இன்று முதல் பல்கலைக்கழகங்களில் ‘கறுப்பு வாரம்’ !!

இலங்கையின் அரசப் பல்கலைக்கழக அமைப்பில் நீடித்து வரும் கடுமையான பிரச்சினைகளுக்கு உடனடியாக முறையான தீர்வுகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த வாரத்தைக் ‘கறுப்பு வாரமாக’ பிரகடனப்படுத்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,...

உயர்தர பாடத்தொகுதியில் சட்டம், சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட புதிய பாடங்களை உள்ளடக்க திட்டம்!!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும்,12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம்...
Ad Widget

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இக்குழு அண்மையில் கூடியபோதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்போது 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு சமூக...

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப் படிப்புகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) குறித்த மாணவர்களின் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன....

வடக்கில் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை!!

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், இவ்வருடத்திற்குள் 50 வீத ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மேலும், பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கருவிகளைப் பழுதுபார்த்தல் போன்ற விடயங்களுக்கான நிதியும் மாகாண சபைகள் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாகாண சபைகள் கோரினால் மேலதிக நிதியையும்...

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்!

நாளை (09) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவிக்கையில், அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள் தொடர்பில் தமது சங்கம் கடந்த வாரம் முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார். அரசுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள்பரிசீலனை விண்ணப்பங்கள்!!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் நேற்று (07) முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியான பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கும், மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கும் வசதியாக இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுகிறது. பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, விடைத்தாள்களை மீள்மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள்...

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!! ஆளுநர்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுள்ளார். நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கௌரவ ஆளுநரிடம்...

அனைத்து பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை (07) ஆரம்பமாகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு அறிவித்துள்ள அறிவித்தலின் படி, அனைத்து பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பமாகி, டிசம்பர் 04...

பரீட்சை பெறுபேறு – பிள்ளைகளை துன்புறுத்தினால் சட்ட நடவடிக்கை!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டிப்பது அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு அந்த அறிக்கை ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பரீட்சைப்...

யாழ் மாணவன் சாதனை!!

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளை பெற்றுக் கொண்ட சுரேந்தர் சபின் தமிழ் மொழிமூலம் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர், தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். அதேநேரம் சிங்கள...

வெளியாகிறது தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு!

2026 ஆம் ஆண்டுக்கான தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும்-05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென இன்று (02.09.2026) அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து விடைத்தாள் மதிப்பெண்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் இறுதிக்கட்ட ஆவணச் சரிபார்ப்பு மற்றும் நிர்வாகப்...

தனியார் மற்றும் அரச பேருந்துகள் போட்டி, உயர்தர மாணவர்கள் பாதிப்பு – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!

பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கோவில் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடாத்தி வருகின்றது. இதில் நகர...

2027ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு!!

2027ஆம் ஆண்டிற்குரிய பாடசாலைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். இதற்கமைய, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை 2027 ஓகஸ்ட் 01ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2027 ஓகஸ்ட் 03 முதல் 2027 ஓகஸ்ட் 28 வரை நடைபெறும். பொதுத் தகவல் தொழில்நுட்பப்...

உயர் கல்வி வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!!

உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு மாணவர்களுக்குத் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அரசாங்கத்தினால் வட்டி இல்லாக் கடன் வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கடனுக்காக அதிகபட்சமாக 15 லட்சம் ரூபா வரை வழங்கப்படும் என்பதுடன், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 7 ஆண்டுகள் அவகாசம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...

கணிசமான பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை!!

பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவிட்டு வெளியேறும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையிலான பெரும்பான்மையினர் ஏதேனுமொரு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே என்பது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவது தொடர்பான முழு நாடும் ஒன்றாக தேசிய இயக்கத்தின்...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!!

இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நாடு பூராகவும் உள்ள 48 மதிப்பீட்டு நிலையங்களில் இன்று ஆரம்பமாகின்றன. இப்பணிகள் 380 மதிப்பீட்டுச் சபைகளின் கீழ் முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இவற்றில், சிங்கள மொழிமூல பரீட்சையின் முதலாவது மற்றும் இரண்டாவது விடைத்தாள்களை மதிப்பீடு...

8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மாயம்?

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகத் தொகுதி விநியோக மையங்களுக்கு உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் பெண் அதிகாரி ஒருவராலேயே இம்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இசுருபாய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசியவில்லை!! பரீட்சார்த்திகள் அச்சப்பட வேண்டாம்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் வழமை போல் அந்தப் பரீட்சை இடம்பெறும் எனவும் அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில்,...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சை நிறைவடைந்து ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பரீட்சை மையங்களில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைத்...
Loading posts...

All posts loaded

No more posts