வாகன இலக்க தகடுகள் 6 மாதங்களுக்குள் விநியோகிக்கப்படும்

தாமதமடைந்துள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து இலக்கத் தகடுகளும் விநியோகிக்கப்பட்ட பின்னர், வாகனம் ஒன்று பதிவு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல்...

புதிய சீனத்தூதர் – மஹிந்த சந்திப்பு!!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (09) முற்பகல் கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்றது. மரியாதை நிமித்தம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒகஸ்ட் 25 ஆம் திகதி தனது நியமனக் கடிதத்தைச்...
Ad Widget

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு! அதுவரை எண்ணெய் விலை குறையாது!! – ட்ரம்ப்

எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டெக்சாஸ் செல்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார். அதுவரை எண்ணெய் விலை குறையாது என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரானால் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், தேர்தலுக்குப்...

கப்பலில் தீ விபத்து – ஐவர் பலி – 87 பேர் மாயம்!!

பிலிப்பைன்ஸில் எம்.வி. ஜூன் அஸ்டர் (MV June Aster) பயணிகள் கப்பலில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கரைக்கு அருகில் சுமார் 2.2 கிலோமீட்டர் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டின் கடலோரக் காவல்படை,...

நீதிமன்றில் சாட்சியமளித்து வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு!!

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (9) பதிவான நிலையில், காயமடைந்த 31 வயதுடைய இளைஞர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில்...

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை வருகையையொட்டி, இந்தியக் கடற்படையால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பன்முகச் செயல்பாட்டுத் திறன் கொண்ட போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் உதயகிரி’ (INS Udaygiri), மூன்று நாள் செயல்பாட்டுப் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக நேற்று (08) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, நடமாடும் பயிற்சிக்குழுவொன்றின் மூலம் தொழில்நுட்பப்...

கவிஞர் சோ. பத்மநாதனுக்கு ஜனாதிபதியால் ‘சாஹித்யரத்ன’ விருது வழங்கி கௌரவம்!

அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (08) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கிய குழு ஆகியவை இணைந்து 67 ஆவது...

எனது உடல்மொழியில் உள்நோக்கம் இல்லை!!

என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என தமிழக முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கப் பதிவில், சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று பொலிஸ் மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது...

டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும்!!

இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், 16 வயது வரை மட்டுமன்றி 20 வயது வரைக்கு சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

வடக்கில் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை!!

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், இவ்வருடத்திற்குள் 50 வீத ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மேலும், பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கருவிகளைப் பழுதுபார்த்தல் போன்ற விடயங்களுக்கான நிதியும் மாகாண சபைகள் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாகாண சபைகள் கோரினால் மேலதிக நிதியையும்...

தனியார் துறையினருக்கு இணையவழி மூலம் ரயில் பருவச்சீட்டு!!

தனியார் துறை ஊழியர்கள் ரயில் மாதாந்த பருவச்சீட்டுக்களை இணையவழி மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதியை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கைத் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, ரயில்வே திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள seatreservation.railway.gov.lk இணையத்தளத்தின் ஊடாகத் தேவைக்கேற்ப மாதாந்த பருவச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும். இதுவரை...

ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழப்பு!!

ரஷ்யாவின் வட காகசஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் பாய்காயமடைந்துள்ளதுடன், 6 பேர் மாயமாகியுள்ளதாக அவசர கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மொத்தம் 33 பேரைக் கொண்ட மலையேற்ற வீரர்களின் குழுவினர் மிஷிர்ஹி மலையில் ஏறிக்கொண்டிருந்த...

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!!

அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய நான்கு எண்ணெய் தாங்கிக் கப்பல்களும், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவுக்கு அருகே மற்றொரு கப்பலும்...

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்!

நாளை (09) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவிக்கையில், அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள் தொடர்பில் தமது சங்கம் கடந்த வாரம் முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார். அரசுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின்...

வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்களுடன் பெண் கைது!!

இலங்கை கடற்படையினர், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்துடன் இணைந்து முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் நடத்திய கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகுதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று (07) கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான கோட்டாபய நிறுவனம், முல்லைத்தீவு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள...

ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் சமல்

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார். எயார்பஸ் விமானங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்றையதினம் (08) முற்பகல் குறித்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் 31 சதொச விற்பனையகங்கள் மூடல்!!

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 சதொச விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்க மாதுகொட எழுப்பிய...

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (08) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்தார். ஏர்பஸ் (Airbus) விமான கொள்முதல் விவகாரம் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் இவ்வாறாக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் முன் ஆஜராகியுள்ளார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் விஜய் சரமாரி கேள்வி!!

நேற்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சம்பளங்கள் சட்ட திருத்த மசோதாவைத் தாக்கல் செய்த முதலமைச்சர் விஜய், தொடர்ந்து காவல்துறை மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசினார். அப்போது எதிர்க்கட்சியினரைப் பார்த்து, "மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்?" எனக்...

தமிழர்களின் கவனத்தை ஈர்த்த தனுசியா செட்டி!!

வியாட்நாம் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியான 2026 ஆம் ஆண்டுக்கான உலக அழகு ராணி பட்டத்தை டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா வென்றிருந்தாலும், தனுசியா செட்டி என்ற பெயர் தமிழர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது. உலக அழகு ராணி போட்டியில் 3ஆம் இடத்துக்கு தெரிவான அவர், மலேசியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி பெண்...
Loading posts...

All posts loaded

No more posts