பயனர் பெயரை மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் வசதி!!

தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டாமல், பயனர் பெயரை (Username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் வசதியை வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 3 பில்லியன் பயனர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் இந்த வசதி வழங்கப்படவுள்ளது. இது கட்டாயமானதொன்றல்ல என்பதுடன், விருப்பமுள்ளவர்கள் மட்டும் தங்களுக்குத் தேவையான பயனர் பெயரை (Username) ஒதுக்கிப் பெற்றுக்கொள்ள...

யாழ். மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்!

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் , பரிசுத்த பாப்பரசர் 14ஆம் லியோவால் நேற்று (29) நியமிக்கப்பட்டுள்ளார். 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், 2000ஆம் ஆண்டில் கொழும்பு மறைமாவட்டக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் பல இடங்களிலும் சமய, கல்வி மற்றும் நிர்வாகப்...
Ad Widget

எச்சரிக்கை! 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பக்கூடும்!!

கங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அந்த கடற்பரப்புகள்...

சிகரம் கல்வி தொழில் விசா சேவை யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிகள் பிரிவில் ஆரம்பமானது!

15 வருடங்களுக்கு மேற்பட்ட கல்வி, தொழில், விசா சேவை அனுபவம் கொண்ட சிகரம் நிறுவனத்தின் செயற்பாடுகள், யாழ் நகர மத்தியில் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிகள் பிரிவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன், முன்னாள் நெல்லியடி மகாவித்தியாலய அதிபர் கலாநிதி சேதுராஜா, யாழ்...

பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைப்பு!!

நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 434 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும். அத்துடன் 407 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின்...

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

இலங்கை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள “Tell the IGP” திட்டம், ஏதேனும் சம்பவம் அல்லது இணையவழிச் செயல்பாடு தொடர்பான முறைப்பாடுகளை நேரடியாகக் பொலிஸ்மா அதிபரிடம் (IGP) சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது இத் திட்டம் 2026 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இச்சேவையின் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்கள் சிங்களம், தமிழ்...

தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்ல கூடாது!

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த்...

டெங்கு ஒழிப்புப் பணிகளில் இருந்து இன்று முதல் கிராம உத்தியோகத்தர்கள் விலகல்!!

நாட்டில் டெங்கு நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ள சூழ்நிலையில், அரசாங்கத்துடனான தங்களது நீண்டகால பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் தேசிய சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்கத் தவறியமையால், இன்று (30) செவ்வாய்க்கிழமை முதல் டெங்கு ஒழிப்பு...

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை!!

விசேட டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவில் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார். எனினும், எம்மைச் சூழவுள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டும் எனவும், அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ஜெய்ப்பூர் நிறுவனம் தொடர்ந்து இயங்க கொடையாளர்கள் உதவ வேண்டும்!” – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை

அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கிப்போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயற்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதற்கு கொடையுள்ளம் கொண்டவர்கள் தங்களின் உதவிகளை வழங்க முன்வர வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்...

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சூரிய மின் படலத்தை துண்டிக்க வேண்டுகோள்!!

மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக, நாளை (27) முதல் 29ஆம் திகதி வரை,கூரைகளின் மீது பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளைக் கொண்ட நுகர்வோர், அவற்றைச் செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (26) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை சந்தித்தார் சிறீதரன் எம்பி!

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மாண்புமிகு தொல். திருமாவளவன் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பில், ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்கான பயணத்தில் கடந்த காலங்களிலும் தற்போதைய காலகட்டத்திலும் ஆற்றப்பட்டு வரும் முக்கியமான பங்களிப்புகளுக்காக...

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பை கண்டித்து தென்மராட்சியில் முழு கடையடைப்பு!

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப தவிசாளர் ஞா.கிசோரை வடமாகாண ஆளுநர், உப தவிசாளரின் பதவியை...

வரி செலுத்துநர் அடையாள இலக்கத்திற்கு காலவரையறை விதிக்கப்படவில்லை ; பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை!!

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக காலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தினமும் நிற்பது தொடர்பாக, அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று வியாழக்கிழமை (25) அவ் அலுவலகத்தின் பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு...

வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டம் !!

வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (25) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் வட மாகாணத்தில் பல வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரியும்...

தீவக வலய கல்விப்பணிப்பாளராக து.லெனின் அறிவழகன் நியமனம்!!

தீவக வலய கல்விப்பணிப்பாளராக து.லெனின் அறிவழகன் அவர்கள் நேற்றைய தினம் (24.06.2026) புதன்கிழமை கடமைகளை தீவக வலயக் கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக சிறப்பாக கடமையாற்றி இடமாற்றம் பெற்று தீவக வலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளுநரால் பதவி பறிக்கப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கண்டனம்!!

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, அவரது உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா.கிசோர், உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனைத் தூக்கி வீசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் வடமாகாண ஆளுநரால்...

யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றுமுன்தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் எரிந்ததால் ஏற்பட்ட நச்சுப் புகை மற்றும் கடுமையான துர்நாற்றம் காரணமாக, நாவாந்துறை...

பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளுமாறு தனியார் பஸ் சங்கங்கள் கோரிக்கை!

வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துமாறு தனியார் பஸ் சங்கங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. நேற்று புதன்கிழமை (24) இந்த கோரிக்கை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.இலங்கை செய்திகள் இதன்படி, அடுத்த ஐந்து நாட்களுக்குள்...

வவுனியா முதல்வர், சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்

வவுனியா மாநகர சபையின் முதலாவது முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் ஆகியோர் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் மீதான விசாரணை ஒன்றின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts