- Saturday
- August 8th, 2026
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் மிக வெற்றிகரமான அணியான ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) புதிய உரிமையாளர்களின் கைக்கு மாறியுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் (Zaheer Khan) மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரை இணை உரிமையாளர்களாகக் கொண்ட ஸ்டாக்ஹோமைத் தளமாகக் கொண்ட Anchor Sports AB நிறுவனம் இந்த...
2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதன் முதலாவது போட்டி வரும் ஓகஸ்ட் 15 முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி வரும் ஓகஸ்ட் 23...
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில், முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழங்கால் மூட்டு காயம் காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் காலி சர்வதேச அரங்கிலும் (ஆக.15-19), 2வது மற்றும்...
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் (34), சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சுமார் 16 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணத்துக்கு நெய்மர் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சான்டோஸ் கிளப் அணியின் போட்டிக்குப் பிறகு நெய்மர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,...
கிளாஸ்கோவில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் இலங்கையின் பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இறுதிப் போட்டியில் 46.84 மீற்றர் தூரத்திற்கு பரிதி வட்டத்தை எறிந்த பண்டார, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சர்வதேச அரங்கில் சிறப்பானதொரு திறமையை வெளிப்படுத்தியுள்ளதுடன் இது அவரது தனிப்பட்ட சிறந்த பதிவாகவும் அமைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக சிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் நேற்று (23) நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவரில்...
லங்கா பிரிமியர் லீக் தொடரின் நேற்று (23) இடம்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல் கிலன்ட்ஸ் அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய கோல் கிலன்ட்ஸ் அணி...
அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு அணி தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், ஈஸ்டர் பண்டிகை அன்று,...
23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சேம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சேம்பியன் ஆர்ஜென்டினாவும், முன்னாள் சேம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின. 4-வது முறையாக கிண்ணத்தை வெல்லும்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் லோர்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா, தமது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் இருந்த சூழலில், கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று (19) நடைபெற்றது. கடைசி நேரத்தில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள்...
லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சூதாட்ட மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நடைபெறும் 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின்...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார். SENA (South Africa, England, New Zealand & Australia) நாடுகளில் அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி அடித்த...
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், லங்கா பிறீமியர் லீக் (LPL) 2026 தொடரின் தொடக்க விழா இன்று (17) கொழும்பு SSC மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. கிரிக்கெட், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் தேசியப் பெருமிதம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின்...
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36 ஆவது போட்டி மாத்தறையில் இம் மாதம் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெற்றதற்கு அமைவாக, இவ் போட்டித் தொடரின் கபடி போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணியினர் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றமைக்காக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் நேற்றைய தினம்...
23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (16) மோதின. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் முதல்...
50 ஓவர் ஆடவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற இருக்கிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன. உலக கிண்ணத்தில் ஐசிசி சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றம் ஐசிசி-யின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 50 ஓவர் உலகக் கிண்ண தொடரில் 14 அணிகள் பங்குபெறும்....
இந்திய டி20 அணி கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ரோகித் சர்மா தலைமையிலும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் உலக கிண்ணங்களை அடுத்தடுத்து வென்று சாதனைப் படைத்தது. சூர்யகுமார் யாதவ் அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார். இவருக்கு முதல் இரண்டு...
வடக்கு மாகாண வரலாற்றில் முதற்தடவையாக, சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு இடையிலான 'மாகாண விளையாட்டுப் போட்டி - 2026' யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வடக்கு மாகாண நன்னடத்தைப் பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாபெரும் விளையாட்டு விழா, கடந்த (11.07.2026) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம் துரையப்பா...
சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பதவியிலிருந்து விலகியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் பரஸ்பர ஒப்புதலுடன் பிரிய முடிவு செய்துள்ளதாக சிஎஸ்கே அறிவித்துள்ளது. 2009 முதல் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட ப்ளெமிங் தலைமையில், சிஎஸ்கே 5 ஐபிஎல் கிண்ணங்கள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களை...
2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், நடுவர் ஜோவோ பெட்ரோவுடன் ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி கோபத்தின் உச்சத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (11) நடந்த போட்டியில் சுவிச்சர்லாந்து அணியின் வீரர்களின் எண்ணிக்கை 10-ஆக குறைக்கப்பட்டது. இருந்தபோதிலும், 90...
Loading posts...
All posts loaded
No more posts
