செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை

செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி தொடர்பிலான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி குறித்த பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என செவ்வாய்க்கிழமை (07) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வெளிப்பட்டது. செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று (7) யாழ். நீதிவான் லெனின் குமார் முன்னிலையில்...

முல்லைத்தீவில் மது விருந்துக்காக அதிகாரிகளால் முறைகேடாக பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள் ; ஊடகவியலாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, மது அருந்தியது மாத்திரமின்றி ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (7) இரவு பதிவாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் மாங்குளம் வட்டார வன வள திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி...
Ad Widget

மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது!!

யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியை சேர்ந்த கோபாலபிள்ளை கமலதாஸ் (வயது 39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றுக்கு அருகில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அநாதரவான நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து தோட்ட உரிமையாளர் அப்பகுதியில் தேடுதல் நடாத்திய வேளை...

அனலைதீவில் துருப்பிடித்த நிலையில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கி மீட்பு

அனலைதீவு பகுதியில் நேற்றைய தினம் (07) துருப்பிடித்த நிலையிலான கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அனலைதீவு பகுதியில் உள்ள காணி ஒன்றினை அதன் உரிமையாளர் நேற்றைய தினம் துப்புரவு செய்துள்ளார். இதன்போது, மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த குறித்த கைக்குண்டையும் துப்பாக்கியையும் அவர் அவதானித்துள்ளார். இது குறித்து ஊர்காவற்துறை...

யாழில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், பெண் ஒருவரை உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அறுக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில், பெருங்குற்றப் பிரிவு...

சுன்னாகத்தில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம், பூவாடை வீதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, குறித்த கிணற்றிலிருந்து விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைப்பதற்காகச் சென்ற விவசாயி ஒருவர், கிணற்றிற்கு அருகாமையில் பாதணி (செருப்பு) இருப்பதைக் கண்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் கிணற்றினுள்...

புதன்கிழமை விசேட விடுமுறை இரத்து!!

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதன்கிழமை விசேட விடுமுறை முறையை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த விசேட விடுமுறை முறைமை இரத்து செய்யப்படுகிறது. அரசாங்க ஊழியர்கள்,...

எரிவாயு விலைகள் நள்ளிரவு முதல் உயர்வு!!

உள்நாட்டு லிட்ரோ எரிவாயு விலைகள் நேற்று (5) நள்ளிரவு முதல் உயர்த்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 775 அதிகரித்து, புதிய விலை ரூ. 4765 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. . ஒரு 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 308 அதிகரித்து, அதன் புதிய...

பண்டிகை காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

பண்டிகை காலப்பகுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது.உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தால் அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்குவோம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமாரகே தெரிவித்தார்.

அல்லைப்பிட்டியில் சிறுவன் கொலை – குடும்பத்தினருக்கு அச்சறுத்தல்!!

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் குடும்பத்தினரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். அதேவேளை குற்ற சாட்டுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் பிரிவினரே அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகிறது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெவ்ரவரி மாதம் 10ஆம் திகதி...

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA) இன்று மீண்டும் வேலைநிறுத்தம்!!

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA), வியாழக்கிழமை (02) காலை 8 மணி முதல் மற்றொரு 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது. சுகாதார அமைச்சகத்தால் பின்பற்றப்படும் சட்டவிரோத இடமாற்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 – விண்ணப்பங்கள் இன்று முதல்

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (30) முதல் பெறப்படுகின்றன. மாணவர்கள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க முடியும். பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் (www.doenets.lk) மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்...

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தம்!

நீதிக்கு புறம்பான முறையில் வைத்தியர்களின் இடமாற்றங்கள் முன்னெடுக்கப்படுவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படுவதாக அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர்...

நாவற்குழியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பிக்கு விளக்கமறியலில்!!

நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய நீரினை பெறுவதற்காக கடந்த சனிக்கிழமை சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி...

வெப்பமான வானிலை இன்றும் தொடரும்!!

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மேல் மற்றும் சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது....

கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPSஊடாக கண்காணிக்க நடவடிக்கை!!

வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி ((GPS)) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல் படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம்...

மனிதாபிமானம் மரணித்ததா? யாழில் மயங்கிய நிலையில் மாணவன் காத்திருப்பு

மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் மயங்கி விழுந்துள்ளான். அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்கு...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (27) ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் இணை தலைமையுடன்...

A/L பரீட்சைப் பெறுபேறு புத்தாண்டுக்கு முன்னர்!!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அவர் கூறினார். நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள் தித்வா...

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று (26) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பண்ணை வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞரை, இரண்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத வன்முறைக் கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த இளைஞர் பண்ணை கடல்பகுதியில்...
Loading posts...

All posts loaded

No more posts