400 இற்கும் மேற்பட்ட தாய், தந்தையர் நீதி கிடைக்காமலே இறந்துவிட்டனர்!!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச மாநாட்டினை நடாத்தவுள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,...

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பிரதான பாதை திறக்க நடவடிக்கை!

பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார். அதன்படி, பாராளுமன்ற...
Ad Widget

தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணியை மருதங்கேணி பகுதியில் சுவீகரிக்க நடவடிக்கை!

வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுபிகரிப்பு நடவடிக்கைகள் நாளை (09) இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரளுமாறும், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார் . அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட...

கடல் கடந்த தமிழ் நாகரிகம் : தாய்லாந்தில் அரிய வகை தங்க மோதிரம் கண்டுபிடிப்பு!

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அரிய தங்க முத்திரை மோதிரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவுக்குப் பின் இராஜேந்திர சோழனின் கடற்படைப் படையெடுப்புகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழர்கள் மிக நெருங்கிய வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்பைக் கொண்டிருந்தனர் என்பதற்கான உறுதியான வரலாற்றுச்...

125 ரன்களில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!!

டாஸ் தோற்று பேட்டிங் ஆட வந்து இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் ஜாஸ் பட்லர் நல்ல துவக்கம் கொடுத்தனர். பில் சால்ட் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 70 ரன்களை விளாச ஜாஸ் பட்லர் 21 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கியவர்களில் சாம் கர்ரன் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில்...

எகிப்து கால்பந்து பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

பிஃபா உலகக் கிண்ண தொடரின் ‘சுற்று 16’ நாக்-அவுட் போட்டியில் அர்ஜென்டினாவிடம் 3 - 2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறிய பிறகு, எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன் நடுவர் முடிவுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த போட்டியில், 67 ஆவது நிமிடம் வரை எகிப்து 2...

‘சிம்பு சாருடன் இணைவது விதியின் கையில் விட்டுவிட்டேன்’ – நடிகை கயாடு லோஹர்

கயாடு லோஹர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் இதயம் முரளி. ஜூலை 10-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கயாடு லோஹர். அவர் கைவசம் இம்மோர்ட்டால், I'm Game, The Paradise, மஞ்சணத்தி, சூர்யா 48 என பல திரைப்படங்கள் உள்ளன. இதில்,...

விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி!!

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் விஜய். இவர் தொடர்ந்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் தனக்கு ஆதரவாக இருந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என இப்போது அரசியலில் களமிறங்கி முதலமைச்சராக பொறுப்பேற்று நிறைய மாற்றங்கள் நிகழ்த்தி வருகிறார். இதற்கு இடையில் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ்...

அமெரிக்கத் தாக்குதலால் உலகச் சந்தையில் மீண்டும் எகிறிய கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று காலை 6.15 மணி நிலவரப்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.04 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 2.27 சதவீத வளர்ச்சியாகும். பிரெண்ட் (Brent) ரக...

மஹமோதரவில் புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், காலி - மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது. (54 ஆம் அத்தியாயமான) சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த கட்டளை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், "மஹமோதர"...

நீர்கொழும்பிலிருந்து பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கைதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் இன்று...

பாகிஸ்தான் விமானம் மாயம்!

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சரக்கு விமானம் ஒன்று மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய அரபு இராஜியத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப் பறந்து கொண்டிருந்த போயிங் 737 ரக சரக்கு விமானம், அதன் வழிகாட்டும் அமைப்பில் (Navigation System) ஏற்பட்ட கோளாறு குறித்து அறிவித்த பின்னர், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை இழந்துள்ளதாக...

சாதாரண தர விடைத்தாள் மறுபரிசீலனை விண்ணப்பம் இன்றுடன் நிறைவு!!

2025(2026) கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன் (08) நிறைவடைகிறது. கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் தாமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. வேறு வழிமுறைகள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள்...

டெங்கு அச்சுறுத்தால் மொறட்டுவை பல்கலைக்கு இரண்டு வாரம் பூட்டு!

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காரணமாக, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இரண்டு வார காலத்திற்கு மூடப்படும் என்று துணைவேந்தர் அறிவித்தார். இதற்கு அமைவாக, பல்கலைக்கழக நிர்வாகம், நேற்று (6) முதல் அமுலுக்கு வரும் வகையில், வளாகத்திற்குள் நடைபெறும் செயல்பாடுகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்,...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு நோயால் 40 பேர் உயிரிழப்பு???

நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு நோயால் 40 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது முற்றிலும் பொய் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கூறப்படுவதைப் போன்று 40 பேர் சிறைச்சாலைக்குள் டெங்கு நோய்க்குள்ளாகி உயிரிழந்திருந்தால்,...

AI குறித்த கமல் ஹாசனின் எச்சரிக்கை!! : ஆதரவு தெரிவித்த ஸ்ருதி ஹாசன்!

செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் மிதமிஞ்சிய பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உலகநாயகன் கமல்ஹாசன் விடுத்த எச்சரிக்கையை அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் முழுமையாக ஆதரித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதில் மாணவர்கள் காட்டும் அதிகப்படியான ஆர்வத்தைக் குறித்து...

ATI – Jaffna புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கோரல்!

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் (ATI - Jaffna) 2026ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கணக்கியல் (HNDA), முகாமைத்துவம் (HNDM), ஆங்கிலம் (HNDE), தகவல் தொழில்நுட்பம் (HNDIT) மற்றும் பொறியியல் சார்ந்த (Civil, Electrical, Quantity Surveying) உயர்...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக , வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (06) நடைபெற்ற ஊடக சந்திப்பின்...

இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய விபத்துத் தடுப்பு வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான (SSP) மனோஜ் ரணகலா...

ரஷ்யாவின் தீவிர தாக்குதல்: உக்ரைனில் ஏவுகணைத் தட்டுப்பாடு!

ரஷ்யாவினால் ஏவப்படும் அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கும், அவற்றை வான்பரப்பில் வைத்து அழிப்பதற்கும் தேவையான ஏவுகணைகளுக்கு உக்ரைனில் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைத் தட்டுப்பாடு காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவினால் உக்ரைன் மீது ஏவப்பட்ட 23 பாலிஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் இராணுவத்தால் அழிக்க முடியாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts