- Thursday
- July 23rd, 2026
கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக எல்நினோ காலநிலையை எதிர்கொள்வது தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் பெரும்போக நெற்ச்செய்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் பற்றி இங்கு...
கடந்த 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) முன்னாள் தலைவர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலையை வல்வெட்டித்துறையில் நிறுவுவதற்குப் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இவர்களின் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு,...
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழுவினர் இன்றைய தினம்...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் இன்றைய தினம் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது. அதனை அடுத்து இன்றைய தினம் புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை...
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு பரமேஸ்வரி சண்முகசுந்தரம் நினைவாக ரூ. 45 மில்லியன் பெறுமதியான இரண்டு கண் லேசர் இயந்திரங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவு, கடந்த ஆண்டில் 11,722 கண்புரை அறுவைச் சிகிச்சைகள், 2,299 ஏனைய கண் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 62,478 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். அந்நிலையில் வைத்தியசாலையில்...
போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் 'இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக' இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம்...
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் பலவந்தமாக கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கும், நீட் தேர்வால் மாணவர்கள் சந்தித்து வரும் பாதிப்புகளுக்கும் 'தமிழக வெற்றிக்கழகம்' தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தலைமையிலான அக்கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாகவும்,...
தமிழ் சினிமா கொண்டாடும் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் அரசியலில் இறங்கிவிட்டார், இன்னொருவரான அஜித் கார் பந்தயத்தில் பிஸியாக உள்ளார். வரும் ஜுலை 23ம் தேதி விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆக இருக்கிறது, அதற்கான வேலைகள் எல்லாம் படு ஜோராக நடக்கிறது. இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் விஜய்யின் ஜனநாயகன் படம் குறித்து நிறைய விஷயங்களை...
செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று காலை 9 மணி அளவில் நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். இந்நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நியாயமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபடத் தயாராகி வருகிறது....
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து அப்புறப்படுத்தியது. நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கை...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று (21) செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது அருகருகே இரு சிறுவர்களின் என்புக்கூடு உட்பட 13 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன் சில என்புக்கூடுகள் மண்டையோடுகள் இல்லாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. சில என்புக்கூடுகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் மண்டையோடுகளும் காணப்படுவதனால், ஆய்வுகளின்...
தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவை சில தரப்பினர் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதுடன் போலியான விடயங்கள் பல கோணங்களில் முன்னெடுப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சபையில் பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27-2ன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய...
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 8.75% என்ற நிலையிலேயே பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்காலக் கணிப்புகளைக் கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ள பதற்ற நிலைமைகள்...
தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் 3 குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிப் படுகொலை செய்துவிட்டு, தாயும் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெருஞ்சோகத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தர்மபுரி தடங்கம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அம்சா (35). இத்தம்பதிக்கு ஜீவிதா (16), நவீனா (6) என்ற இரு மகள்களும், குமரன்...
இலங்கையில் சட்டத்துறைக்கு சட்டத்தரணிகளை உருவாக்கி வரும் 152 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பெருமைமிக்க இலங்கை சட்டக் கல்லூரி, நவீன சட்டக் கல்வியை நோக்கி மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS), மாணவர் மேலாண்மை அமைப்பு (SMS) மற்றும் புதிய திருத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவற்றின்...
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்குப் புதிய நோட்டிஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட தேர்தல் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த நடவடிக்கைக்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பான மேல்...
வவுனியா பல்கலைக்கழகம் (University of Vavuniya) பல்வேறு வெற்றிடங்களுக்கு Walk-in Interview அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த நேர்முகத் தேர்வின் மூலம் பல்வேறு கல்வி மற்றும் கல்விசாரா பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் தேவையான ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்குமாறு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது....
பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அண்டி பர்ன்ஹாம் உத்தியோகபூர்வமாக பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் பிரித்தானியாவின் நான்காவது பிரதமராகவும், கடந்த பத்து ஆண்டுகளில் ஆறாவது பிரதமராகவும் அவர் பதவியேற்றுள்ளார். தொடர்ச்சியான அரசியல் பின்னடைவுகள் மற்றும் கட்சிக்குள் எழுந்த அதிருப்தி காரணமாக, தொழிற்கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளில்...
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடித்து இருந்த அந்த படத்திற்கு விருது கிடைத்ததற்கு சினிமா துறையினர் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். தற்போது நடிகை சாய் பல்லவி மிகவும் உருக்கமாக அமரன் படம் பற்றி பேசி ராஜ்குமார் பெரியசாமிக்கு...
90-ஸ் கிட்ஸின் மனதை கவர்ந்த நாயகிகளில் ஒருவர் சிம்ரன். இவர் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட திரைப்படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இருந்தும் ரஜினி - சிம்ரன் மீண்டும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். அந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில், தர்மன் திரைப்படத்தில் சிம்ரன்...
Loading posts...
All posts loaded
No more posts
