Ad Widget

கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வி! மனமுடைந்த இரு இளைஞர்கள் தற்கொலை!

ஹட்டன் மற்றும் ஹங்வெல்ல பிரதேசங்களில் நேற்று இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நேற்று இடம்பெற்ற உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் இறுதி போட்டியை பார்த்த பின்னரே அவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட பொழுதிலும், சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. (more…)

ஐ.சி.சி டுவென்டி டுவென்டியில் மேற்கிந்திய தீவுகள் சம்பியன்

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்து இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணியானது இலங்கை அணியைத் தோற்கடித்து உலக டுவென்டி டுவென்டி சம்பியன்களாகத் தெரிவானது. (more…)
Ad Widget

வடக்கு-தெற்கு மாபெரும் துடுப்பாட்ட சமர் ! யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி எதிர் கொழும்பு ஆனந்தாக்கல்லூரி

செப்ரம்பர் மாதம் 7ம் 8ம் திகதிகளில் இரு நாட்களைக் கொண்ட மாபெரும் துடுப்பாட்ட சமர் ஆனந்தாக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகிறது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், ஆனந்தாக் கல்லூரியின் புகழ்பெற்ற ஆசிரியரும், பகுதித் தலைவருமான திரு.சிவகுருநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக இச்சமர் இடம் பெறுகிறது. (more…)

யாழ். இந்து மாணவன் தேசிய மட்டத்திலான மெய்வல்லுனர் போட்டியில் புதிய சாதனை

தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் புதிய சாதனை ஒன்றினை நிலைநாட்டியுள்ளார்.கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2012ம் ஆண்டுக்கான தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான உயரம் பாய்தலில் யாழ். இந்துக்கல்லூரியைச் சேர்ந்த செல்வன் இரத்தினசிங்கம் செந்தூரன் 192 சென்ரி மீற்றர் உயரத்தைக் கடந்து இந்த புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்....

கல்கோவன்,றுக்ஸ்மன் அதிரடி யாழ்.இந்து வரலாற்று வெற்றி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும் இடையிலான ஒரு நாள் துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 433 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யூனியன் கல்லூரி அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. (more…)

யாழ். பிறிமியர் லீக் போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழகம் வெற்றி

யாழ். பிரிமியர் லீக் (ஜேபிஎல்) போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகமும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.முதலில் துடுப்பெடுத்தாடிய சென்ரலைட்ஸ் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து...

யாழ். இந்து மாணவன் தேசிய மட்டத்தில் புதிய சாதனை

தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுணர் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் புதிய சாதனை ஒன்றினை நிலைநாட்டியுள்ளார்.கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2012ம் ஆண்டுக்கான தேசிய கனிஷ்ட மெய்வல்லுணர் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான உயரம்பாய்தலில் யாழ். இந்துக்கல்லூரியைச் சேர்ந்த செல்வன் இரட்ணசிங்கம் செந்தூரன் 192 சென்ரி மீற்றர் உயரத்தைக் கடந்து இந்த புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார். (more…)

ஆரம்பமாகியது வடக்கின் மாபெரும் துடுப்பாட்ட போர்

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் புனித பரியோவான் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 106 ஆவது 03 நாள் கிரிக்கெட் போட்டி மத்திய கல்லூரி மைதானத்தில் 08.03.2012 வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியது.பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீரர்களை கைகுலுக்கி உற்சாகப்படுத்தி...

இந்துக்களின் போர் சமனிலையில் முடிவடைந்தது

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த யாழ் இந்துக் கல்லூரி அணியினர் இன்றைய நாளின் முதல் ஓவரிலேயே தமது 4வது விக்கட்டினை இழந்தனர். சிந்துஜன் 09 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்திருந்தார். (more…)

யாழ் இந்துக் கல்லூரியின் 32 ஆவது வீதியோட்டம்…

வெள்ளிக்கிழமை (03-02-2012) காலை 6.00 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரியின் 2012 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் முதல் நிகழ்வான 32ஆவது வீதியோட்டம்(5km) நடைபெற்றது. இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு, முதுநிலைப் பிரிவு எனும் இரு கட்டங்களாக நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற இளநிலைப் பிரிவு போட்டியை யாழ் இந்துக் கல்லூரியின் இங்கிலாந்து பழையமாணர்சங்கத்தலைவர் திரு..P.விவேகானந்தா ஆரம்பித்து...