அதிநவீன சிறுநீரகக்கல் அகற்றும் சிகிச்சை மையம்!!

அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று மாடிக் கட்டடத்தில் நாடு முழுவதும் சேவையாற்ற கூடிய “மிரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம்” எதிர்வரும் 12ஆம் திகதி பொது மக்களின் பாவனைக்காக வழங்கப்பட உள்ளது. இலங்கையில் சிறுநீரக கல் நோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையமாகவும், சிறுநீரக கற்களை அகற்றும் சத்திரசிகிச்சைக்காக தற்போதுள்ள 5000...

திடீரென ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்!!

சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) தங்களும் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சட்டவிரோத சொத்துக் குவிப்புகள் தொடர்பான...
Ad Widget

துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறை வாசலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "உன்னை எங்காவது கண்டால் கொன்றுவிடுவோம். வெளியே மாட்டும் போது உன்னை விடமாட்டோம், கொன்றுவிடுவோம்" என அவர்கள் மிரட்டியுள்ளனர். குறித்த...

மிருகத்தனமான முறையில் கொல்லப்பட்ட சிறை அதிகாரிகள்!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட வன்முறை மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மிகவும் மிருகத்தனமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அவர்களது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மரண பரிசோதனை அறிக்கைகளின்படி, தலைப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகவே இந்த அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 மற்றும்...

பல்வேறு இடங்களில் நிகழ்ந்த கோர விபத்துக்கள் – நால்வர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நான்கு வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதவிய, அனுராதபுரம், பொத்துவில் மற்றும் வெலிகம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (09) இந்த விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. போகஸ்ஹந்திய - புல்மோட்டை வீதியின் 2ஆம் கட்டை தூணிற்கு அருகில் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. போகஸ்ஹந்திய நோக்கி...

இன்று பிற்பகல் 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

கொழும்பு பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு!!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கலைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் கல்விச் செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி, ஒரு வார காலத்திற்கு பல பீடங்களின்...

நீர்கொழும்பு சிறை மோதலில் இந்தியர் ஒருவரும் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக 'த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் வௌியாடாத போதிலும், இலங்கை வெளிவிவகார...

நாட்டின் பல பகுதிகளில் வறண்ட வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வட, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!!

தெங்கு அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரவை அமைச்சரான ஜகத் புஷ்பகுமார ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (08) காலை 9.20 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜகத் புஷ்பகுமார கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்....

மஹமோதரவில் புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், காலி - மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது. (54 ஆம் அத்தியாயமான) சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த கட்டளை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், "மஹமோதர"...

நீர்கொழும்பிலிருந்து பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கைதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் இன்று...

டெங்கு அச்சுறுத்தால் மொறட்டுவை பல்கலைக்கு இரண்டு வாரம் பூட்டு!

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காரணமாக, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இரண்டு வார காலத்திற்கு மூடப்படும் என்று துணைவேந்தர் அறிவித்தார். இதற்கு அமைவாக, பல்கலைக்கழக நிர்வாகம், நேற்று (6) முதல் அமுலுக்கு வரும் வகையில், வளாகத்திற்குள் நடைபெறும் செயல்பாடுகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்,...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு நோயால் 40 பேர் உயிரிழப்பு???

நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு நோயால் 40 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது முற்றிலும் பொய் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கூறப்படுவதைப் போன்று 40 பேர் சிறைச்சாலைக்குள் டெங்கு நோய்க்குள்ளாகி உயிரிழந்திருந்தால்,...

இலங்கை சுங்கத்தின் அபார சாதனை!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373 பில்லியன் ரூபாய் வரி வருவாய் வசூலித்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. முதல் ஆறு மாதங்களுக்கான வரி இலக்கை விட இது 22 சதவீதம் அதிகம் என்று அதன் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கூறினார். இந்த ஆண்டுக்கான வரி இலக்கு ரூ. 2,206.9 பில்லியன் ஆகும்....

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன?

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியின் பாதுகாப்பிற்காக பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நேற்று (06) இரவு நீர்கொழும்பு சிறைச்சாலையின் நிலைமையை அவதானித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்...

சிறைச்சாலை மோதல்: களமிறங்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதற்கமைய, அதற்காக நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தமது அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பிய...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (5) கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் நேற்றைய தினமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று திங்கட்கிழமை (6) அச்சிறைச்சாலையில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதைத் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 பேர் ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட 08 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,...

பஸ் கட்டண திருத்தம் இன்று முதல்!!

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று (06) முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்களை 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 34...

போதைப்பொருள் பயன்படுத்துவதை பெற்றோர் பரிசோதிக்க பரிசோதனைக் கருவி அறிமுகப்படுத்த அரசு பரிசீலனை

போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா என்பதை பெற்றோர் வீட்டிலேயே பரிசோதிக்க புதிய பரிசோதனைக் கருவி அறிமுகப்படுத்த அரசு பரிசீலனை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தங்களது பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதை பெற்றோர் தனிப்பட்ட முறையில் பரிசோதிக்கக்கூடிய பரிசோதனைக் கருவிகளை (Drug Testing Kits) சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இந்த முன்மொழிவு,...
Loading posts...

All posts loaded

No more posts