- Monday
- June 15th, 2026
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட்கிழமை (15) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36...
வலி.வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் (15) 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில்...
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று (14) 24 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நடைபெற்றது. நேற்றுடன் 355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 341 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நேற்று 07 என்புக் கூடுகள்...
தற்போது அபாயகரமான நிலையை நோக்கி தீவிரமடைந்து வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்கள், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இன்று...
சொல்லிசை கலைஞர் சங்கீத்சன் தொடர்பான வழக்கில் சற்றுமுன் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை பரிசீலித்த நீதிமன்றம் சங்கீத்சனுக்கு பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள் முன்னெடுக்கவுள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள்...
பொதுமக்கள் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை 24 மணிநேரமும் வழங்கும் வகையில் கழிவு சேகரிப்பு மையங்கள் நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் நிறுவப்பட்டு நடைமுறையில் உள்ளநிலையில் இதற்கு மாறாக பொது இடங்களில் கழிவுகளை வீசிவிட்டு செல்பவர்கள் கண்காணிப்பு கமராக்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு தண்டப்பணம் அறவிடும் செயற்பாடும் நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் இச் செயற்பாட்டினை மேலும் விரிவுபடுத்தும்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களை சந்திப்பத்தில் எனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின்போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும்...
இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான 'புள்ளி குறைப்பு முறைமை' எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் - வீதிகளில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களைக் கட்டுப்படுத்தவும், சாரதி ஒழுக்கத்தை மேம்படுத்தவும் கடுமையான சட்ட அமுலாக்கம் அவசியம் என அமைச்சர்...
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகரின் விடுதலை தொடர்பாக பொலிஸ் மா அதிபர், மற்றும் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடிய பின்னர் சாதகமான தீர்மானமொன்று எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி இளைஞனுக்கு இன்னும் “தடுப்புக்காவல் உத்தரவு”...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் மேற்கு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்த சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் நேற்றிரவு சாவகச்சேரி பொலிஸாரின் உதவியுடன் கிராம மக்கள் இணைந்து...
எதிர்வரும் புதன்கிழமை (10.06.2026) மற்றும் வியாழக்கிழமை (11.06.2026) ஆகிய தினங்களில் திருநெல்வேலிச் சந்தி, ஆடியபாதம் வீதி பகுதியில் தார்படுக்கை (Carpet) இடும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, வரைபடத்தில் சிவப்பு நிறத்தால் குறிக்கப்பட்டுள்ள வீதிப் பகுதி, மேற்குறிப்பிட்ட நாட்களில் போக்குவரத்திற்காக முழுமையாக மூடப்பட்டிருக்கும். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பணிகள் சிறப்பாக நடைபெற...
2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், இப்பரீட்சை செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக் கோரி இன்றையதினம் (08) காலை 10.30 மணிக்கு வல்வெட்டித்துறை சந்தியில் ஆர்பாட்டம் இடம்பெற்றது. இதில் சமூக அரசியல் செயற்பாட்டாளரான விமலதாஸ் கவிச்செல்வன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளரான இரா. சுரேன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் வல்வெட்டித்துறையின் சமூக ஆர்வலர்கள், இளைஞர்களின்...
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் கலந்து கொண்ட மல்லாகம் நிகழ்ச்சியில் பெண்ணொருவர் ஆக்கிரோஷமான கருத்துக்களை வெளியிட்டமையால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பெண்கள் தொடர்பான கலந்துரையாடல் என கூறி தம்மை அழைத்து விட்டு மேடை பேச்சுக்களுடன் நிகழ்வினை முடித்து சென்றதாகவும் அதனால் தான் கதைக்க வந்த பிரச்சனை தொடர்பில்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள உதயநகர் மேற்கு, கிளிநொச்சியை நிரந்தர முகவரியாகக் கொண்ட...
யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நிலையில் அதிக ஆபத்துள்ள கரவெட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கோப்பாய், சங்கானை, சாவகச்சேரி, நல்லூர், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை, உடுவில்...
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியமைக்காக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். பொழுதுபோக்கு நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கூற்றுகள் தவறானவை என்றும் அவை மக்களை தவறாக...
சில பாடல்கள் கலை வெளிப்பாடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆயுதவாதத்தை உருவாக்குகின்றன என வாதிடுவது யதார்த்தத்திற்குப் புறம்பான அணுகுமுறையாகும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார். பாடல் உருவாக்கம் தொடர்பில் இடம்பெற்ற கைது நடவடிக்கை தொடர்பில் தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுர இலங்கையில் மீண்டும்...
எழுச்சி பாடலை பாடினார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் சொல்லிசை கலைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில்...
Loading posts...
All posts loaded
No more posts
