Ad Widget

யாழில் ஆட்டோக்காரர்கள் அட்டகாசம்!! Taxi App சாரதி மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் ஆட்டோ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி நொதேன் வைத்தியசாலை அருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில்...

யாழ் – கொழும்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்ட வடக்கு ரயில் பாதை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத பாதையின் நவீனமயப்படுத்தல் காரணமாக குறித்த சேவை இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டங்களாக புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் முதல் ஓமந்த வரையிலான பகுதியின் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த...
Ad Widget

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு!

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள ஜனாதிபதியும் எதிர்பார்த்துள்ளார். அதன்படி, இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்குள் வரவு...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (29.06.2023) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது. செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் கடந்த சில கிழமைகளாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையானது 149,000 ரூபா என்ற நிலையிலேயே காணப்பட்டது. இவ்வாறான சூழலில் இன்று...

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) மீது கைவைக்கும் எண்ணம் இல்லை- மத்திய வங்கி ஆளுநர் தகவல்

ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 5 மில்லியன் வைப்பாளர்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பொன்று இன்றைய தினம் (29.06.2023)...

யாழில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இருவர் பலி

யாழ்ப்பாணம் - அராலி,வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்றைய தினம்(29.06.2023) மதியம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த, யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( வயது...

விபத்தில் சிக்கி முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் அமைச்சர்,  நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார். குறித்த வாகன விபத்து புத்தளத்தில் இன்று(29.06.2023) இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த விஜயகலா, புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர் பயணித்த வாகனம் மரமொன்றின் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. விஜயகலா மகேஸ்வரனுடன் வானில் பயணித்த மேலும் மூவர்...

உலகின் மிகப்பெரிய சொகுசு பயணக் கப்பல் தயார்

உலகின் மிகப்பெரிய சொகுசு பயணக் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த கப்பலின் பெயர் Icon of the Seas, 365 மீட்டர் (சுமார் 1,200 அடி) நீளமும் 2,50,800 டன் எடையும் கொண்டது. இந்த கப்பலில் உலகின் மிகப்பெரிய நீர் பூங்கா, 9 நீர்ச்சுழல்கள், 7 குளங்கள் மற்றும் உணவு மற்றும் பொழுதுபோக்கிற்காக நாற்பதுக்கும்...

ஆகஸ்ட் முதல் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட தடை -யாழ் அரச அதிபர்

யாழ்  மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ்  மாவட்ட  செயலர் ஆ,சிவபாலசுந்தரன் தெரிவித்தார், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில்  வாடகைக்கு செலுத்தும்  முச்சக்கர வண்டிகளுக்கு...

நெடுந்தீவு படுகொலைக்கு காரணம் பழைய பகை -கொலையாளி வாக்குமூலம்

நெடுந்தீவு, மாவிலிதுறைக்கு அண்மையில் 5 பேரை வெட்டிக் கொலை செய்த பிரதான சூத்திரதாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் ஜெர்மன் குடியுரிமையுள்ள 50 வயதானவர். நெடுந்தீவு மாவிலித்துறைக்கு எதிரில் உள்ள வீட்டில் நேற்று காலையில் 5 சடலங்களும், ஒருவர் குற்றுயிராகவும் மீட்கப்பட்டனர். வீட்டு உரிமையாளர் கார்த்திகேசு நாகசுந்தரி (74), நாகநாதி பாலசிங்கம் (75), அவரது...

அருண் சித்தார்த் கைது

  நேற்று முன்தினம்  (20) இரவு யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள லக்ஸ் புதுமுக ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி அதன் உரிமையாளரும்  ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்  யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளருமான யெயந்திரன் மீது சாணித்தண்ணி ஊற்றி தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அருண்சித்தார்த் உட்பட பலர் யாழ்.பொலிஸாரால்...

யாழ். நெடுந்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய ஐவரின் கொலை விவகாரம்! ஒருவர் கைது

யாழ். நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர்  என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறிந்த சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்த நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது....

நெடுந்தீவில் ஐவர் வெட்டிப் படுகொலை! ஆறாவது நபர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி ! விசாரணைகள் தீவிரம்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் இன்று(22) காலை ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.3 பெண்களும் இரண்டு ஆண்களும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை இனந்தெரியாத சிலர் குறித்த வீட்டுக்குள் பிரவேசித்து இந்த கொலையை புரிந்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொலையுண்டவர்களில் 3 பேர் வெளிநாடொன்றில்...

மனநலம் அவசியமானதா? -வைத்திய கலாநிதி  சத்தியமூர்த்தி

போலித்தனத்தை/ போலி வைத்தியத்தை புறந்தள்ளி உயிரை பாதுகாத்தல் மற்றும் உடல்நலத்தை பேணுதல். அண்மை காலமாக "தெய்வ வைத்தியராக" தன்னை தானே புகழ்ந்து பாடும் ஒருவர் நோயாளிகளை ஏமாற்றுகின்றமை உண்மையில் ஒரு வியப்பான செயல்!!! நம் நாட்டில் ஆங்கில மற்றும் சுதேச மருத்துவம் (சித்த, ஆயுள்வேத, யுணானி) அங்கிகாரம் பெற்ற சுகாதார சேவைகள் ஆகும்.துரதிருஷ்டவசமாக சில "போலி...

தாங்கள் யாரிடமும் குரங்குகளைக் கேட்கவில்லை என சீனா கைவிரிப்பு.

ஒரு இலட்சம் குரங்குகளை இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம்...

யாழ்.பல்கலைக்கழகப் பேரவைக்கான புதிய வெளிவாரி உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக 9 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.இதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 புதிய வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் "ஒரு துளி உயிர் தரும்!" என்ற தொனிப்பொருளிலான குருதிக்கொடை முகாம்  24 செப்டெம்பர், 2022 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் கல்லூரி வளாகத்தில் குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற உள்ளது வருடாந்தம் இடம் பெறும் இந்த குருதிக்கொடைமுகாமில் இம்முறையும் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஆர்வலர்களை...

எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க யாழ். மாவட்ட செயலகம் பொறிமுறை

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்கள் சீரான முறையில் மற்றும் நியாயமான விலையில் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக, யாழ். மாவட்ட செயலகம் பொறிமுறையொன்றை உருவாக்கியுள்ளது. இப்பொறிமுறை ஊடாக எரிவாயு சிலிண்டர்களை எதிர்வரும் காலங்களில் பகிர்ந்தளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1. பொதுமக்களுக்கான வீட்டுப்பாவனை - மக்களுக்கு விநியோகிக்கும் முறை: ● கிராம அலுவலர் பிரிவுகளுக்கென...

கச்சதீவை மீண்டும் இந்தியாவிற்கு வழங்க முயற்சி – மீனவர் சங்கங்கள் குற்றச்சாட்டு

இலங்கை வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமான கச்சத்தீவு கடல் பிராந்தியத்தை இலங்கையின் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இந்தியாவிற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாஜத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் குறித்த குற்றச்சாட்டை...

அமெரிக்காவில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு: 19 பள்ளிக் குழந்தைகள், ஓரு ஆசிரியர் உட்பட பலர் உயிரிழப்பு

அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின் இவர், காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் வாலிபர் தனது பாட்டியை சுட்டுக்...
Loading posts...

All posts loaded

No more posts