- Friday
- September 26th, 2025

உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடுவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம், பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஆராயப்பட்டபோது துறைசார் அதிகாரி ஒருவரினால் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. இது தொடர்பில் குறித்த...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெட்டுப்புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை அறிய https://doenets.lk/examresults என்ற இணையத்தளத்தில் பார்வையிடவும். மாவட்ட வெட்டுப்புள்ளி விபரம் வருமாறு;

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. அந்தவகையில், இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959...

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வியாழக்கிழமை (21) வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று புதன்கிழமை...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (10) முதல் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை 2025.11.10 ஆம் திகதி முதல் 2025.12.05...

வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார். வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு நேற்று (03) வவுனியா...

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பான ஆசிரியர் பயிற்சி குறித்த கலந்துரையாடல் நேற்று (16) மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் பிரதமரின் பங்கேற்புடன் நடைபெற்றது. இதன்போது, 2026 முதல்...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலை இரத்து செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இன்று (04) பாராளுமன்றத்தில் இந்தக் கருத்தினை வௌியிட்டார். "புலமைப்பரிசிலை தற்போது இரத்து செய்ய திட்டமில்லை. புதிய சீர்திருத்தங்களின் தாக்கத்துடன் செய்யவே எதிர்பார்க்கிறோம்....

யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கதிரையால் தாக்கியதில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாடசாலையில் தரம் 08 கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலை நேரம் வகுப்பறையில் அமைதியின்றி காணப்பட்டுள்ளனர். அதனை அடுத்து அங்கு வந்த ஆசிரியர் வகுப்பறையில் இருந்த மாணவர்களின் கதிரையை தூக்கி மாணவர்கள் மீது மூர்க்கத்தனமாக...

மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு (Ministry...

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் அரசின் குறித்த நடவடிக்கைகளினால் ”தற்போது சுமார் 3 சதவீதமாக இருக்கும் ஆரம்பக் கல்வியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர்...

இந்த வருடத்திற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) ஆரம்பமாகியுள்ளது. கடந்த 14 ஆம் திகதி பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கடடமானது நிறைவடைந்திருந்தது. எவ்வாறெனினும், ரமழான் பண்டிகையை முன்னிட்டு இன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை, தற்போது சிறுவர்களுக்கு...

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களில் சிலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் போக்கு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. பெற்றோர்களின் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, பெற்றோர்-குழந்தை உறவுகள் குறைந்து வருவது இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 10 முதல் 19 வயது வரையிலான...

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தெளிவூட்டும் வகையில் கல்வியமைச்சின் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த போலிச் செய்தியில் கீழே குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் (2024 கல்வியாண்டுக்கான) இன்று திங்கட்கிழமை (17) ஆரம்பமாகியது. இந்த பரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி வரை 3,663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான தேசிய அடையாள அட்டை (NIC) விவரங்கள் தொடர்பான உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத விண்ணப்பதாரர்களுக்காக ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அடையாள அட்டை சரிபார்ப்பு கடிதங்கள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள், மார்ச் 15, 2025 சனிக்கிழமை காலை 8:30 மணி முதல்...

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் விடுமுறை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலாம் தவணையின் முதற்கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்பதுடன், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

மாணவர்கள் மீதான உளவியல் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், 2028 ஆம் ஆண்டளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக புதிய பரீட்சையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய புலமைப்பரிசில் பரீட்சை செயல்முறையை மறுபரிசீலனை செய்து சீர்திருத்தம் செய்ய அடுத்த ஆண்டு ஒரு நிபுணர் குழு...

சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான பென்சில்களில் சிறுவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பாடசாலைச் சிறுவர்கள் பயன்படுத்தும் பென்சில்கள் பல்வேறு வண்ணங்களில் கவர்ச்சிகரமான தோற்றத்தில் விற்கப்படுவதால் குழந்தைகள் அவற்றை வாங்குவதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர் எனவும், அவ்வாறான பென்சில்களில் அதிக அளவு இரசாயனங்கள் மற்றும் பாதரசம், ஆர்சனிக் மற்றும்...

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார். புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடியினால் பெறுபேறுகளை மதிப்பிடுவதை...

All posts loaded
No more posts