தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சை நிறைவடைந்து ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பரீட்சை மையங்களில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைத்...

துணை மருத்துவ சேவையின் 8 பயிற்சிப் பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

நோயாளி பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக, துணை மருத்துவ சேவையின் (Paramedical) 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. துணை மருத்துவ சேவையின் (Paramedical) புதிய பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, துணை மருத்துவ சேவையின் கீழ்வரும்...
Ad Widget

யாழில். மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள உணவுத் திருவிழா!!

வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் 'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா' (Visit Jaffna 2026 – Cultural and Culinary Festival) எதிர்வரும்...

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்!!

அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில் 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை வழங்கியுள்ளது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அனிபாரஜீப் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்...

எட்டாவது வாரமாகவும் பலாலியில் போராட்டம்!

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் நேற்றைய தினம் எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த...

டெங்கு காய்ச்சல் : இதுவரை 89,639 பேர் பாதிப்பு ; உயிரிழப்புகள் 65 ஆக அதிகரிப்பு!

நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை நிலவும் காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மாதாந்தத் தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,533...

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் மற்றொரு கட்டம் ஆரம்பம்!

தெங்கு பயிர்ச்செய்கை சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கற்பகத்தரு வளத்தின் கீழ் வடக்கு தெங்கு முக்கோணம் திட்டத்தின் மற்றொரு கட்டம் முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியில் நடைபெற்றது. 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் தெங்கு ஏற்றுமதி வருமானத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வருடாந்த தெங்கு உற்பத்தியை 4,200 மில்லியன் காய்களாகவும் உயர்த்தும் தேசிய இலக்கை அடையும் நோக்கில் இது நடத்தப்படுகிறது....

கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்!!

பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர். கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார். கிராம...

மாணவர்களிடம் தலைமைத்துவப் பண்பையும் ஆளுமையையும் வளர்த்தெடுக்க வேண்டும்!!

சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடியவாறு மாணவர்களை உருவாக்குவதில்தான் ஒரு கல்லூரியின் வெற்றி தங்கியிருக்கின்றது. கல்லூரிகள் மாணவர்களிடம் தலைமைத்துவப் பண்பையும் ஆளுமையையும் வளர்த்தெடுக்க வேண்டும்' என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்தின் கீழ் 51.88 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப அலகு...

நல்லூர் கோவில் வீதிக்கு பூட்டு!!

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவானது நாளைய தினம் வியாழக்கிழமை காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாகவும், அதற்குரிய பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையிலும் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை குறித்த பகுதியின் ஊடான போக்குவரத்து தடை...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (05) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை உத்தரவு அமுலில் இருக்கும். மேலும், இக்காலப்பகுதியில் பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வினாக்களைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல்...

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி புதைகுழியில் நேற்று (04) 43 ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது, புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரையில் மொத்தம் 97...

வவுனியா கோர விபத்து: விசாரணையில் வௌியான திடுக்கிடும் தகவல்!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், குறித்த பிரபல பேருந்தின் உரிமையாளர் நேற்று (04) புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில், அதில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை...

விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் பலி!!

காரைநகரில் நேற்று (03) இரவு இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்போது காரைநகர் - கருங்காலி பகுதியை சேர்ந்த 66 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் நேற்று இரவு கருங்காலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது அவ் வீதியால் வந்த மோட்டார்...

மக்களின் காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர்!

வடக்கு கிழக்கு யுத்தத்தின் போது அரசின் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகளை மீட்கும் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்துக்கு திங்கட்கிழமை (03) மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக சம உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது. கேப்பாப்புலவு மற்றும் பலாலியில் காணிகளை இழந்த மக்களின் நில உரிமை தொடர்பாக உருவாக்கப்பட்ட சிவில் அமைப்புகள் மற்றும் சம...

PickMe கட்டண முறைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகள் கவனயீர்ப்பு

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் திங்கட்கிழமை (03) பிக்மீ செயலியின் கட்டண முரண்பாடுகள் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலஸ்தோட்டம் சந்தியில் இருந்து பேரணியாக புறப்பட்ட சாரதிகள், மூன்றாம் கட்டை வழியாக பிக்மீ அலுவலகத்தை அடைந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்....

இயக்கச்சியில் வீதி விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு!

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நேற்று (03) திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் பிற்பகல் உயிரிழந்துள்ளார். வீதியில் நின்று கொண்டிருந்த குறித்த பெண் மீது, அதே திசையில் பின்னால் சென்று கொண்டிருந்த 'ஹையேஸ்' ரக வாகனம் மோதியதிலேயே விபத்து சம்பவித்துள்ளது....

வடக்கு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது!

வடமாகாண தகவல் தொழில்நுட்ப அமைப்பின் (NCIT) வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை (18 ஜூலை 2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், வடக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு மற்றும் ஒருமித்த தீர்மானத்துடன் புதிய இயக்குநர் சபையினரும் நிர்வாகிகளும் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 🏛️ NCIT இயக்குநர் சபை உறுப்பினர்கள்...

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்!!

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்...

நல்லூர் ‘வடக்கு வாசல் வளைவு’ திறப்பு: ஊர்வல நெல் பெட்டகத்தில் அடியார்களும் நெல் சமர்ப்பிக்கலாம்!

கார்த்திகை நன்னாளில் காண்பிய விரிப்பு காணவிருக்கும் நல்லூரன் வடக்கு வாசல் வளைவின் ஊடாக செல்லும் இரட்டை திருக்கை வண்டி ஏற்றிய நெல்பெட்டகத்தில் அடியார்களும் நெல் இடலாம். நாளை மறுதினம் வியாழக்கிழமை (06.08.2026) ஆடிக் கார்த்திகை நன்னாளில் காண்பிய விரிப்பு காணவிருக்கின்றது. குறித்த காண்பிய விரிப்பு முன்னர் அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து...
Loading posts...

All posts loaded

No more posts