முன்னாள் கடற்படைத் தளபதி கைதாகி பிணையில் விடுதலை

முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட, 2006 ஆம் ஆண்டு யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார். கைதுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்தப் பதவிக்குத் தேவையான தகுதிகள் இல்லாத...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57000 ஐ கடந்தது!!

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,000 ஐத் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,668 ஆக உயர்ந்துள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,253 டெங்கு நோயாளர்கள்...
Ad Widget

யோஷித ராஜபக்‌ஷவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்‌ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (3)...

பிள்ளைகள் போதைக்கு அடிமையா? — பெற்றோரே வீட்டில் சோதிக்கும் புதிய வசதி விரைவில்!!

பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் மூலம் இலகுவாகக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது. நச்சுப் போதைப்பொருள் பேரழிவை நாட்டிலிருந்து ஒழிப்பதற்காகச் செயற்படுத்தப்படும் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டுச் சபை,...

உலகின் சிறந்த சுற்றுலாத் தீவாக இலங்கை!!

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச சுற்றுலா ஊடகமான 'பிக் 7 டிராவல்' (Big 7 Travel) நடத்திய அண்மைக்கால மதிப்பீட்டின்படி, இயற்கை அழகு, பல்லுயிர் பெருக்கம், கலாசார பாரம்பரியம், சுற்றுலா அனுபவங்கள் மற்றும் உலகளாவிய பிரபலம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த...

முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வௌியான தகவல்!!

அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 முதியோர்களுக்காக மொத்தம் 3,108,805,000.00 ரூபாய் பணம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70...

இணையவழியில் நீதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 4,386,219 ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மோசடிகள் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது....

போதைப் பொருள் அச்சுறுத்தல் : பாடசாலைகளைப் பாதுகாக்க 225 விசேட திட்டங்கள்!!

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை, மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி...

எனது மனைவியின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம்!! – கண்ணீருடன் கணவர்

எனக்கு நேர்ந்த இந்தத் துயரம் இனி வேறு எந்தவொரு குடும்பத்திற்கும் நடந்துவிடக் கூடாது. எனது மனைவியின் இழப்பிற்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்" தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும், ஒரிஜினல் மருத்துவ ஆவணங்களை மீட்டுத் தரவும் ஜனாதிபதி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...

பதின்ம வயதினரிடையே பாலியல் நோய் அதிகரிப்பு!!

பதின்ம வயது பிள்ளைகளிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாக ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அரசாங்கம்...

செல்லப் பிராணிகள் தொடர்பில் அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்

விசர் நாய்க்கடி நோயை இல்லாதொழித்தல் மற்றும் செல்லப் பிராணிகளை பதிவு செய்தல் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்குமான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்திற்கு, சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதனடிப்படையில் அதனை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்றில் முன்வைப்பதற்குமான யோசனை ஒன்றை பொது நிர்வாகம், மாகாண சபை...

நீர் கட்டணம் தொடர்பில் அரசு எடுத்த முடிவு!!

இந்த ஆண்டின் அடுத்த 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நீர் சுத்திகரிப்பு பணிகளுக்காக சபைக்கு பெரும் செலவு ஏற்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை...

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!!

கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 138,241 ஆகும் என அந்த அதிகார சபை...

அதிவேக மோட்டார் சைக்கிள்களுடன் வர்த்தகர் கைது!

இலங்கையில் பதிவு செய்யப்பட முடியாத, ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய நவீன ரக அதிவேக மோட்டார் சைக்கிள்கள் ஐந்துடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனுடன் இரண்டு போலி இலக்கத் தகடுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹோமாகம பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், அத்துருகிரிய - ஹோகந்தர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்...

புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ நியமனம்!!

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கமைய, இதுவரை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ வைஸ் அத்மிரால் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டு, இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர்...

போதை மீண்ட இளைஞர்களுக்கு அரசு தரும் அரிய வாய்ப்பு!!

போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது மறுவாழ்வு பெற்றுவரும் இளைஞர் சமூகத்தினரை தொழில்முறை வேலைவாய்ப்புகளில் இணைப்பதற்காகக் கைத்தொழில் அமைச்சு புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. மறுவாழ்வு பெற்ற இந்த இளம் யுவதிகள் மற்றும் இளைஞர்களைத் தனியார் துறையின் நிலையான தொழில்முறை வேலைவாய்ப்புகளில் இணைப்பதை இதன்மூலம் எதிர்பார்ப்பதுடன், அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை, மறுவாழ்வு பணியகம் மற்றும்...

இலங்கையின் பொருளாதார மீட்சி முன்னேற்றத்திற்கு IMF பாராட்டு

பலதரப்பட்ட வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும், மெக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் காட்டியுள்ள அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழு பாராட்டியுள்ளது. ஜூன் 24 முதல் 30ஆம் திகதி வரை கொழும்பிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவினர்,...

நேற்று ஒரே நாளில் மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் பலி

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (29) இடம்பெற்ற விபத்துகளில் சிக்கி பல இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள் அநுராதபுரம், கல்கிரியாகம, சமனலவெவ மற்றும் கிரானேகம ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலை அநுராதபுரம் - ரம்பேவ வீதியின் சாலியபுர கல்வல சந்திக்கருகில் ரம்பேவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வலது பக்கமாக திருப்ப...

டெங்கு ஒழிப்புப் பணிகளில் இருந்து இன்று முதல் கிராம உத்தியோகத்தர்கள் விலகல்!!

நாட்டில் டெங்கு நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ள சூழ்நிலையில், அரசாங்கத்துடனான தங்களது நீண்டகால பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் தேசிய சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்கத் தவறியமையால், இன்று (30) செவ்வாய்க்கிழமை முதல் டெங்கு ஒழிப்பு...

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை!!

விசேட டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவில் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார். எனினும், எம்மைச் சூழவுள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டும் எனவும், அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts