Ad Widget

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி; வழக்கு ஒத்திவைப்பு

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி, அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு...

முல்லைத் தீவில் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றம் அதிகரிப்பு!

முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு அங்கு பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்படுவதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்குடியிருப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை ஆட்சியாளர்கள் அபகரித்து கொண்டிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின்...
Ad Widget

யாழில் காணி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக தனது உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய குறித்த...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை ; மேலுமொரு சந்தேகநபர் கைது

வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ,வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து...

சம்பந்தனுக்கு மூன்று மாத விடுமுறை!

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குமாறு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நேற்றையதினம் (25) நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிரேரணையை உறுதிப்படுத்தினார். 91 வயதாகும் சம்பந்தன் தற்போது நோயி நிலையால்...

முறிகண்டியில் விபத்து: இராணுவ வீரரொருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் முறிகண்டி வசந்தநகர் சந்தியின் ஏ9 வீதியில் இடம்பெற்றிருந்தது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே...

வடக்கு ஆளுநர் செயலகத்தில் கைகலப்பு – ஒருவர் வைத்தியசாலையில்

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வடமாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தின் அலுவலக பணியாளர் ஒருவருடன், துப்பரவுப் பணியில் ஈடுபடும் நபர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட ஆளுநர் செயலக பணியாளர் யாழ்ப்பாணம் பொலிஸ்...

ரஷ்யா – உக்ரைன் போர் – இரகசிய தகவலொன்றை அம்பலப்படுத்திய அமெரிக்கா

ரஷ்ய-உக்ரைன் போரை சூடுபடுத்தும் வகையில் அமெரிக்கா ஒரு சிறப்புத் தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ரகசியமாக வழங்கியதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மார்ச் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் அங்கீகரிக்கப்பட்ட $300 மில்லியன் டொலர்கள் (£240m) உதவிப் பொதியின் ஒரு பகுதியாகவும்...

வட மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன இன்று (24) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த காலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றியவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில், அப்பதவிக்கான பொறுப்புக்களை வைத்தியர் சமன் பத்திரன இன்றைய தினம் ஏற்றுள்ளார். தமது செயற்பாடுகள் தொடர்பாக வட மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

இலங்கை – இந்தியா இடையே பாலம் அமைப்பதற்கான பணி தொடங்கியது!

இலங்கை – இந்தியா இடையே பாலம் அமைப்பதற்கான பணியை நாம் ஆரம்பித்துள்ளோம். எங்களின் முயற்சி இரு நாடுகளின் வளர்ச்சியையும் வலுவூட்டும். இது நிச்சயம் ஒரு ‘கேம் சேஞ்சராக’ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா. இராமாயண பாதை திட்டம் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்...

யாழில் போதைப் பொருள் கொடுத்து பெண் வன்புணர்வு!

யாழில் கும்பலொன்று பெண்ணொருவருக்கு போதைப் பொருள் கொடுத்து அவரை தொடர்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. குறித்த பெண் தனது பெற்றோரை இழந்த நிலையில் தனது சகோதரனின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அப்பெண் தனிமையில் இருந்துள்ள வேளை...

வடககில் அதிகரித்த வெப்பநிலை நிலவும்!!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள்!! புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் கோரிக்கை!!

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்....

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் மோசடி : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஒருநாள் கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் இலஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா குடியகல்வு குடிவரவுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்காக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் தினமும் அதிகளவில் வருகை...

கால்நடைகளைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கவும் – வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதைத் தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையைக் கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகின்றமையை கருத்திற்கொண்டு ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். கால்நடைகளை வளர்ப்போர் கட்டாயமாகப் பதிவு செய்ய...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்துமாறு சிவில் சமூகம் வலியுறுத்தல்!!

எதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை - 04 மணியளவில் சிவில் -...

யாழ்.பல்கலைகழக நிதியாளருக்கு எதிராக சிரேஷ்ட விரிவுரையாளர் முறைப்பாடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி சயந்தன், பல்கலைக் கழகச் சட்டத்துக்கு விரோதமான முறையில் நிதியாளர் தனது சம்பளத்தை நிறுத்தியதனால் தனது வாழ்வாதாரம் சவாலுக்குட்டபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஏழாண்டு விடுமுறையை நிறைவு செய்து கொண்டு குறிப்பிட்ட திகதியில்...

கோண்டாவிலில் தனியார் பேருந்து நடத்துனர் மீது கத்திக்குத்து!!

யாழ்ப்பாணத்தில் இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் மதியம் நடைபெற்றது. இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் நேற்று முன்தினம் (20) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் இதனை...

ஊர்காவற்றுறையில் நடைபவணி!!

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப்பணிக்காக ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து நேற்று மாபெரும் நடைபவணியொன்றை முன்னெடுத்திருந்தது. குறித்த நடைபவணியில் வடமாகாண பிராந்திய சுகாதார பணிமனை ஊழியர்களும், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை ஊழியர்களும் கலந்துகொண்டிருந்தனர். மேலும் இந் நடைபவணியானது யாழ் போதனா வைத்தியசாலையில் காலை 6 மணியளவில் ஆரம்பமாகி பண்ணை வீதி...

யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்!!

தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று...
Loading posts...

All posts loaded

No more posts