பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பிரதான பாதை திறக்க நடவடிக்கை!

பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார். அதன்படி, பாராளுமன்ற...

தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணியை மருதங்கேணி பகுதியில் சுவீகரிக்க நடவடிக்கை!

வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுபிகரிப்பு நடவடிக்கைகள் நாளை (09) இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரளுமாறும், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார் . அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட...
Ad Widget

கூட்டுறவுச் சங்கக் களஞ்சியசாலையை உடைத்து நெல்மூடைகளை நாசம் செய்த யானை!!

முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் 14ஆம் கட்டைப் பகுதியில் காட்டுயானைகளின் நடமாட்டம் மற்றும் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து காட்டுயானைகள் சேதம் விளைவித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நெல் மூடைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ஒரு அச்சநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும்கூட,...

திருநெல்வேலி அம்மாச்சி : ஒரு விழிப்புணர்வுப் பார்வை!

 திருநெல்வேலியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாரம்பரிய உணவகமான "அம்மாச்சி" உணவகத்திற்கு அண்மையில் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அதனால் எழும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரக் கேள்விகளையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது பலரினதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அவரது பதிவின் விபரம் வருமாறு: "நீண்ட நாட்களுக்குப் பிறகு திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்திற்குச்...

எரிபொருள் விலை குறைந்தும் பலனில்லை? பொதுமக்கள் அதிருப்தி!!

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அந்தந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்று முன்தினம் (29) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், இரண்டு வகையான பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதன்படி, ஒக்டேன்...

யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றுமுன்தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் எரிந்ததால் ஏற்பட்ட நச்சுப் புகை மற்றும் கடுமையான துர்நாற்றம் காரணமாக, நாவாந்துறை...

நேற்று காக்கைத் தீவு இன்று கல்லூண்டாய்… நாளை……?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தின் காப்பகங்களாக முக்கிய மையங்களாக விளங்கும் காக்கைத் தீவு மற்றும் கல்லூண்டாய் கழிவு சேகரிப்பு நிலையங்கள் தொடர்பில் மாநகர சபை தொடர்ச்சியாக தன்னுடைய பொறுப்பற்றதன்மையினையும் அணுகுமுறையினையும் வெளிப்படுத்திவருவது என்பது மறுக்க முடியாத உண்மையுமாகும். இது மிகுந்த கவலையளிக்கும் விடயம். கடந்த 23ஆம் திகதி காக்கைத் தீவில் ஏற்பட்ட பாரிய தீ...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் செயலிழந்த மின் தூக்கி, நோயாளர்களை ஏற்றி இறக்கும் பணிகளில் மாணவர்கள்!!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பயன்பாட்டில் இருந்த ஒரேயொரு மின் தூக்கி செயலிழந்த நிலையில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகள் உட்பட சத்திர சிகிச்சை கூடம் என பெரும்பாலான நடவடிக்கைகள் முதலாவது மாடியில் காணப்படுவதனால் நோயாளர்கள் படிக்கட்டு வழியாக ஏற்றி இறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட நோயாளர்கள்...

அசெளகரியங்களை ஏற்படுத்தும் தனியார் பேருந்தினர்!!

அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி தனியார் பேருந்தினர் பயணிகளுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். நேற்று (27) யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகளவான பயணிகளை ஏற்றியவாறு பயணித்த பேருந்தின் காப்பாளர், பயணிகளின் இருக்கைக்கு மேலாக கடந்து சென்று அசௌகரியங்களை ஏற்படுத்தியமை பயணிகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கும் முகமாலை பகுதிக்கும் இடையில்...

இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ள வேலணை வைத்தியசாலை!

வேலணை வங்களாவடி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவை செயற்பாடுகள் ஆளணிப் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு பகுதியளவில் இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் தெரியவருகையில் - தீவகப் பிரதேசத்தின் இரண்டாவது பிரதான வைத்தியசாலையாகவும் தீவகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுமான குறித்த வைத்தியசாலை கடந்த நல்லாட்சிக் காலத்தில் அன்றைய சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனரத்னவினால் "பி"...

பருத்தித்துறை – பொன்னாலை வீதியை புனரமைக்ககோரி உண்ணாவிரத போராட்டம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரத போராட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. யுத்தத்திற்கு பின்னர் 30 வருடங்களுக்கு மேலாக வல்வெட்டித் துறையிலிருந்து தொண்டைமானாறு வரையான 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது...

நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால் மக்கள் சிரமம்!!

நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால் குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு நெடுந்தீவுக்கு கொண்டு சேர்த்துள்ளது. நேற்று (02) மாலை 4.00 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து புறப்பட தயாரான வடதாரகை படகு இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதுடன் திருத்த வேலையினை முடித்து பயணத்தை தொடராலாம் என தெரிவித்திருந்த நிலையில் உடனடியாக...

வேலணை பகுதியில் பொறுப்பற்ற முறையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்!!

வேலணை பிரதேச மருத்துவமனை மற்றும் வேலணை பிரதேச சுகாதார மருத்துவர் பணிமனை அமைந்துள்ள வளாகத்திற்கு அருகிலுள்ள தனியார் காணியினுள் மருத்துவமனை வாளாக எல்லையிலிருந்து அண்ணளவாக 10மீற்றர் தூரத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பாவிக்கப்பட்ட ஊசிமருந்து குப்பிகள் மற்றும் மருந்து ஏற்ற பயன்படுத்திய ஊசிகள் இப்பகுதியில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக...

நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கினால் பாதிப்பு!

இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கினால் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதனால் அதனை சூழவுள்ள கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது கடந்த நான்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாக இணுவில் காரைக்கால் அம்மன் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான குப்பைகளை கொட்டும் பகுதியில்...

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் மோசடி : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஒருநாள் கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் இலக்கம் பெறுவதில் இருந்து கடவுச்சீட்டு பெறும் வரையில் இலஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியா குடியகல்வு குடிவரவுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்காக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மதவாச்சி போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் தினமும் அதிகளவில் வருகை...

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும் செயற்பாடு போராட்டத்தால் தடுக்கப்பட்டது

வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம், அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, யாழ். போதனா வைத்தியசாலைக்கு, சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தனியார் காணியில்...

தங்கள் ஒரு நாள் சம்பளத்தை ஆளுநருக்கு அனுப்பிய மீசாலை மக்கள்!!

கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புணரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், புணரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளனர். கொடிகாமம் - மீசாலை வடக்கு இராமாவில் பகுதியில் உள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புணரமைக்குமாறு கோரியே அப்பகுதி மக்கள் இவ்வாறானதொரு கோரிக்கைவினை விடுத்துள்ளனர். அவர்கள் அனுப்பிவைத்துள்ள...

வெள்ளக்காடான வீதி : புனரமைப்பதாக கூறி வாக்குகளை பெற்ற அரசியல்வாதிகள் குறித்து மக்கள் ஆதங்கம்!!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் மத்திய கல்லூரியின் பின்புறமாக அமைந்துள்ள வீதி கடந்த 48 வருடங்களாக மக்கள் பயன்படுத்த முடியாதளவு சீரற்று காணப்படுகிறது. குறிப்பாக, மழைக் காலங்களில் முற்றும் முழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் இந்த வீதி கால்வாய் போல் காட்சியளிப்பதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மேலும் கூறுவதாவது : நாளாந்த தேவைகளுக்காக...

எழுவைதீவு வைத்தியசாலையில் சுகாதார சேவையை பெறுவதில் மக்கள் அசௌகரியம்!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட எழுவைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஒழுங்காக வருகை தருவதில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, சுமார் 700 பேர் வசிக்கும் அடிப்படை வசதிகள் அற்ற குடும்பங்கள் வாழ்ந்து வரும் தீவுப் பிரதேசமாக எழுவைதீவு விளங்குகிறது. குறித்த பிரதேசத்தில் வெளிநாட்டில் வசிக்கும்...

யாழ்.மாவட்ட காணி பதிவுத் திணைக்களம் குறித்து மக்கள் அதிருப்தி!

யாழ்.மாவட்ட காணி பதிவுத் திணைக்களத்தின் நிகழ்நிலை (online) ஊடாக சேவைகளைப் பெற்றுக் கொள்ளமுடியாமல் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை (online) சேவை ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதிலும், யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தின் ஊடாக அந்த சேவைகளைப் பெற...
Loading posts...

All posts loaded

No more posts