போர்ட் சிட்டி மோதல்: முழுமையான விசாரணைக்கு சீனத் தூதரகம் வலியுறுத்தல்!

கொழும்பு துறைமுக நகரப் (Port Cit) பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்துத் தாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. உண்மைகளை விரைவில் கண்டறிய முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறும், சீனக் குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப்...

கோட்டாவின் கைதாவதைத் தடுக்கும் மனு ஓகஸ்ட் 03 வரை ஒத்திவைப்பு!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த எழுத்தாளை மனுவின் (Writ Petition) பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதன்படி, குறித்த மனு...
Ad Widget

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் 23 எதிராக வழக்கு!

காலாவதியான இரசாயனங்கள் மற்றும் மருந்துகள் தொடர்பாக 23 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அது தொடர்பில் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த அபராதத் தொகை ஐம்பத்தேழு இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரம் ரூபாய் என அந்த அதிகார சபை அறிவித்துள்ளது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய நிறுவனங்கள்...

புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடுகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளினால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், இன்று (23) முதல் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை இணையவழியில் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, www.doenets.lk...

யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை பாதுகாக்க ஆலோசனை!!

தொன்மை வாய்ந்த யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பார்வையிட்டார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று (23) விஜயம் மேற்கொண்டுள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள், பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தை நேரில்...

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்!

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது....

சச்சினின் சாதனை முறியடித்த சூர்யவன்ஷி!

இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக சிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் நேற்று (23) நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவரில்...

ஜப்னா கிங்ஸ் அணியை வீழ்த்தி கோல் கிலன்ட்ஸ் வெற்றி

லங்கா பிரிமியர் லீக் தொடரின் நேற்று (23) இடம்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோல் கிலன்ட்ஸ் அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய கோல் கிலன்ட்ஸ் அணி...

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் சிறுவனின் என்புக்கூடு மீட்பு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான நேற்று (23) , 07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில்...

இலங்கையை தாக்கவுள்ள வலுவான எல் நினோ!!

உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கமான 'எல் நினோ'காலநிலை நிகழ்வு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே இலங்கையில் தீவிரமடைந்து, எதிர்வரும் நவம்பர் மாதமளவில் அதன் உச்சகட்ட நிலையை அடையக்கூடும் எனப் சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,...

6 மாதங்களில் 5,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு!!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் 5,523 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே...

நீட் தேர்வுக்கு எதிராக களமிறங்கும் திரை நட்சத்திரங்கள்!!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தர் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த...

ஜனநாயகன் படத்தை காண வந்த நடிகை த்ரிஷா!!

மாண்புமிகு மாணவன் படத்தில் தொடங்கிய நடிகர் விஜய்யின் நடிப்பு பயணம் ஜனநாயகன் படத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது. சினிமாவை தாண்டி பெரிய களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய் இப்போது தமிழக முதலமைச்சராக மாஸாக வேலை செய்து வருகிறார். இந்த 2026 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருக்க வேண்டிய ஜனநாயகன் படம் இன்று ஜுலை 23 மாஸாக வெளியாகியுள்ளது....

கறுப்பு ஜூலையை நினைவுகூர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இன்று (23) நினைவு கூர்ந்தனர். கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலை கலவரத்தினால் ஏற்பட்ட இழப்புகள் இன்னும் நீங்காத வடுவாகவே நீடிப்பதாகவும் அவர்கள்...

நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனுவின் விசாரணை தொடர்பான வழக்கிற்கான மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். குறித்த மனு கடந்த ஜூலை 09ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்...

அதிக வெப்பம்!! 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டம் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது....

யாழில் தனியார் மருத்துவமனைக்கு 30 இலட்சம் ரூபாய் அபராதம்!!

இரத்த பரிசோதனைக்காக அதிக கட்டணம் அறவிட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் அறவிடப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

6 மொழிகளில் ஒரே நேரத்தில் பிக் பாஸ் திருவிழா!!

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான ஜியோஸ்டார் (JioStar), வரும் செப்டம்பர் 2026 முதல் இந்தியாவின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸின் 6 மொழிகளுக்கான பதிப்புகளை ஒரே நேரத்தில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கவுள்ளது. இந்தத் பண்டிகைக் காலத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காளம் ஆகிய 6 மொழிகளிலும் பிக் பாஸ் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத்...

டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை?

அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு அணி தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், ஈஸ்டர் பண்டிகை அன்று,...

இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்த பெண் – நூதன மோசடி!

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துள்ளார். இந்த சம்பவம் தெலுங்கானா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 22 வயதுடைய ஸ்வேதா என்ற பெண் சொந்த ஊர் தெலுங்கானாவில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி...
Loading posts...

All posts loaded

No more posts