Ad Widget

யாழ்ப்பாணத்தில் நலன்புரி முகாம்களில் வாழும் காணியில்லாத குடும்பங்களை மீளக் குடியமர்த்தல்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நலன்புரி முகாம்களில் வாழும் காணி இல்லாத 381 குடும்பங்களுக்கு பிரதம விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் 7 லட்சம் ரூபாய் 20 பேர்ச் காணித் துண்டை வழங்குவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணியில்லை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தங்களது பிறந்த இடத்துக்கு அண்மையாக காணி வழங்குமாறு அவர்கள் கேட்டுள்ளனர்.

ஆனாலும் அவர்கள் கோரும் இடங்களில் 7 லட்சம் ரூபாய் பெறுமதிக்கு 20 பேர்ச் காணித்துண்டைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதனால் குறித்த தொகைக்கு அதிகரிக்காமல் அரச விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டுக்கு அமைய 10 தொடக்கம் 20 பேர்ச் காணித்துண்டை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்து வழங்குவதற்கும் தொடர்ந்து வீடுகளை நிர்மாணிப்பதற்கான பொறிமுறையை தயாரித்து இடம்பெறந்த குடும்பங்களை துரிதமாக மீள்குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Related Posts