முதியோர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!!

2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 618,352 முதியோர்களுக்காக 3,091,760,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ்...

எல்-நினோ தாக்கத்தினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம்

எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் 4ஆவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இதன் போது...
Ad Widget

ஓடும் ரயிலில் விளக்கேற்றி பூஜை; பயணி அதிரடி கைது!!

ஓடும் ரயிலின் ஏ.சி. பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த பயணி ஒருவரை ரயில்வே பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் கரீபா (வயது55). இவர் டெல்லியில் இருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்த 'ஹசரத் நிஜாமுதீன்-மைசூரு எக்ஸ்பிரஸ்' ரயிலின் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். ரயில்...

கோர பஸ் விபத்தில் 16 பேர் பலி!!

எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. தஹாப்-நுவைபா வீதியில் அல்-சாடா பகுதிக்கு முன்னதாக நுவைபா நோக்கிப் பயணித்தபோதே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும்...

ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு 7 நவீன பேருந்துகள்!!

ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யோகோஹாமா நகர மக்களால் கூட்டாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த ஏழு புதிய பேருந்துகளையும் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு,...

வெளியாகிறது தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு!

2026 ஆம் ஆண்டுக்கான தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும்-05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென இன்று (02.09.2026) அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து விடைத்தாள் மதிப்பெண்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் இறுதிக்கட்ட ஆவணச் சரிபார்ப்பு மற்றும் நிர்வாகப்...

யாழ். பல்கலையில் அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடா? – பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு!

யாழ். பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது விடயம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட ஊழியர்கள் -...

ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல தடை!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 முக்கியக் ஆலயங்களுக்குள் ஸ்மார்ட் மொபைல்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தடை விதித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் செவ்வாய்க்கிழமை (01) முதல் அமுலுக்கு வந்துள்ளன. ஸ்மார்ட் மொபைல்களை எடுத்து வரும் பக்தர்கள் அவற்றை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒப்படைத்து, ஒரு போனுக்கு 5 ரூபாய் கட்டணம்...

அமெரிக்காவில் பள்ளிவாசல் தாக்குதலை நேரலை செய்த 17 வயது சிறுமி மீது கொலைக் குற்றம்சாட்டு

அமெரிக்காவின் சந்தியாகோ நகரிலுள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்த சம்பவத்தை இணையத்தில் நேரலை செய்வதற்கு உதவியதாகக் கூறப்படும் 17 வயது சிறுமி மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மே 18ஆம் திகதி சந்தியாகோ இஸ்லாமிய மையத்தில் 17 மற்றும் 18...

யாழ் ஊடகவியலாளரிடம் விளக்கம் கோரியுள்ள அரச ஊடகம் – தேசிய மக்கள் சக்தியினர் அழுத்தமா ?

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் சிலரால் குறித்த ஊடகவியலாளர் பணியாற்றும் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த ஊடகவியலாளரிடம்...

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனம் தெரியாதோரால் இடிப்பு!!

தந்தை செல்வாவின் நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இனம் தெரியாத நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுச் சேதமாக்கப்பட்டுள்ளது. வல்லலை - அராலி வீதியில் அமைந்துள்ள தென்னிந்தியத் திருச்சபை இடுகாட்டில் (தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. போருக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை ஒத்த வடிவில், போர் முடிவடைந்த பின்னர்...

தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடினார். அப்போது தமிழ் சினிமாவில் அவருக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் யார் என்ற கேள்விக்கு, எந்தவித தயக்கமுமின்றி நடிகர் தனுஷின் பெயரை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின் போது, "தமிழ் சினிமாவில் உங்களின்...

74 ஆண்டு கால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆவது நாளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 36 வயதான முகமது அப்பாஸ், இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் தனது பெயரை கௌரவப் பலகையில் (Honours Board) பதிவு செய்துள்ளார். இப்போட்டியில் அவர்...

தமிழ்நாடு முதலமைச்சர் பெயரில் நூதன மோசடி! லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த பொதுமக்கள்!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதலமைச்சர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, ஏழை எளிய மக்களிடம் நிதியுதவி மற்றும் கடன் வாங்கித் தருவதாகக்...

இன்று நண்பகல் 12:10 மணிக்கு சூரியன் உச்சியில் இருக்கும்!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்...

அதிகாலையில் பதிவான நிலநடுக்கம்!!

இந்தியாவின் பஞ்சாப் ஷஹீத் பகத் சிங் நகர் பகுதியில் இன்று (02) அதிகாலை 1.44 மணியளவில் ரிக்டர் அளவில் 3 நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 31.124 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.040 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில்...

பிரமாண்டமாகத் தொடங்கும் யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2026: இளையோருக்கு அழைப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவக் காலத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2026 எதிர்வரும் செப்டம்பர் 5-ஆம் திகதி முதல் 9-ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நல்லூர் கோவிலுக்கு அருகில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இப்புத்தகத் திருவிழாவில், 30-க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்களில்...

இலங்கைக்கு ஐ.நா.வின் சிவப்பு எச்சரிக்கை!!

தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்போது வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் மூழ்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எல் நினோ காலநிலை நிலைமை குறித்து...

தப்பியோடிய 24 வருட சிறைத்தண்டனை பெற்ற கைதி மீண்டும் கைது!

யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து மீள கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5...

கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (தரம் III) வெற்றிடங்கள்!!

வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் இயங்கும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் காணப்படும் 20 கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (தரம் III) வெற்றிடங்களை நிரப்புவதற்காகத் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முக்கிய விபரங்கள்: பதவியின் பெயர்: கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (தரம் III) வெற்றிடங்களின் எண்ணிக்கை: 20 விண்ணப்பிக்கும் கடைசித் திகதி: 2026 செப்டம்பர்...
Loading posts...

All posts loaded

No more posts