QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில் நீக்குவதற்கு எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளுக்கான ஸ்திரத்தன்மை இன்னமும் இல்லாமை காரணமாக, எரிபொருள் QR நடைமுறையை மேலும் தொடரவுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். QR நடைமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள்...

ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது!!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சூதாட்ட மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நடைபெறும் 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின்...
Ad Widget

வெற்றிலையுடன் புகையிலை விற்றால் குற்றம்!!

வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இன்று (17) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டத்தின்...

காணிகளை விடுவிக்க கோரி 13ஆவது வாரமாக போராட்டம்!!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம்...

அர்ச்சுனாவை வெளியேறச் சொல்ல அமைச்சருக்கு அதிகாரமில்லை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள் சார்பில் கேள்விகளை எழுப்புவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள்...

செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் 420 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 420 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 34 வது நாளான நேற்று (16) 6 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்...

தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு சிறந்த அறிகுறி!

தமிழ் பேசும் ஆறு அரசியல் தரப்புகள் ஒன்றிணைவது தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான அறிகுறியாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். சிங்கள மொழி பேசும் கட்சிகளிடமிருந்து தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்...

சுகாதார துவாய்களுக்கு SLS தரச்சான்றிதழ் கட்டாயம்!!

SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச்செல்லல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் தடைசெய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச்...

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் கவனத்திற்கு!!

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் (2026) வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் இணையவழியில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்றத்திற்காக விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் நேற்றைய தினம் 16ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க...

அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்ட பின் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதியால் செல்ல அனுமதிக்கப்படுவர்

கடந்த ஆண்டு (2024) இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி இன்று (16) முதல் திறக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 20 ஆம் திகதி அலங்கார திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு செல்வதற்கான பாதை இராணுவத்தினரால் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்து ஆண்டு ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள்...

கிளிநொச்சி DCC கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அரச அதிகாரிகள்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை ஊழல்வாதி என கூறிய அர்ச்சுனா எம்.பியின் கருத்தால் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இருந்து  அரச அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். அமைச்சர் சந்திரசேகரன் மற்றுமு் எம்பிக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி பதற்றமான சூழல் ஏற்பட்டது .அதனை அடுத்து  கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி!!

தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த தமிழ்த் திறன் போட்டிகள் – 2026: பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி அறிவிப்பு!  தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த தமிழ்த் திறன் போட்டிகள் – 2026 இன் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய மட்டக் கட்டுரைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. திலீபன் ஆவணக்காப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில் இலங்கையிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்துத்...

பொதுச்சேவை பதவிகளுக்கான போட்டிப் பரீட்சை அறிவிப்பு!

வடக்கு மாகாண பொதுச்சேவையிலுள்ள குறிப்பிட்ட பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகள் - 2026 தொடர்பான அறிவித்தலை வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலின்படி, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவி இடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2026.07.28 ஆகும். விண்ணப்பம் கோரப்பட்டுள்ள...

காக்கைதீவில் உள்ள கழிவு மீள்சுழற்சி மையத்தை அகற்றுமாறு பிரதேச மக்கள் போராட்டம்!!

யாழ்ப்பாணம், காக்கைதீவு பகுதியில் உள்ள கழிவு மீள்சுழற்சி மையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்பாக நேற்றைய தினம் புதன்கிழமை (15) காலை குறித்த போராட்டம் நடத்தப்பட்டது. மாநகர சபையின் கழிவு மீள்சுழற்சி மையம் காக்கைதீவு பகுதியில் அமைந்துள்ளது. தற்போது அங்கு மீள்சுழற்சிகள் இடம்பெறாமல் குப்பைகள்...

3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!!

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில், ஒரே நாளில் 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "சட்டம் அனைவருக்கும்...

விஜய் மற்றும் ஜனாதிபதி அநுர அரசு மீதான பழிவாங்கல் குற்றச்சாட்டுகளுக்கு விக்னேஸ்வரன் பதில்!

சாது மிரண்டால் என்ன நடக்கும் என்பதை இலங்கை மக்களும், அண்மையில் தமிழ்நாட்டு மக்களும் செயலில் காண்பித்துவிட்டனர். இலஞ்ச ஊழலில் இதுவரையில் ஈடுபட்டவர்களை நாம் அடையாளம்கண்டு தண்டிப்போம் என்று கூறியே தற்போதைய தமிழக அரசும், இலங்கை அரசாங்கமும் மக்களின் ஆதரவைப் பெற்றது. இப்போது அன்று இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை இந்த அரசாங்கங்கள் அடையாளம்காண விளைந்தால், அவர்கள் பழிவாங்கலில்...

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று (15) ஆரம்பமாகியுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த 23 ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட...

இவ்வருட O/L விண்ணப்பதாரருக்கான முக்கிய அறிவித்தல்!!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இலங்கை பரீட்சைத் திணைக்களம் விசேட தெளிவுபடுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 03 ஆம் திகதி ஆரம்பமான விண்ணப்பக் கோரல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில்,...

மலசல கூடத்துடன் இணைந்த குளியறைக்குள் கோழி இறைச்சி விற்பனை!!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப் பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட நாட்களாக இடம்பெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் கதிரேசு வீதிக்கு திரும்பும் சந்தியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடை ஒன்றில் அக்கடைக்குரிய கோழிகள் மலசலகூடம் மற்றும் அதனுடன்...

AI மூலம் பேஸ்புக்கில் பெண்களின் போலி கணக்குகள்: இலங்கையில் வெளிச்சத்திற்கு வந்த பாரிய மோசடி!!

இலங்கையில் பேஸ்புக் (Facebook) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பெண்களின் பெயர்களில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட ஏமாற்று மற்றும் பணமாக்கும் வலைப்பின்னல் ஆய்வொன்றின் மூலம் முதன்முறையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளரும் தகவல் ஆய்வாளருமான சஞ்சன ஹத்தொடுவ (Sanjana Hattotuwa) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கையில் இந்த அதிர்ச்சித்...
Loading posts...

All posts loaded

No more posts