முருகனின் நகைகளை திருடிய ஐயருக்கு வெளிநாட்டு பயணத் தடை!

தோட்டத்துறை (ஸ்லேவ் ஐலண்ட்) அருள்மிகு லெட்சுமி முருகன் கோயிலுக்குச் சொந்தமான, சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அக்கோயிலின் பிரதம குருவுக்குக் கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடையை விதித்துள்ளது. சதீஸ்வர குருக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன்,...

மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தின் பின்னரான காலப் பகுதியில் மருத்துவ முகாம்களை சென்னையில் நடாத்துவதற்கு யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் திட்டமிட்டுள்ளது.வருகின்ற டிசம்பர் 14ம் திகதியளவில் குழு பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இது பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதுடன், பொது மக்களின் உதவி கோரி யாழ்ப்பாண றோட்டறிக்கழகம் ஊடக...
Ad Widget

உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராசாவை அச்சுறுத்திய வவுனியா வலையத்திற்கு உட்பட்ட அதிபருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் இந்திரராசா தன்னை அச்சுறுத்தியதாக அவைத்தலைவர் மற்றும் அளுநருக்கு முறைப்படி அறிவித்தல் விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும்...

யாழ். இந்து பழைய மாணவர் 2005 அணியின் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி '2005 பழைய மாணவர்கள்' அணியினால் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை கடந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டது. (more…)

யாழில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு உதவிகளை செய்யும் முகமாக யாழ் மாவட்ட மக்களிடம் இருந்து சிவமானிட விடியற்கழகம் நிவாரணப்பொருட்களை சேகரித்து வருகின்றது.அவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்களை எதிர்வரும் புதன்கிழமை அங்கு கொண்டு (more…)

வரைகலை நிபுணர் ஆன்ரோ பீற்றர் இயற்கை எய்தினார்!

இந்தியாவை சேர்ந்த கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், CSE, SoftView நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும் கணினி வரைகலை நிபுணரும் தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆர்வலரும் பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆன்ரோ பீற்றர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். இறக்கும்போது இவருக்கு வயது 45. (more…)