பெரம்பூர் தொகுதியில் முதல்முறையாக முதல்வர் விஜய் ஆய்வு!!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பெரம்பூர் எம்எல்ஏ ஆக தொடர்கிறார். இந்நிலையில், வெற்றி பெற்ற முதல்முறையாக தனது பெரம்பூர் தொகுதிக்கு முதல்வர் விஜய் வருகை தந்துள்ளார். முதல்வர் வருவதால் சாலையின்...

விஜய் படத்தின் FDFS காட்சி டிக்கெட் வாங்க சொன்ன அஜித்!

நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் போட்டியாளர்களாக எல்லோரும் கருதினாலும், அவர்கள் நட்புடன் தான் இருந்து வருகின்றனர். சமீபத்தில் அஜித்தின் தாயார் மறைவுக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறி இருந்தார். அந்த வீடியோவும் வைரல் ஆகி இருந்தது. அஜித் சொன்ன ஒரு விஷயத்தை பற்றி ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தற்போது பேட்டியில் கூறி...
Ad Widget

வசூல் வேட்டையை தொடங்கியுள்ள ஜனநாயகன்!!

பல தடைகளை தாண்டி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, பாபி தியோல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜனவரி 9-ஆம் தேதி இப்படம் வெளிவரவிருந்த நிலையில்...

பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக...

முதல் இடத்தை இழந்த இந்திய அணி!

இந்திய டி20 அணி கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ரோகித் சர்மா தலைமையிலும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் உலக கிண்ணங்களை அடுத்தடுத்து வென்று சாதனைப் படைத்தது. சூர்யகுமார் யாதவ் அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார். இவருக்கு முதல் இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களுக்கு 20 சதவீத கட்டணம் அறவிட டிரம்ப் திட்டம்!!

ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கடற்படைத் தடைகளை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதிபர் டிரம்ப் இட்டுள்ள முழுமையான பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: "ஹோர்முஸ் நீரிணை...

பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!

கடந்த 2025ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில், இலங்கையின் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய பிறப்புகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் அனைத்து வகையான சலுகைகளையும் வழங்கும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 2015ஆம்...

வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு!!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு ரயில்வே நிர்வாகம் இதற்கு முன்னர் எடுத்திருந்த தீர்மானத்தை மாற்றி, இன்று (14) முதல் அதனை வழமை போல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் இயந்திரத் தொகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, இதற்கு முன்னர் செவ்வாய் மற்றும்...

அனைத்து அரச ஊழியர்களுக்குமான அறிவித்தல்!!

அனைத்து அரச ஊழியர்களும் தங்களது அக்ரஹார (Agrahara) காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதற்கமைய, பயளாளிகள் அனைவரும் தங்களது விபரங்களை விரைவாக புதுப்பிக்குமாறு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் கலாநிதி விஷாகா வனசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். ஓய்வூதியத்திற்கு தகுதிபெற்ற அரச மற்றும் மாகாண அரச சேவையைச்...

ஐக்கிய அரபு இராஜ்ஜிய எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்!!

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது ஈரான் நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில், இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்த எண்மரில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களில் அறுவர் இந்தியப் பிரஜைகள் என்பதுடன் இருவர் உக்ரைன்...

ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு???

ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தற்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், அந்த கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மீரிகம வைத்தியசாலையின் புதிய சிகிச்சைப் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்குக்...

யாழ்ப்பாணத்தின் தனித்துவமான சுவைக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்!

‘டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்’ (Travel And Tour World) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 50 உணவுக்கான சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்தத் தரவரிசையில் முதலிடத்தை மெக்சிகோவும், இரண்டாம் இடத்தை இத்தாலியும், 3ஆம் இடத்தை ஸ்பெயினும் பெற்றுள்ளதுடன், இலங்கை 50 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. உணவுக் கலாசார...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000-ஐ நெருங்கியது!!

நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (13) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 69,951 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கடந்த 12 ஆம் திகதி வரை பதிவாகியிருந்த...

நீர்கொழும்பு சிறை மோதல்: மேலும் 2 அதிகாரிகள் உயிரிழப்பு!!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது....

வடக்கு மாகாண வரலாற்றில் முதற்தடவையாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி!!

வடக்கு மாகாண வரலாற்றில் முதற்தடவையாக, சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு இடையிலான 'மாகாண விளையாட்டுப் போட்டி - 2026' யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வடக்கு மாகாண நன்னடத்தைப் பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாபெரும் விளையாட்டு விழா, கடந்த (11.07.2026) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம் துரையப்பா...

திண்டுக்கல் லியோனியின் பதவியை பறித்த முதல்வர் விஜய்!!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக இருந்த திண்டுக்கல் லியோனியின் பதவி பறிக்கப்பட்டு, புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பேச்சாளர் லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்ததைத் தொடர்ந்து, புதிய தலைவர்...

பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிமித்தம், பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 24ஆம்...

ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (12) வரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,672 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும், கடந்த 11 ஆம் திகதி ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,071 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய...

நடிகர் ஆர்யா மீது பொலிஸார் வழக்குப்பதிவு!

உயர் ரக திரைப்பட தயாரிப்பு உபகரணங்களை வாடகைக்கு எடுத்துவிட்டு, அதற்கான மீதி தொகையை தரவில்லை எனவும், வாடகை பாக்கியை கேட்க சென்றவரை மிரட்டியதாகவும் நடிகர் ஆர்யா உள்ளிட்ட ‘அனந்தன் காடு’ படக்குழுவைச் சேர்ந்த மூன்று பேர் மீது ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பொலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ‘தாஹிர் சினி டெக்’ நிறுவனத்திடம் அனந்தன் காடு படக்குழு...

சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் திடீர் விலகல்!

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பதவியிலிருந்து விலகியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் பரஸ்பர ஒப்புதலுடன் பிரிய முடிவு செய்துள்ளதாக சிஎஸ்கே அறிவித்துள்ளது. 2009 முதல் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட ப்ளெமிங் தலைமையில், சிஎஸ்கே 5 ஐபிஎல் கிண்ணங்கள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களை...
Loading posts...

All posts loaded

No more posts