QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில் நீக்குவதற்கு எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளுக்கான ஸ்திரத்தன்மை இன்னமும் இல்லாமை காரணமாக, எரிபொருள் QR நடைமுறையை மேலும் தொடரவுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். QR நடைமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள்...

சுகாதார துவாய்களுக்கு SLS தரச்சான்றிதழ் கட்டாயம்!!

SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச்செல்லல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் தடைசெய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச்...
Ad Widget

கொழும்பு மாநகர சபையால் பொழுதுபோக்கு வரி குறைப்பு

கொழும்பு மாநகர சபை (CMC), திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கான பொழுதுபோக்கு வரி விகிதங்களை குறைத்து புதிய வர்த்தமானி (Gazette) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள், கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டதுடன், வர்த்தமானி வெளியிடப்பட்டதன் மூலம் உடனடியாக அமுலுக்கு...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களை அடுத்து இவ்வாறு மசகு எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.25 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. இது 2 சதவீதத்திற்கும் மேலான அதிகரிப்பாகும். அதேநேரம்,...

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்று (09) காலை 6.00 மணி நிலவரப்படி WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.28 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.03 சதவீத அதிகரிப்பாகும். அத்துடன், பிரெண்ட் ரக...

அமெரிக்கத் தாக்குதலால் உலகச் சந்தையில் மீண்டும் எகிறிய கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று காலை 6.15 மணி நிலவரப்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.04 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 2.27 சதவீத வளர்ச்சியாகும். பிரெண்ட் (Brent) ரக...

நுகர்வுக்குப் பொருத்தமற்ற 4,250 தொன் சீனி கைப்பற்றல்: நால்வர் கைது!

பேலியகொடை - பெதியாகொடை பகுதியில் நுகர்வுக்குப் பொருத்தமற்ற 4,250 தொன் சீனித் தொகையுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, குறித்த சீனித் தொகை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, சுமார் 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான 85,000...

இலங்கை சுங்கத்தின் அபார சாதனை!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373 பில்லியன் ரூபாய் வரி வருவாய் வசூலித்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. முதல் ஆறு மாதங்களுக்கான வரி இலக்கை விட இது 22 சதவீதம் அதிகம் என்று அதன் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கூறினார். இந்த ஆண்டுக்கான வரி இலக்கு ரூ. 2,206.9 பில்லியன் ஆகும்....

ஹோர்முஸ் நீரிணையின் தாக்கம்: உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு!

ஒபெக் பிளஸ் (OPEC+) அமைப்பானது ஓகஸ்ட் மாதத்திற்கான கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது. [caption id="attachment_127561" align="aligncenter" width="760"] What is Brent Crude[/caption] மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் சீரடைந்து வருவதும் உலகளாவிய விநியோகம் அதிகரிக்க வழிவகுத்துள்ளதாகக்...

சீனி அடங்கிய திரவ உணவுகளுக்கான வர்ண குறியீட்டில் திருத்தம்!!

சீனி அடங்கிய திரவ உணவுகளுக்கான வர்ண குறியீட்டு லேபலிடும் உத்தரவுகளை திருத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸவினால் 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் 32ஆம் பிரிவின் கீழ் இந்த திருத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவை ஜூன் 23ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில்...

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு!!

பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. சாதாரண சேவையின் கீழான பேருந்து கட்டணத்தை 100 கிலோமீற்றருக்கும் குறைந்த பயணத்தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100...

‘மேல் நடுத்தர வருமான’ நாடாக இலங்கை! – உலக வங்கியின் புதிய தரவரிசை

கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துள்ள இலங்கை, தற்போது உலக வங்கியின் புதிய வகைப்படுத்தலில் 'மேல்-நடுத்தர வருமான' (Upper-middle Income) நாடாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 01 ஆம் திகதி வெளியிடப்படும் உலக வங்கியின் வருமானக் குழு வகைப்படுத்தலின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய...

பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைப்பு!!

நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 434 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும். அத்துடன் 407 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின்...

ஐபோன் 18 ப்ரோ விலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆப்பிளின் வரவிருக்கும் முதன்மை மாடலான ஐபோன் 18, அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு மிக அருகில் உள்ளது. அதற்கு முன்னதாக, தொடர்ந்து நிலவி வரும் "மெமரி விலை உயர்வு" சிக்கல்கள் காரணமாக, ஐபோன் 18 ப்ரோவின் விலைகள் முந்தைய ஐபோன் 17 ப்ரோ மாடல்களை விட அதிகமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மேக், மேக்புக்,...

போருக்கு முற்பட்ட நிலைமைக்கு மீண்டும் திரும்பும் எரிபொருள் நிலை!!

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போருக்கு முந்தைய நிலைக்கு எண்ணெய் விலை சரிவு கண்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே புரிந்துணர்பு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டு எண்ணெய் விநியோகத்தின் தீர்க்கமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை படிப்படியாக இயல்புநிலைக்கு மாறிவரும் நிலையிலேயே இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச குறியீடான பிரெண்ட் ரக மசகு எண்ணெய்...

கச்சா எண்ணெயின் விலையில் மாற்றம்!!

உலக சந்தையில் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை இன்று (25), 75 அமெரிக்க டொலரை விட குறைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று ஒரு பெரல் WTI எரிபொருளின் விலை 70.05 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. மேலும் Brent வகை பெரல் கச்சா எண்ணெயின் விலை 73.32 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. இதற்கிடையில்,...

வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை!

வவுனியாவின் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை நேற்று (23) மேற்கொண்டனர். இறைவரி திணைக்களத்தின் வருமான வரி அறவீட்டு அதிகாரிகள் தமது செயற்பாட்டை நாடு முழுவதும் முன்னெடுத்து வரி அறவீட்டு நடவடிக்கைகளை சீர் செய்தும் ஒழுங்கமைத்தும் வருகின்றனர். அதற்கமைவாக வவுனியாவிலும் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரி அறவீடு...

லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று புதன்கிழமை (07) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், லாஃப் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மாற்றியமைக்கப்பட்ட புதிய விலைகளாக, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 545 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 6,245 ரூபாவாகும். 5 கிலோகிராம் எடையுள்ள சிறிய ரக...

எரிவாயு விலைகள் நள்ளிரவு முதல் உயர்வு!!

உள்நாட்டு லிட்ரோ எரிவாயு விலைகள் நேற்று (5) நள்ளிரவு முதல் உயர்த்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 775 அதிகரித்து, புதிய விலை ரூ. 4765 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. . ஒரு 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 308 அதிகரித்து, அதன் புதிய...

சிமெந்து விலையும் அதிகரிப்பு!!!

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. சிமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபா முதல் 175 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கட்டுமானத் துறையில் மணல், கல் மற்றும் இரும்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும்...
Loading posts...

All posts loaded

No more posts