யாழ் இந்துக் கல்லூரி மற்றும் அதிபர் தொடர்பான அவதூறான காணொளியை அகற்ற நீதிமன்றம் கட்டளை

(more…)

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவு!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்றையதினத்துடன் நிறைவடைந்துள்ளது. இறுதிநாளான நேற்றைய தினம் 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், 10 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவது நாளான நேற்றைய தினம் இறுதிநாள் அகழ்வு...
Ad Widget

கொலைகாரர்களிடம் நீதியை எதிர்பார்க்கவில்லை ; சர்வதேச மாநாட்டுக்கு அணிதிரளுங்கள் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அழைப்பு!

எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ். தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி அழைப்பு விடுத்தார். நேற்று (19)...

அரச தரப்பு முஸ்லிம் எம்.பி.க்களுக்கு வாய் இல்லை!!

கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் மிக மோசமான இனவாதி என்றும், முதலில் கருணாவுடன் இருந்ததுடன் பின்னர் ரணிலுடன் இருந்தவர் என்றும் குற்றம்சாட்டிய சுயேச்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான அர்ச்சுனா இராமநாதன், தான் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்றவுடன் முஸ்லிம் மக்களுக்காகக் குடியேற்ற ஒதுக்கப்பட்ட பொம்மைவெளி, காக்கைத்தீவு பகுதிகளை அபிவிருத்தி...

செப்டெம்பர் முதல் ஒன்லைனில் மட்டுமே தண்டப்பணம்!

அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (19) நடைபெற்ற டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2026ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் நேற்றையதினம் (19)வாக்குமூலம் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகளவில் பங்கேற்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து, காணாமல்...

பளையில் நடப்பது என்ன? – போலிச் செய்தியால் வௌிவந்த உண்மை!!

பளை பகுதியில் தமீழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வதந்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த விடயங்களை பொலிஸார் அறிக்கை ஒன்றின் ஊடாக வௌிப்படுத்தியுள்ளனர். அதன்படி, குறித்த காணொளிக்கு அமைய, அந்த இடமானது கிளிநொச்சி பொலிஸ்...

ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை!!

ஈரானின் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு ஒரு புதிய பாரிய நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் நேற்று( 19) தெரிவித்தார். உடனடியான இராஜதந்திர அல்லது இராணுவ தீர்வுகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாத...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!!

இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நாடு பூராகவும் உள்ள 48 மதிப்பீட்டு நிலையங்களில் இன்று ஆரம்பமாகின்றன. இப்பணிகள் 380 மதிப்பீட்டுச் சபைகளின் கீழ் முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இவற்றில், சிங்கள மொழிமூல பரீட்சையின் முதலாவது மற்றும் இரண்டாவது விடைத்தாள்களை மதிப்பீடு...

வடிகாலில் கழிவுநீரை வெளியேற்றிய உணவகம் மீது பிரதேச சபை நடவடிக்கை!!!

பருத்தித்துறை வீதி, கல்வியங்காட்டு சந்தியில் காணப்படும் வெள்ளநீர் வடிகால் சுகாதார சீர்கேடான நிலையில் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் தலைமையிலான சபை அணியினர் குறித்த பகுதிக்கு நேரில் விஜயம் மேற்கொண்டனர். மிகக் கடுமையான வெப்பமான காலநிலை நிலவிய நிலையில், குறித்த பகுதியில் அமைந்திருந்த ஏனைய வடிகால்கள் நீரின்றி காணப்பட்ட...

யாழில் அதிரடி நடவடிக்கை: டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டறியப்பட்ட வீடுகளுக்கு தலா 10,000 தண்டம்!

திருநெல்வேலி பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குற்றச்சாட்டில் 08 பேருக்கு 80ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி பகுதியில் கடந்த 3ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரையில் பொது சுகாதார பரிசோதகரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கள தரிசிப்புக்களின் போது, டெங்கு நுளம்பு பரவ கூடிய...

கோண்டாவிலில் இயங்கிய இலங்கையின் பிரபல பல்பொருள் அங்காடியின் வியாபார உரிமம் இரத்து!!

இலங்கையின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளையின் வியாபார உரிமத்தை இரத்து செய்யுமாறு யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி இருந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகரால் அது கண்டறியப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, காலாவதியான...

மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்!!

பிள்ளைகளைத் தேடும் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (Office on Missing Persons –...

செம்மணி அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு – நேற்றும் 10 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!!

செம்மணி மனித புதைகுழியில் கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன்கிழமை (19) இறுதி நாள் அகழ்வு பணிகள் நடைபெறவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (18) முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க...

காணிகளை விடுவிக்க கோரி பலாலியில் போராடியவர்களுக்கு எதிராக வழக்கு!!

வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தபட்டதாக கூறி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளார். பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்ரன் சுதாகர், வேலணை பிரதேச சபை உறுப்பினர்...

யாழில்.கத்திமுனையில் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றத்தில் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பிறவுண் வீதியில் உள்ள தனது வீட்டினுள் 14ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய இளைஞன் ஒருவர் முயன்றதாக பெண்ணொருவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாண...

யாழில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் மரணம்!

யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தார். இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை எழுதும்போது மயக்கம் ஏற்பட்டது. இதன்போது அவரது...

“நீதியின் ஓலம்” சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவடைந்த பேரணி!

''சர்வதேச விசாரணை தேவை'' என்ற கோரிக்கையை முன்வைத்து, தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (17) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. நேற்று காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணியாக ஆரம்பமான போராட்டம், வடக்கு – கிழக்கைச் சேர்ந்த மக்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து ஆஸ்பத்திரி...

செம்மணியில் இதுவரை 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 54 ஆவது நாளான நேற்று (17) 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 108 நாள்...

முருகனின் நகைகளை திருடிய ஐயருக்கு வெளிநாட்டு பயணத் தடை!

தோட்டத்துறை (ஸ்லேவ் ஐலண்ட்) அருள்மிகு லெட்சுமி முருகன் கோயிலுக்குச் சொந்தமான, சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அக்கோயிலின் பிரதம குருவுக்குக் கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடையை விதித்துள்ளது. சதீஸ்வர குருக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன்,...
Loading posts...

All posts loaded

No more posts