- Monday
- July 20th, 2026
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் எதிர்கால பணி வெற்றிடங்களுக்கு தகுதியான நபர்களைப் பரிந்துரைப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதன்படி, அரசியலமைப்பு சபை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான பரிந்துரை’ என்ற விரைவு இணைப்பின் கீழ் இலங்கை பாராளுமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தின்படி விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட வேண்டும். பூர்த்தி...
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணைக்குழு ஜப்பானின் 'டகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ்' நிறுவனம் உருவாக்கிய 'QDENGA' என்ற டெங்கு தடுப்பூசிக்குச் சந்தை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் தடுப்பூசியை விற்பனை செய்வதற்கான இந்த சந்தை அனுமதி இந்தியாவிலுள்ள தகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 4 முதல் 60...
பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க, அத்துடன் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்டோர் இந்த...
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள மங்களாம்பட்டியில், மழையை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோதத் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அந்த மரபுப்படி, இந்த ஆண்டிற்கான 'ஆடிப் படையல்' திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி, கிராம மக்கள் பலரும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக, மதுரைவீரன் சுவாமிக்குச் சேவல்களைப்...
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார், பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, 1997 ஆம்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புங்குடுதீவு ஆலடி சந்தியில் இருந்து நேற்று காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஒரிரு நாட்களுக்கு முன்னர் புங்குடுதீவு மீனவர்கள் நெடுந்தீவிற்கு அண்மித்த பகுதியில் நண்டு வலைகளை வீசிவிட்டு காத்திருந்த போது, இந்திய மீனவர்களின் அத்துமீறி நுழைந்து மீனவர்களின் வலைகளை...
குறிப்பிட்ட வருமான வரிப் பொறுப்புகளைத் திட்டமிட்டு நிறைவேற்றத் தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் திருத்தச் சட்டத்தின் மூலம், அதற்கான அதிகாரம் உள்நாட்டு இறைவரித் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. வருமான...
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்கள் மேற்காசியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கட்கிழமை (20) மசகு எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை வழியிலான எரிபொருள் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகளே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்....
பல தடைகளை தாண்டி முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ஜனநாயகன்...
நடிகை ஜோதிகா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்த போவதாகவும் கூறப்பட்டது. அவர் நடித்த ஹிந்தி படத்திற்க்கு தேசிய விருது தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜ்குமார் ராவ் உடன் ஜோதிகா நடித்து இருந்த ஸ்ரீகாந்த் என்ற படம் சிறந்த ஹிந்தி படமாக விருது பெறுகிறது....
ரயில் பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். நேற்று (19) முற்பகல் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிய ரயில் பயணித்தின் போது குறித்த யுவதி அம்பேவளை பகுதியில் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போதே, அதிலிருந்து தவறி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான யுவதி உள்ளிட்ட...
செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (19) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன. நேற்றைய அகழ்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டன. இதன்மூலம், செம்மணி மனித புதைகுழி அகழ்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 446 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு...
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 2 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக...
வட ஈராக்கில் ஈரான் நடத்திய தாக்குதலில் தமது படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானிய தாக்குதல் ஆளில்லா விமானம் ஒன்றில் இருந்த வெடிக்காத வெடிபொருளை கட்டுப்பாடான முறையில் வெடிக்கச் செய்த நடவடிக்கையின் போதே குறித்த அமெரிக்க வீரர் கொல்லப்பட்டதாகவும், இதில் இரண்டாவது படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம்...
23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சேம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சேம்பியன் ஆர்ஜென்டினாவும், முன்னாள் சேம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின. 4-வது முறையாக கிண்ணத்தை வெல்லும்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் லோர்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா, தமது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் இருந்த சூழலில், கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று (19) நடைபெற்றது. கடைசி நேரத்தில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள்...
எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில் நீக்குவதற்கு எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளுக்கான ஸ்திரத்தன்மை இன்னமும் இல்லாமை காரணமாக, எரிபொருள் QR நடைமுறையை மேலும் தொடரவுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். QR நடைமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள்...
லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சூதாட்ட மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நடைபெறும் 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின்...
வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இன்று (17) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டத்தின்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம்...
Loading posts...
All posts loaded
No more posts
