- Tuesday
- July 14th, 2026
நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70,000 ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நேற்று (13) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 69,951 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கடந்த 12 ஆம் திகதி வரை பதிவாகியிருந்த...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது....
வடக்கு மாகாண வரலாற்றில் முதற்தடவையாக, சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு இடையிலான 'மாகாண விளையாட்டுப் போட்டி - 2026' யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வடக்கு மாகாண நன்னடத்தைப் பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாபெரும் விளையாட்டு விழா, கடந்த (11.07.2026) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம் துரையப்பா...
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக இருந்த திண்டுக்கல் லியோனியின் பதவி பறிக்கப்பட்டு, புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பேச்சாளர் லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்ததைத் தொடர்ந்து, புதிய தலைவர்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிமித்தம், பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 24ஆம்...
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (12) வரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,672 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும், கடந்த 11 ஆம் திகதி ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,071 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய...
உயர் ரக திரைப்பட தயாரிப்பு உபகரணங்களை வாடகைக்கு எடுத்துவிட்டு, அதற்கான மீதி தொகையை தரவில்லை எனவும், வாடகை பாக்கியை கேட்க சென்றவரை மிரட்டியதாகவும் நடிகர் ஆர்யா உள்ளிட்ட ‘அனந்தன் காடு’ படக்குழுவைச் சேர்ந்த மூன்று பேர் மீது ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பொலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ‘தாஹிர் சினி டெக்’ நிறுவனத்திடம் அனந்தன் காடு படக்குழு...
சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பதவியிலிருந்து விலகியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் பரஸ்பர ஒப்புதலுடன் பிரிய முடிவு செய்துள்ளதாக சிஎஸ்கே அறிவித்துள்ளது. 2009 முதல் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட ப்ளெமிங் தலைமையில், சிஎஸ்கே 5 ஐபிஎல் கிண்ணங்கள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களை...
இலங்கை வங்கி (Bank of Ceylon) காலியாகவுள்ள பயிலுநர் அபிவிருத்தி உதவியாளர் (Trainee Development Assistant) பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருகிறது. முக்கிய விபரங்கள்: விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் தேதி: 2026 ஜூலை 25 பணிபுரிய வேண்டிய மாகாணங்கள்: மத்திய, கிழக்கு, வடக்கு, வட மத்திய, வட மேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள் (இங்கு...
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமது காணிகளை இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தான் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டனர்....
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கிடையில், ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்த உலகின் மிகப்பெரிய தரவு சேகரிப்பான ‘நம்பியோ’ இணையதளம், தனது 2026 ஆம் ஆண்டின் இடைக்கால போக்குவரத்து குறியீட்டின்...
ஐரோப்பாவின் மேற்குப் பகுதியை உலுக்கிய மிகக் கடும் வெப்ப அலையினால் ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படும் யூரோமோமோ அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களின்படி,ஜூன் 22 முதல் 28...
நாட்டின் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (13) திங்கட்கிழமை வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்' இன்றைய தினம் பகல் வேளையில் இந்த மாவட்டங்களின் சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும்...
ஒரே வாரத்தில் 90-க்கும் மேற்பட்ட ரஷ்யக் கப்பல்களை உக்ரேனிய ட்ரோன்கள் (Drones) குறிவைத்துத் தாக்கியதைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்குப் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த அசோவ் கடலில் (Sea of Azov) தனது கப்பல் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க மாஸ்கோ நிர்பந்திக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் ட்ரோன் படைப் பிரிவுகளின் தலைவர் ராபர்ட் ப்ரோவ்டி இதுகுறித்து...
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த தம்பதி குணேஸ்வரன் (69), நகுலாம்பிகை (60). சென்னை விமான நிலையத்திற்கு வந்த இவர்களிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் ஆவண சரிபார்ப்பு செய்தனர். அப்போது இந்திய ஆதார் அட்டை, இந்திய வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில்...
ரசிகர்களால் கொண்டாடப்படும் பின்னணி பாடகிகளில் ஒருவர் எஸ். ஜானகி. இசை உலகில் ராணியாக திகழ்ந்து வந்த இவர் தனது 88 வயதில் காலமானார். பல தலைமுறைகளை கடந்து இவருடைய பாடல்கள் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ள நிலையில், இவருடைய மரணம் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய ஒரே மகன்...
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும், திணைக்களங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பிரதேசத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை ஆராய்வதற்கும் நோக்கமாக "ஊராட்சி முற்றம்" எனும் ஒருங்கிணைப்புக் கூட்டம், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் திரு. பத்மநாதன் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நல்லூர் பிரதேச சபையின் பிரதான...
நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பதற்காகப் பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை மூடும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு வாய்ப்பளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் டெங்கு பரவலைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின்...
2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், நடுவர் ஜோவோ பெட்ரோவுடன் ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி கோபத்தின் உச்சத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (11) நடந்த போட்டியில் சுவிச்சர்லாந்து அணியின் வீரர்களின் எண்ணிக்கை 10-ஆக குறைக்கப்பட்டது. இருந்தபோதிலும், 90...
தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவதாக அந்த நாட்டின் பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தெரிவித்துள்ளார். அதேநேரம் அங்கு தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும்...
Loading posts...
All posts loaded
No more posts
