- Friday
- August 28th, 2026
திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்...
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில், மரம் ஒன்றில் உலர்ந்த விறகுகளை வெட்டுவதற்காகச் சென்றிருந்த இரண்டு பாடசாலை மாணவர்கள், உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வட்டவளை பொலிஸாரின் துரிதத் தலையீட்டினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வட்டவளை குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் 7ஆம் மற்றும் 8ஆம் தரங்களில்...
எல்நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மின்வெட்டுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக்...
நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் தயாராகிவந்த தனது இறுதிச்சடங்கு வீட்டிற்கே உயிருடன் நடந்து வந்த விசித்திரமான சம்பவமொன்று கல்கமுவ, கொஹொபன்குளம் கிராமத்திலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. இவ்வாறு திடீரெனத் தனது வீட்டிற்கு வந்துள்ளவர் கல்கமுவ, கொஹொபன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அனுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவுக்கு அமைவாக நேற்று (24) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சட்டமூலத்தின் மூலம் விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச்...
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி...
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI), இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சுகாதார அலுவலகத்தில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலைய...
பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில்...
தனியார் துறை ஊழியர்கள் இணைய வழியில் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறையை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்காக அண்மையில் இணையவழி பருவச்சீட்டு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில், இதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்...
இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலனியின் மறைவு காரணமாக, ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களை தேசிய துக்க தினங்களாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவிட்டு வெளியேறும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையிலான பெரும்பான்மையினர் ஏதேனுமொரு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே என்பது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவது தொடர்பான முழு நாடும் ஒன்றாக தேசிய இயக்கத்தின்...
தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியிருந்த கொழும்புப் பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு 200,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை இலக்கம் 05 பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட செயலகத்தின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பு...
பொலிஸ் தலைமையகத்தினால் விநியோகிக்கப்படும் நற்சான்றிதழ்கள் தொடர்பான தரவுக் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவினால் இந்தச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதுடன், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது, அறிக்கைகளைக் கோருவது மற்றும் சான்றிதழ்களை அச்சிடுவது ஆகியன குறித்த தரவுக் கட்டமைப்பின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன. எவ்வாறாயினும், அந்தத் தரவுக்...
மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தொன்றில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். வெல்லவாய - மொனராகலை வீதியின் கும்புக்கன, களு பாலத்தில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியொன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உழவு இயந்திரத்தில்...
கிளிநொச்சியின் பளையில் விடுதலைப் புலிகளின் (LTTE) பயிற்சி முகாம் ஒன்றைக் கண்டுபிடித்ததாகக் கூறி அண்மையில் ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்திய நபர் குறித்த மேலதிக விவரங்களை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று வெளியிட்டார். அக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஆதாரமும் விசாரணைகளில் கிடைக்கவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். இது தொடர்பில் இன்று...
கைது செய்யப்பட்ட தனியார் வர்த்தக வங்கியின் முகாமையாளர்கள் உட்பட ஐந்து பேரையும் செப்டம்பர் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை பரிமாற்றம் செய்தமை தொடர்பில் அண்மையில் நான்கு தனியார் வர்த்தக வங்கி முகாமையாளர்களும் கைது...
இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவையின் முன்னோடித் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஆரம்ப கட்டமாக 25 கிலோ மீற்றர் வரையான தூரங்களுக்கு பயணிகள் ட்ரோன்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. சுற்றுலாத் தலங்களை இணைக்கும் இரண்டு சாத்தியமான...
இன்று (20) முதல் நாடு தழுவிய ரீதியில் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டுக் கடமைகளில் இருந்தும் விலகுவதற்கு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரியை தன்னிச்சையாக இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (19) இரவு கூடிய தமது...
2028 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பில் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எழுதிய “Yudha Dekakata Ura Dee” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர்...
Loading posts...
All posts loaded
No more posts
