யாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார். வயலில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞனின் சடலம் சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார்...

மருந்துகளின் விலைகளை 25 சதவீதத்தால் அதிகரிக்கக் கோரிக்கை!!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களின் விலைகளை ஆகக்குறைந்தது 25 சதவீதத்திலாவது அதிகரிக்குமாறு மருந்து நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. மின்சாரக் கட்டண அதிகரிப்பு, ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதி உயர்வு, கப்பல் கட்டணங்கள் மற்றும் மருந்து உற்பத்தி மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் கருத்திற்கொண்டு இந்த விலை...
Ad Widget

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை!!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த யுவதி கடந்த 27 ஆம் திகதி யாழ்பபணத்தில் இருந்து வவுனியா செல்வதாக சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிந்தோர் 0773828845 என்ற இலக்கத்திற்கு...

மழையுடனான வானிலை அடுத்த 48 மணி நேரத்திற்கு பின்னரே விலகும்!!

மத்திய வங்காள விரிகுடாவில் உள்ள நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் கடந்த பல மணி நேரங்களாக குறிப்பிட்ட இடத்திலேயே நிலை கொண்டிருப்பதனால் இலங்கையை விட்டு விலகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழையுடனான வானிலை அடுத்த 48 மணி நேரத்திற்கு பின்னரே விலகும் வாய்ப்புள்ளது. இதனால் இன்றும் இலங்கையின் வடக்கு மேற்கு, வட மேற்கு,...

யாழ் போதனா மருத்துவமனை தொடர்பில் வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம்!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் இடம்பெற்ற தீ விபத்துத் தொடர்பில் நிர்வாகத்தினால் இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து ஊடகங்களும்...

யாழில் ஹெரோயினை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!

யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – கல்லவேம்படி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்றையதினம் 2 கிராம் ஹெரோயினுடன் கைது செய்தனர். கைது செய்து...

வடக்கு ஆளுநர் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு !!

வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. ஆளுநர் வேதநாயகன் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வொர்த் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பு கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள 'றீச்சா பார்க்' வளாகத்தில் இன்று புதன்கிழமை (13) காலை...

200 மி.மீக்கு மேல் பலத்த மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!!

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களுக்கும் ‘அம்பர்’ நிறத்திலான கடும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை...

தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி வழங்கப்படும் என நீதிமன்று திகதியிட்டுள்ளது. குறித்த விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி....

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த அரச பகுப்பாய்வு திணைக்கள விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய சாலையில் கடந்த சனிக்கிழமை (09) அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 05 மணி நேர தீவிர போராட்டத்தின் பின்னர்...

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி பவனி நல்லூரிலிருந்து ஆரம்பம்!!

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைகளின் நினைவு ஊர்தி பவனி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) காலை நல்லூரில் உள்ள தியாக தீபம் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது. இந்த ஊர்தி பவனியானது, வட, கிழக்கின் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று மே -18ஆம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது. இந்த ஊர்தி பவனியின்போது தியாக தீபத்தின் நினைவிடத்தின் முன்றலில் முள்ளிவாய்க்கால்...

சுகாதார சேவையை மேம்படுத்த புதிய நடைமுறை யாழ். மாவட்டத்திற்கு விசேட ஒருங்கிணைப்பு அதிகாரி

யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரியாக பாராளுமன்ற உறுப்பினர் ச. ஸ்ரீபவானந்தராசா நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்புதிய முறையின் மூலம் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்தி வினைத்திறனான சேவையை வழங்குவதை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு பிரதான...

மழை சில நாட்களுக்கு தொடரும்!!

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்து நீடித்து வருவதாகவும், இந்த தொகுதியின் தாக்கத்தால், நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை எதிர்வரும் சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் நாட்டின் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்...

முதலமைச்சர் விஜய்க்கு கஜேந்திரகுமார் வைத்த கோரிக்கை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு, ஈழத்தமிழர் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை முக்கிய கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது. இது குறித்து அந்தப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள கோரிக்கை கடிதத்தின் விபரம் வருமாறு: 10 மே 2026 மாண்புமிகு சந்திரசேகர்...

புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று முதல் அமுல்!!

இந்த ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. இதன்போது மின்சாரக் கட்டணங்களை 8% முதல்...

யாழ் தேவி மீண்டும் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது!!

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி ரயில் சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யாழ் தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கவுள்ளது. அதேவேளை, ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த ரயில்...

டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகள் அறிமுகம்; மே 1 முதல் அமுலுக்கு வருவதாக அறிவிப்பு

மோட்டார் வாகனங்களுக்கான காப்புறுதிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, மே மாதம் முதலாம் திகதி முதல் 'டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகளை' விநியோகிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி சங்கம் உள்ளிட்ட துறையின் முக்கிய பங்குதாரர்கள் இணைந்து எடுத்துள்ள இந்தத் தீர்மானம் குறித்து, பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள்...

பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல்!! பாடசாலைகளுக்கு விடுமுறை!!

தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு வரவுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா...

இளைஞன் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!! துணிந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

பண்டத்தரிப்பில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞன் தாக்கப்பட்ட போது ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்த போது அந்த பகுதியால் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துணிச்சலாக செயற்பட்டு, தாக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றியதுடன், தாக்குதல் நடத்தியவர்களை விரட்டிச் சென்று ஒருவரை மடக்கிப் பிடித்தார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளைஞன்...

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் ‘குழந்தைகளின்’ எலும்புக்கூடுகள் மீட்பு!!

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி பத்து நாட்களுக்குப் பின்னர், கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 254 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (மே 6 மற்றும் 7) மீட்கப்பட்ட ஐந்து மனித...
Loading posts...

All posts loaded

No more posts