- Friday
- November 7th, 2025
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேரும் பகுதி பகுதியாக ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில்...
நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் வியாழக்கிழமை (6) விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள் உள்ளதாகவும், அவற்றுக்கு சிகிச்சை செய்வதற்கு பாரியளவு நிதி தேவை என்றும் பொய்கூறி வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் குறித்த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குறித்த ஆசிரியர், சில மாணவர்களுடன் இணைந்து பல மாணவிகளின்...
2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (06) நிறைவடைந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்காகக் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உட்பட ஏனைய பிரதிவாதிகளால்...
நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், டிசம்பர் மாதம் 7ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்க...
WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக அதன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார். வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட...
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான நிதி மோசடி சம்பவங்கள் குறித்து பணியகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவை போலியானவை என்றும், அவை பணியகத்திடமிருந்து ஒப்புதல் பெறவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனவே, வெளிநாட்டு வேலை...
யாழில் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது. உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கைபேசியில் விளையாடப்படும் பப்ஜி எனப்படும் கேமிற்கு அடிமையாகியுள்ளார். இவர் மீட்டர் வட்டிக்கு பணத்தினை பெற்று குறித்த கேமிற்கான...
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த நபர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த மூவரும் சுமார் 15 நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்கு...
யாழ். மாவடத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையின் எதிர்கால திட்ட முன்மொழிவு குறித்தும் அதன் சவால்களை ஆராயும் முகமாகவும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் ஆகியோரது பிரசன்னத்துடன் கள விஜயம் ஒன்று நேற்று புதன்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், யாழ் மாவட்ட பாராளுமன்ற...
பலாலிப் பிரதேசத்தில் உயர் பதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள காணிகளை அவற்றின் தனிப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு துரிதமாகக் கையளிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத்...
பொது சேவை ஆட்சேர்ப்பு செயல்முறைய மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, பல அரசு அமைச்சகங்கள், மாகாண சபைகள் மற்றும் ஆணையங்களில் 8,547 பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு, ஏற்கனவே உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் காலக்கெடுவை அடையாளம் கண்டு ஆட்சேர்ப்புகளை...
அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை நேற்று (28) கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார். இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாணத்திற்குப்...
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி, யாழ்ப்பாணம் செம்மணி வளைவுக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (28) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை மெதடிஸ்த திருச்சபை மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு ஆகியவை இணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் மத தலைவர்கள் , பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டு செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இலக்கத் தகடு இன்றி பயணித்த சிற்றூந்து ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது...
யாழில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேகரித்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். நேற்று (27) யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன் செயற்பட்ட உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமையானது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த...
மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, அந்நாட்டு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால், இலங்கை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகேவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இதன்போது, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய பாதையை தொடங்குவதன் மூலம் இந்தியா-இலங்கை...
மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும்...
Loading posts...
All posts loaded
No more posts
