கொழும்புத்துறை இறங்குதுறையை நவீனமயமாக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் சந்திரசேகர்!!

கொழும்புத்துறை இறங்குதுறையை அகலப்படுத்தும் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். கடற்றொழிலாளர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு, இறங்குதுறை வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் தற்போதைய பணிநிலை மற்றும் எதிர்கால கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம்...

கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நகர்கோவில் மக்களுக்கான எச்சரிக்கை!!

இன்று (ஆகஸ்ட் 28) நண்பகல் 12:11 மணிக்கு கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நகர்கோவில் ஆகிய இடங்களுக்கு மேலாகச் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளது. சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...
Ad Widget

வடக்கு ரயில் போக்குவரத்தில் பாதிப்பு!!

பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயில் பொதுஹெர ரயில் நிலையத்தில் வைத்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், தடங்கல் நிமித்தம், பொதுஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகவே பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

தனியார் மற்றும் அரச பேருந்துகள் போட்டி, உயர்தர மாணவர்கள் பாதிப்பு – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!

பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கோவில் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடாத்தி வருகின்றது. இதில் நகர...

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் விபத்து!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (25) விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சாரதி மற்றும் உடன் பயணித்த இரு ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும், விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த மருந்துகளை பாதுகாப்பாக இறக்கி, மற்றுமொரு...

யாழ்ப்பாணத்தில் களவாடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் களவாடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பகுதியில் கடந்த 9ஆம் திகதி 17 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்த...

கடற்படையினரின் நெகிழ்ச்சியூட்டும் மனிதாபிமான நடவடிக்கை!!

நாட்டில் நிலவும் கடுமையான வெப்பமான கால நிலைமை காரணமாக நெடுந்தீவில் நீர்நிலைகள் வற்றிப்போயுள்ள நிலையில், அங்குள்ள குதிரைகளுக்குக் குடிநீர் வழங்கும் பணியை இலங்கை கடற்படை தொடங்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய அம்சமான நெடுந்தீவு மட்டக் குதிரைகள் உள்ளிட்ட நெடுந்தீவில் உள்ள விலங்குகள் நீர் தட்டுப்பாடு காரணமாக குடிக்க நீரின்றி தவித்து...

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் கைலாயபிள்ளை பிரகாஸ் தெரிவித்துள்ளார். 36 அடி நீர்கொள்ளவைக் கொண்ட இரணைமடுக்குளத்தின் நீர் மட்டமானது தற்போது 19 அடியாக காணப்படுகின்றது....

2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு!!

2027ஆம் ஆண்டிற்குரிய பாடசாலைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். இதற்கமைய, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை 2027 ஓகஸ்ட் 01ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2027 ஓகஸ்ட் 03 முதல் 2027 ஓகஸ்ட் 28 வரை நடைபெறும். பொதுத் தகவல் தொழில்நுட்பப்...

தொலைந்த நகை அதே பஸ்ஸில் மீட்கப்பட்டது! இ.போ.ச சாரதி, நடத்துநர் நேர்மைக்குக் குவியும் பாராட்டு!

இ.போ.ச. பஸ்ஸில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும் , உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த தினத்தன்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை செல்லும் 767 வழித்தட ( 4241...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் உஷ்ண எச்சரிக்கை!!

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு, மொணராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்...

யாழ். மாவட்ட செயலக்கத்தின் முக்கிய அறிவிப்பு….

பண்டத்தரிப்பு பிரான்பற்று கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நேற்று இரவு (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது, வாணவேடிக்கையால் ஏற்பட்ட புகை மற்றும் ஒளி கூடிய மின் விளக்குகளின் பயன்பாடு காரணமாக பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை 127 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளதாக கண் வைத்திய...

யாழில் திருவிழா லேசர் வெளிச்சத்தால் நூற்றுக்கணக்கானோருக்கு கண் பாதிப்பு!!

பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயத்தில் நேற்றைய உற்சவத்தின்போது அதிக வானவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு ஆலயத்தில் இசை நிகழ்வின்போது அதிக சக்திகொண்ட லேசர் லைற் வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன இதனால் கண்ணில் பாதிப்படைந்த...

வலி. தெற்குக்கு பிரதேச சபைக்கு காலக்கெடு விதித்துள்ள வலி.வடக்கு பிரதேச சபை!!

வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை மீள அள்ள வேண்டும் என காலக்கெடு விதித்து வலி. வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை...

நெடுந்தீவுக்கு அதிசொகுசு படகு!!

சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின்...

இலங்கை போக்குவரத்து சபையில் 1,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்!

நாடு முழுவதிலும் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) டிப்போக்களில் ஒப்பந்த அடிப்படையில் சாரதி மற்றும் நடத்துனர் பதவிகளிலுள்ள 1,037 வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் கீழ் 788 சாரதி வெற்றிடங்களும் 249 நடத்துனர் வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதுடன், அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்: சாரதி பதவி:...

உயர் கல்வி வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!!

உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு மாணவர்களுக்குத் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அரசாங்கத்தினால் வட்டி இல்லாக் கடன் வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கடனுக்காக அதிகபட்சமாக 15 லட்சம் ரூபா வரை வழங்கப்படும் என்பதுடன், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 7 ஆண்டுகள் அவகாசம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...

கணிசமான பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை!!

பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவிட்டு வெளியேறும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையிலான பெரும்பான்மையினர் ஏதேனுமொரு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே என்பது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவது தொடர்பான முழு நாடும் ஒன்றாக தேசிய இயக்கத்தின்...

வடக்கு, கிழக்கு காணிகளை விரைவில் மக்களுக்கு விடுவிப்பது குறித்து விசேட கலந்துரையாடல்!

கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக...

யாழ் இந்துக் கல்லூரி மற்றும் அதிபர் தொடர்பான அவதூறான காணொளியை அகற்ற நீதிமன்றம் கட்டளை

(more…)
Loading posts...

All posts loaded

No more posts