- Tuesday
- September 1st, 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவக் காலத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2026 எதிர்வரும் செப்டம்பர் 5-ஆம் திகதி முதல் 9-ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நல்லூர் கோவிலுக்கு அருகில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இப்புத்தகத் திருவிழாவில், 30-க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்களில்...
தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்போது வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் மூழ்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எல் நினோ காலநிலை நிலைமை குறித்து...
யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து மீள கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில், புதுக்குடியிருப்பு பங்கிற்ற்கு உட்பட்ட சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி எஸ். அஜந்தன் தலைமையிலும், முல்லைத்தீவு மாவட்ட குருமுதல்வர் இராஜசிங்கம் அடிகளார் அவர்களது ஆன்மீகத் தலைமையிலும் இடம்பெற்ற இந்த மதிப்பளிப்பு...
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் சென்ற ஜூலை 22 ஆம் திகதி முதல் மேற்கோள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே இடைநிறுத்துமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று (31) திங்கட்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், இது தொடர்பில் மேல் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கில்,எதிர்வரும் செப்டெம்பர் 22...
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன், தனியார் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். குறித்த தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர், நெல்லியடிப் பகுதியில்...
இன்று நள்ளிரவு (ஆகஸ்ட் 31) முதல் 450 கிராம் எடையக்கொண்ட பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 30) ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு எவ்வித unfair (முறையற்ற)...
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் தாயார்கள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மிகவும் மோசமான ஒரு சம்பவமாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிக்குழுவின் பிரதிநிதி அனா லோறினா டெல்கடிலோ பெரஸ் (Ana Lorena Delgadillo Pérez) கவலை...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளைக் குறைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் (LIOC) தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. இதற்கமைய, ஐ.ஓ.சி நிறுவனம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012 ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர்....
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இம்மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே, அர்ச்சுனா எம்.பி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இக்கோரிக்கையை முன்வைத்தார். எவ்வாறாயினும்,...
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பொதுமக்களுக்கு விடுக்கும் அவசர வேண்டுகோள்.... முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வரண்ட காலநிலை காரணமாக, மக்கள் தங்களுடைய காணிகளை சுத்தப்படுத்துவதற்காக வைக்கும் தீ, கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள காணிகள், வீடுகள் மற்றும் ஏனைய சொத்துகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, காணிகளுக்கு தீ வைப்பதை பொதுமக்கள் முற்றாகத்...
பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இந்த ஒலி மாசுபாடானது கைக்குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாரிய சுகாதார மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தமது அறிக்கையில்...
நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து சந்தேகநபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போது அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராக்களும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நெல்லியடி...
முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், விகாரைக்குத்...
உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின்...
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும். அதன்படி, கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ. வரை அதிகரிக்கும்...
கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலிச்சோலை, பாசிக்குடா பகுதியில் கைப்பேசி வெடித்ததில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞர் கைப்பேசியை மின்னேற்றத்தில் (Charging) இணைத்துவிட்டு, அதனை நெஞ்சில் வைத்தவாறு உறங்கியதாகவும், இதன்போது மின்சாரம் தடைப்பட்டு, சிறிது நேரத்தின் பின்னர் மின்சாரம் மீண்டும் வழமைக்குத்...
கொழும்புத்துறை இறங்குதுறையை அகலப்படுத்தும் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். கடற்றொழிலாளர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு, இறங்குதுறை வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் தற்போதைய பணிநிலை மற்றும் எதிர்கால கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம்...
இன்று (ஆகஸ்ட் 28) நண்பகல் 12:11 மணிக்கு கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நகர்கோவில் ஆகிய இடங்களுக்கு மேலாகச் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளது. சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...
Loading posts...
All posts loaded
No more posts
