யாழில் மக்கள் போராட்டம்!

வலி.வடக்கு பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் (15) 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் போராட்டங்களை முன்னெடுத்தனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில்...

வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 37 ஆண்டுகள் ; மீள்குடியேற்ற கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்றினை அப்பகுதி மக்கள் முன்னெடுக்கவுள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச மக்கள்...
Ad Widget

உயர்பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி மயிலிட்டியில் கவனயீர்ப்பு நடவடிக்கை!!

வலி வடக்கு, மயிலிட்டிந் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை - தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்று (05) வெள்ளிக்கிழமை ஏழாவது வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு மக்களால் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி நடைபெற்ற கவனயீர்ப்பு...

யாழ்.ஒட்டகப்புலத்தில் 02 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி நேற்று திங்கட்கிழமை (23) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. வசாவிளான் கிழக்கு (J/244) பகுதியிலுள்ள ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில் இராணுவ பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்டள்ள காணிகளில் 02 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவத்தினர் விடுவித்துள்ளனர். குறித்த பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில் 234.8...

36 வருடங்களாக ஆலயத்திற்கு செல்ல அனுமதி கோரி காத்திருக்கும் மக்கள்!

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இழுத்தடிப்பு செய்து வருவதனால் , இம்முறையும் திருவிழா செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் அப்பகுதிகள்...

வலி வடக்கு காணி விடுவிப்பு ஏப்ரலுக்கு முன் சாத்தியம் – அமைச்சர் சந்திரசேகரன்

வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் காணப்படுகின்ற காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவரை தொடர்புகொண்டு வினவியபோது இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே...

வலி. வடக்கு பிரதேசத்தில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை!!

வலி. வடக்கு பிரதேசத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அந்த பகுதி மக்கள் துன்பதுயரங்களுடன் சுமார் 36 வருடங்களாக தமது சொந்த மண்ணில் வாழமுடியாமல் உள்ளனர் எனவே காணிகளை விடுவிக்க வேண்டும் என வலி வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார். வலி.வடக்கு பிரதேசசபை, மயிலிட்டி உப அலுவலகத்திற்குட்பட்ட மயிலிட்டி...

பலாலியில் காணி விடுவிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட கலந்துரையாடல்!!

பலாலிப் பிரதேசத்தில் உயர் பதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள காணிகளை அவற்றின் தனிப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு துரிதமாகக் கையளிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத்...

யாழில் விடுவிக்கப்படாமலிருக்கும் மக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்!

பல்வேறு காரணிகளால் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்தக் காணிகளிலேயே மீள் குடியேற்ற வேண்டும் என்ற கொள்கைகளுடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது . யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது...

வலி. வடக்கில் நான்காவது நாளாகவும் போராட்டம்!

வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி நேற்றைய தினம் (24) நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். நான்காவது நாளான நேற்றைய தினம் காணிக்கான தமது உறுதிகளை எடுத்து வந்து அதனை காண்பித்து போராட்டத்தினை முன்னெடுத்தனர். காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமை மயிலிட்டி சந்தியில்...

யாழ்.இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த காணிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத் யாழ் மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள், செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. வசாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும் மாங்கொல்லை பகுதியில் 15...

34 வருடங்களுக்கு பின்னர் வயாவிளான் சந்தி-தோலகட்டி சந்தி மக்கள் போக்குவரத்திற்காக அனுமதி!

யாழ் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி முதல் இருந்து அனுமதிக்கப்பட்டுள்ளது அதன்படி யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வயாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வயாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250...

விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி!

தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. தெல்லிப்பளை, ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளை திறக்குமாறும், இணைந்த வீதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பாதுகாப்பு பிரிவினரிடம் நேற்று (07) தெரிவித்தார். ஒட்டகப்புலம் பகுதிக்கு இன்று விஜயம் செய்த...

வலிகாமம் வடக்கில் முறியடிக்கப்பட்ட காணி அபகறிப்பு முயற்சி!!

வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை சுவீகரிக்க எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலிருந்து, 500 ஏக்கர் அளவிலான காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையிலேயே மக்கள் நேற்றையதினம் (12.02.2024) அதை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில், 500 ஏக்கர் நிலத்தை சுவீகரித்துத் தருமாறு விமான...

காணி விடுவிப்பு தொடர்பில் யாழ். வலி வடக்கு மக்கள் விசனம்!!

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும், குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ் வலிகாமம் வடக்கு பலாலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பலாலி கிராம மக்கள் தமது...

காணிகளை கையெற்க தயக்கம் காட்டும் பொது மக்கள்!

இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறையில் இராணுவத்தினிடமிருந்தும் கடற்படையினரிடமிருந்தும் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த...

வலி.வடக்கில் இராணுவத்திடமிருந்த காணி கையளிப்பு : மீள்குடியேறவுள்ள குடும்பங்களுக்கு உதவித் தொகை

வலி வடக்கில் பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி வெள்ளிக்கிழமை (3) உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதோடு , மீளக்குடியமர்த்தப்படும் 197 குடும்பங்களுக்கும் தேவையான உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து...

ஜனாதிபதியை சந்திப்பதற்கு வலிகாமம் வடக்கை சேர்ந்த 2500 குடும்பங்கள் ஆர்வம்!

காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வலிகாமம் வடக்கை சேர்ந்த 2500 குடும்பங்கள் விரும்புவதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். மயிலிட்டி பலாலியில் உள்ள தங்கள் பாரம்பரிய நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைளை எடுக்குமாறு கோருவதற்காகவே அவர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஆவலாக உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தன்னை நாங்கள்...

யாழ்ப்பாணத்தில் நலன்புரி முகாம்களில் வாழும் காணியில்லாத குடும்பங்களை மீளக் குடியமர்த்தல்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நலன்புரி முகாம்களில் வாழும் காணி இல்லாத 381 குடும்பங்களுக்கு பிரதம விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் 7 லட்சம் ரூபாய் 20 பேர்ச் காணித் துண்டை வழங்குவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணியில்லை என்பது அடையாளம்...

வடக்கில் 1,375 வீடுகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு- ஆளுநர் நடவடிக்கை

வடமாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக வடக்கு மாகாணத்திற்கென 1,375 வீடுகளை அமைப்பதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்படும் ஒரு குடும்பத்திற்கு ஒரு மில்லியன் பெறுமதியான வீடு வழங்கும் வகையில் பயனாளிகள் பட்டியல் தெரிவு நடைபெற்றுவருகிறது. 5 மாவட்ட செயலகங்களில் இருந்து 550 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட விபரங்கள் அடங்கிய பட்டியல்...
Loading posts...

All posts loaded

No more posts