Ad Widget

யாழில் ஆட்டோக்காரர்கள் அட்டகாசம்!! Taxi App சாரதி மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் ஆட்டோ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி நொதேன் வைத்தியசாலை அருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாகவும் முறைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட  சாரதி கவலை வெளியிட்டார்.

தான் அங்குள்ள ஆட்டோ தரிப்பிடத்திற்கு அப்பால் உள்ள கோயில் அருகில் தரித்து நிற்பதாகவும் செயலிகள் ஊடாக வரும் அழைப்புக்களை மாத்திரம் ஏற்பதாகவும் கூறுகின்றார்.

முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிட்ட நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சேவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சாரதிகள் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்கள் முன்பாக யாழ் இரயில் நிலையப்பகுதியிலும் இவ்வாறானதொரு தாக்குதல் பதிவாகியிருந்தது. இது விடயத்தில் உள்ளுராட்சி சபைகள் மற்றும் அரச அதிபர் தலையிட்டு இதற்கான பொறிமுறையினை ஏற்படுத்த வேண்டும் எனவும் தரிப்பிடங்கள் இல்லாதவர்கள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து ஒரு பொது ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் செயலிகளில் இணைந்து குறைந்த விலையில் சேவை வழங்கும் சாரதிகளின் அங்கலாய்ப்பாக உள்ளது.

Related Posts