- Thursday
- February 26th, 2026
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்வதற்கு யாழ்ப்பாண தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் வருமாறு: கடந்த 07 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தின் 06 ஆம் இலக்க வாயிலுக்கு முன்பாக நிறுத்தி...
மண்டைதீவு பகுதியில் நடைபெற்று வந்த சர்வதேச கிரிக்கெட் மைதான மற்றும் விளையாட்டு வளாகம் நிர்மாணப் பணிகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. 48 ஏக்கர் பகுதியை உள்ளடக்கிய இந்த திட்டம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வரவில்லை என்றாலும், சுற்றுச்சூழல் அனுமதியின்றி நிலத்தை சமப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ லங்கா...
மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இழுத்தடிப்பு செய்து வருவதனால் , இம்முறையும் திருவிழா செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் அப்பகுதிகள்...
சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை தாங்கிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அதனைத் தரையிறக்கும் பணிகள் நேற்றே ஆரம்பிக்கப்பட்டன. மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள் எதிர்வரும் 25 மற்றும் 28ஆம் திகதிகளில்...
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) குறித்த போராட்டம் நடைபெற்றது. அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை தாம் வழி மறித்ததாகவும், அதன்போது வாகனத்தை நிறுத்தாது சென்றமையால், வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி...
மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளது.சுகாதாரத்துக்கு பவானந்தாராஜா, கல்விக்கு ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரத்துக்கு ரஜீவன், உள்ளுராட்சிமன்றங்களுக்கு இளங்குமரன், விவசாயம் மற்றும் காணிக்கு திலகநாதன் என்ற அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண நிழல் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இது முதுகெலும்பில்லாத கேவலமானதொரு செயற்பாடு.மாகாண சபைத்...
எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை இருக்காது எனவும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. கடந்த 17 மற்றும் 18ஆம் திகதிகளில் 284,000 வீட்டு பாவணைக்கான எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை (19) முதல் சனிக்கிழமை வரை...
நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19)அதிகாலை குறித்த 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் முற்பகல் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினரால் கையளிக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் குறித்த நபர்களையும் படகுகளையும் முன்னிலைப்படுத்தவுள்ளதாக...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. பட்டமளிப்பு விழா நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு அண்மையில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா...
மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம். பி. என். எம். விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் புதன்கிழமை (18) மாவட்ட செயலக அரசாங்க அதிபர்...
வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியாச் சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர்,...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக...
வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார். அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே, இத்தீர்மானம் எட்டப்பட்டது. தற்போது முகாமைத்துவ...
யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் பெண் போராளி ஒருவர் , கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப் பெண்மணி, தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில்...
காங்கேசன்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசந்துறை கடற்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொண்ட விசேட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது காங்கேசன்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிக்குள் இரு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த படகோட்டிகள் உள்ளிட்ட 25 தொழிலாளர்களையும் கடற்படையினர் செய்தனர். கைது செய்யப்பட்ட...
யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்....
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து "புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்" என்ற தொனிப்பொருளில் இன்றையதினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பமாகிய குறித்த போராட்டம், திங்கட்கிழமை (16) யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும்...
நாளை (17) ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும் என ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர் விசேட மனநல மருத்துவர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். இன்றைய இரவில் நித்திரையைத் தவிர்த்துப் படிப்பதில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல என்றும், மத வழிபாடுகளில் ஈடுபட்டு மனதை அமைதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை...
வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் காணப்படுகின்ற காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவரை தொடர்புகொண்டு வினவியபோது இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) உறுப்பினர்கள் இன்று (16) எந்தவொரு வழக்குகளுக்காகவும் நாடளாவிய நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதை தவிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளனர். தலங்கம, அக்குரேகொடவில் அண்மையில் ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, நேற்று (15) நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. குறித்த துப்பாக்கிச் சூட்டின் தாக்கங்கள் குறித்து BASL...
Loading posts...
All posts loaded
No more posts
