் செல்ல முயன்றதால் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, பொலிஸார் வாகனத்தை நோக்கி ஐந்து தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சாரதி வாகனத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்....

சுதந்திர தினத்தில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்!!

நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி்ல் நேற்றையதினம் (4) போராட்டங்கள் இடம்பெற்றன. அதற்கமைய கிளிநொச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் A9 வீதி ஊடாக டிப்போ...

இரணைமடுக் குளத்தின் 8 வான் கதவுகள் திறப்பு!

வட மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும் போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியான மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குளத்தின் நீர்மட்டம் தற்போது...

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி பெற்றுத்தரப்படுமென சுகாதார அமைச்சர் உறுதி

முல்லைத்தீவு - சிலாவத்தைப் பகுதியைச்சேர்ந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்படுமென சுகாதார அமைச்சர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தகவல் தெரிவித்துள்ளார். அத்தோடு முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னிப்பிராந்தியத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்செய்வதுதொடர்பிலும் தம்மால் கூடியவிரைவில் உரியநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் சுகாதார அமைச்சர் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும்...

நாயாறு பாலம் தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

முல்லைத்தீவு - நாயாறு பாலத்தின் திருத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. தற்போது சில சிறிய பணிகள் மட்டும் மீதமுள்ளன. அவையும் நாளைய தினத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு, RDA (Road Development Authority) நாயாறு பாலம் வழியாக பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால், நாயாறு பாலம் வழியாக...
Loading posts...

All posts loaded

No more posts