வலி வடக்கு காணி விடுவிப்பு – இம்மாத இறுதியில்!!

யாழ் வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகள் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடத்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி...

ETF, EPF நிதிகளை மத்திய வங்கியிடம் இருந்து பிரிப்பதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய நிதியங்களில் முக்கிய இடத்தைப் வகிக்கும் இலங்கையின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதி ஆகியவற்றை இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி, மூவர் கொண்ட குழுவிடம் ஒப்படைப்பதற்கு எதிராகச் சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக நேற்று புதன்கிழமை (02)...
Ad Widget

விடுதலைப் புலிகள் முகாம் புரளி பரப்பியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான முகாம் ஒன்று பளைப் பாதுகாப்புக் காட்டில் உள்ளதாகப் போலியான செய்தியைப் பரப்பியதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேகர, புதன்கிழமை (02) அன்று உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பில் மேலதிக...

பரீட்சை பெறுபேறு – பிள்ளைகளை துன்புறுத்தினால் சட்ட நடவடிக்கை!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டிப்பது அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு அந்த அறிக்கை ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பரீட்சைப்...

மீன் விலை உயர்வுக்கு எல் நினோ காரணமா??

எல் நினோ (El Niño) தாக்கத்தின் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள், இலங்கையின் கடல் சூழலியல் அமைப்பு, மீன்வளம் மற்றும் மீன்பிடித் தொழில்துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே மதிப்பிடுவதற்காக, விரிவான தரவு பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய தொடர் ஆய்வுகளை தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (NARA) ஆரம்பித்துள்ளது. இந்த ஆய்வுப் பணிகள்,...

இலங்கை இலகு வெற்றி!! சமரி அத்தபத்து சாதனை!!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசிய மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (2) நடைபெற்ற போட்டியில் இந்தோனேசிய மகளிர் அணியை 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இலகுவான வெற்றியைப் பெற்றது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணி நிர்ணயித்த 125 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை...

யாழ் மாணவன் சாதனை!!

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர், தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேநேரம் சிங்கள...

முதியோர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!!

2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ்...

எல்-நினோ தாக்கத்தினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம்

எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் 4ஆவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இதன் போது...

ஓடும் ரயிலில் விளக்கேற்றி பூஜை; பயணி அதிரடி கைது!!

ஓடும் ரயிலின் ஏ.சி. பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த பயணி ஒருவரை ரயில்வே பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் கரீபா (வயது55). இவர் டெல்லியில் இருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்த 'ஹசரத் நிஜாமுதீன்-மைசூரு எக்ஸ்பிரஸ்' ரயிலின் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். ரயில்...

கோர பஸ் விபத்தில் 16 பேர் பலி!!

எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. தஹாப்-நுவைபா வீதியில் அல்-சாடா பகுதிக்கு முன்னதாக நுவைபா நோக்கிப் பயணித்தபோதே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும்...

ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 7 நவீன பேருந்துகள்!!

ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யோகோஹாமா நகர மக்களால் கூட்டாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த ஏழு புதிய பேருந்துகளையும் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு,...

வெளியாகிறது தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு!

2026 ஆம் ஆண்டுக்கான தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும்-05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென இன்று (02.09.2026) அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து விடைத்தாள் மதிப்பெண்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் இறுதிக்கட்ட ஆவணச் சரிபார்ப்பு மற்றும் நிர்வாகப்...

யாழ். பல்கலையில் அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடா? – பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு!

யாழ். பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது விடயம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட ஊழியர்கள் -...

ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல தடை!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 முக்கியக் ஆலயங்களுக்குள் ஸ்மார்ட் மொபைல்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தடை விதித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் செவ்வாய்க்கிழமை (01) முதல் அமுலுக்கு வந்துள்ளன. ஸ்மார்ட் மொபைல்களை எடுத்து வரும் பக்தர்கள் அவற்றை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒப்படைத்து, ஒரு போனுக்கு 5 ரூபாய் கட்டணம்...

அமெரிக்காவில் பள்ளிவாசல் தாக்குதலை நேரலை செய்த 17 வயது சிறுமி மீது கொலைக் குற்றம்சாட்டு

அமெரிக்காவின் சந்தியாகோ நகரிலுள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்த சம்பவத்தை இணையத்தில் நேரலை செய்வதற்கு உதவியதாகக் கூறப்படும் 17 வயது சிறுமி மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மே 18ஆம் திகதி சந்தியாகோ இஸ்லாமிய மையத்தில் 17 மற்றும் 18...

யாழ் ஊடகவியலாளரிடம் விளக்கம் கோரியுள்ள அரச ஊடகம் – தேசிய மக்கள் சக்தியினர் அழுத்தமா ?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் சிலரால் குறித்த ஊடகவியலாளர் பணியாற்றும் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த ஊடகவியலாளரிடம்...

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனம் தெரியாதோரால் இடிப்பு!!

தந்தை செல்வாவின் நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இனம் தெரியாத நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுச் சேதமாக்கப்பட்டுள்ளது. வல்லலை - அராலி வீதியில் அமைந்துள்ள தென்னிந்தியத் திருச்சபை இடுகாட்டில் (தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. போருக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை ஒத்த வடிவில், போர் முடிவடைந்த பின்னர்...

தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடினார். அப்போது தமிழ் சினிமாவில் அவருக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் யார் என்ற கேள்விக்கு, எந்தவித தயக்கமுமின்றி நடிகர் தனுஷின் பெயரை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின் போது, "தமிழ் சினிமாவில் உங்களின்...

74 ஆண்டு கால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆவது நாளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 36 வயதான முகமது அப்பாஸ், இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் தனது பெயரை கௌரவப் பலகையில் (Honours Board) பதிவு செய்துள்ளார். இப்போட்டியில் அவர்...
Loading posts...

All posts loaded

No more posts