- Monday
- July 6th, 2026
கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது என கடந்த 30ஆம் திகதி மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக, இன்று வெள்ளிக்கிழமை (3) கிளிநொச்சி நகர்ப்பகுதியில் ரிப்பர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி...
திருநெல்வேலியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாரம்பரிய உணவகமான "அம்மாச்சி" உணவகத்திற்கு அண்மையில் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அதனால் எழும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரக் கேள்விகளையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது பலரினதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அவரது பதிவின் விபரம் வருமாறு: "நீண்ட நாட்களுக்குப் பிறகு திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்திற்குச்...
வவுனியா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: உணவு ஆய்வாளர் (Food Analyst) பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல் இலங்கை வவுனியா பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உணவு ஆய்வாளர் (Food Analyst - On contract) பதவிக்கான ஒரு (01) வெற்றிடத்திற்கு தகுதியான இலங்கை குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முக்கிய விபரங்கள்: பதவி: உணவு ஆய்வாளர் (Food Analyst) -...
அமெரிக்காவின் Ohio பகுதியில் உள்ள Miami Valley வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 17 தாதியர்களும் கர்ப்பம் கர்ப்பமடைந்துள்ளமை பேச்சு பொருளாக மாறியுள்ளது. 17 தாதியர்களும் வரிசையாக Baby Bumps உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளதாகவும், இது தங்கள் அனைவருக்கும் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக...
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முதல் பாகத்தின் தோற்றத்திலேயே நடிக்கிறார். நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகும் படம் என்பதால் பாடல்கள்...
வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய கெப் வண்டி மோதியதில் எட்டு தேரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 13 தேரர்கள் படுகாயமடைந்துள்ளனர். முவெங் (Mueang) மாவட்டத்தின் பான் நா சி நுவான் (Ban Na...
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'அபினவ நிவஹல் பெரமுன'வின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனு, நேற்று (02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மஹேன்...
திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனிதப் படுகொலைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ‘இனியபாரதி’ என அழைக்கப்படும் கே. புஷ்பகுமாரை...
சீனி அடங்கிய திரவ உணவுகளுக்கான வர்ண குறியீட்டு லேபலிடும் உத்தரவுகளை திருத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸவினால் 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் 32ஆம் பிரிவின் கீழ் இந்த திருத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவை ஜூன் 23ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில்...
பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் மூலம் இலகுவாகக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது. நச்சுப் போதைப்பொருள் பேரழிவை நாட்டிலிருந்து ஒழிப்பதற்காகச் செயற்படுத்தப்படும் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டுச் சபை,...
2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச சுற்றுலா ஊடகமான 'பிக் 7 டிராவல்' (Big 7 Travel) நடத்திய அண்மைக்கால மதிப்பீட்டின்படி, இயற்கை அழகு, பல்லுயிர் பெருக்கம், கலாசார பாரம்பரியம், சுற்றுலா அனுபவங்கள் மற்றும் உலகளாவிய பிரபலம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த...
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரோஷியாவை 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் அணி வீழ்த்தியது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது வௌியேற்றும் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், அதிகாலை 4.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போர்த்துகல் மற்றும் குரோஷியா அணிகள்...
மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் நேற்று (2) இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர்...
அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 முதியோர்களுக்காக மொத்தம் 3,108,805,000.00 ரூபாய் பணம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70...
இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 4,386,219 ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மோசடிகள் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது....
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரியில் நீலகிரியை சேர்ந்தவர்களை விட, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில மாணவ- மாணவிகள் அதிகம் பேர் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தார். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு சொகுசு...
போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை, மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி...
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (02) காலை 6:15 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி...
அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இன்று இணைந்து கொண்டனர். அப்போது கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு தவெக துண்டை அணிவித்து வரவேற்றார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட் சத்திர...
யாழ்ப்பாணம் தொழிநுட்பவியல் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் நேற்றைய தினம்(01.07.2026) காலை 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றதை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே...
Loading posts...
All posts loaded
No more posts
