AI மூலம் பேஸ்புக்கில் பெண்களின் போலி கணக்குகள்: இலங்கையில் வெளிச்சத்திற்கு வந்த பாரிய மோசடி!!

இலங்கையில் பேஸ்புக் (Facebook) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பெண்களின் பெயர்களில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட ஏமாற்று மற்றும் பணமாக்கும் வலைப்பின்னல் ஆய்வொன்றின் மூலம் முதன்முறையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளரும் தகவல் ஆய்வாளருமான சஞ்சன ஹத்தொடுவ (Sanjana Hattotuwa) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கையில் இந்த அதிர்ச்சித்...

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை!

மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கான பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை...
Ad Widget

போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு வரும் போலி தகவல்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்துமாறு கோரி வரும் போலிச் செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறான செய்திகள் போக்குவரத்துப் பிரிவினரால் அனுப்பப்படுவதில்லை என பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், இத்தகைய போலி குறுஞ்செய்திகளுக்கு எவ்விதப் பதிலும் அளிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப்...

பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!

கடந்த 2025ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில், இலங்கையின் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய பிறப்புகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் அனைத்து வகையான சலுகைகளையும் வழங்கும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 2015ஆம்...

அனைத்து அரச ஊழியர்களுக்குமான அறிவித்தல்!!

அனைத்து அரச ஊழியர்களும் தங்களது அக்ரஹார (Agrahara) காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதற்கமைய, பயளாளிகள் அனைவரும் தங்களது விபரங்களை விரைவாக புதுப்பிக்குமாறு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் கலாநிதி விஷாகா வனசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். ஓய்வூதியத்திற்கு தகுதிபெற்ற அரச மற்றும் மாகாண அரச சேவையைச்...

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை!!

நாட்டின் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (13) திங்கட்கிழமை வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்' இன்றைய தினம் பகல் வேளையில் இந்த மாவட்டங்களின் சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும்...

பிள்ளைகளின் பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம்!!

சமகால சமூகத்தில் சிறுவர்களை இலக்கு வைத்து பல்வேறு நுணுக்கமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தலில், அறிமுகமில்லாத நபர்கள், சிறுவர்களைத் தன்பால் ஈர்ப்பதற்காக இனிப்புகள், சொக்லேட், ஐஸ்கிரீம் அல்லது பல்வேறு விளையாட்டுப் பொருட்களைக் காட்டி ஆசை காட்டுகிறார்கள். இத்தகைய உணவுப் பொருட்களில் போதைப்பொருட்களையோ...

திடீரென ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்!!

சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) தங்களும் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சட்டவிரோத சொத்துக் குவிப்புகள் தொடர்பான...

யாழில்.டெங்கு ஒழிப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக இம் மாதம் - ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தி வீடுகள், பாடசாலைகள், தனியார், உயர்கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முழுமையாக சிரமதானப்பணிகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல்...

TIN இலக்கம் பெறுவோருக்கு யாழ்ப்பாண உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் திரு. A. P. குணதுங்ஹ அவர்கள் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (06.07.2026) அரசாங்க அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர்பாக...

செல்லப் பிராணிகள் தொடர்பில் அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்

விசர் நாய்க்கடி நோயை இல்லாதொழித்தல் மற்றும் செல்லப் பிராணிகளை பதிவு செய்தல் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்குமான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்திற்கு, சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதனடிப்படையில் அதனை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்றில் முன்வைப்பதற்குமான யோசனை ஒன்றை பொது நிர்வாகம், மாகாண சபை...

பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோகம் துரிதம்!

இந்த ஆண்டு க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்குவதற்கு, ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர தேசிய அடையாள அட்டைகளை வழங்கத் திணைக்களம் எதிர்பார்ப்பதாகப் பணிப்பாளர் நாயகம் ஜகத் ஹேரத் தெரிவித்தார். சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

இலங்கை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள “Tell the IGP” திட்டம், ஏதேனும் சம்பவம் அல்லது இணையவழிச் செயல்பாடு தொடர்பான முறைப்பாடுகளை நேரடியாகக் பொலிஸ்மா அதிபரிடம் (IGP) சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது இத் திட்டம் 2026 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இச்சேவையின் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்கள் சிங்களம், தமிழ்...

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை!!

விசேட டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவில் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார். எனினும், எம்மைச் சூழவுள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டும் எனவும், அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ஜெய்ப்பூர் நிறுவனம் தொடர்ந்து இயங்க கொடையாளர்கள் உதவ வேண்டும்!” – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை

அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கிப்போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயற்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதற்கு கொடையுள்ளம் கொண்டவர்கள் தங்களின் உதவிகளை வழங்க முன்வர வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்...

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சூரிய மின் படலத்தை துண்டிக்க வேண்டுகோள்!!

மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக, நாளை (27) முதல் 29ஆம் திகதி வரை,கூரைகளின் மீது பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளைக் கொண்ட நுகர்வோர், அவற்றைச் செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (26) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,...

வரி செலுத்துநர் அடையாள இலக்கத்திற்கு காலவரையறை விதிக்கப்படவில்லை ; பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை!!

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக காலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தினமும் நிற்பது தொடர்பாக, அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று வியாழக்கிழமை (25) அவ் அலுவலகத்தின் பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு...

இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

இலங்கையில் இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களின் போதும், வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை பூசும் பாரம்பரிய நடைமுறையைச் சட்டப்பூர்வமாக முற்றாக நீக்குவதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தின் மூலம், தேர்தல் வாக்கெடுப்பு நிலையங்களின் பணிகள் மேலும் வினைத்திறனாக மாறும் என்றும், அரசுக்கான மேலதிக செலவுகள் பெருமளவில் சேமிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....

இன்று முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

தீவிரமாகப் பரவி வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்படும் தேசியத் திட்டத்திற்கு இணையாக, விசேட டெங்கு ஒழிப்பு கூட்டு நடவடிக்கை ஒன்றைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான ஊடகத் தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் நேற்று (23)...

டெங்கு அதி அவதான வலயங்களின் பட்டியல்!!

நாடு முழுவதும் நிலவும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையின்படி, மேல் மாகாணமே அதிகளவான பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பெரும்பாலான...
Loading posts...

All posts loaded

No more posts