“அவருக்கு என்ன செய்யணும்னு தெரியும்!” – விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அந்தணன்

தமிழக முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் செய்திருந்த நிலையில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், அனைவருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது. அதை உட்கார்ந்து ஆராய்ந்து இதை...

கிழக்கு கடற்படை வீரர்களுடன் தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்து கொண்ட குமார் சங்கக்கார!!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான அனுபவப் பகிர்வும் பட்டறையும் (Experience Based Lecture) நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெனாண்டோ கலந்து கொண்டார். இதற்கமைய, இந்த அனுபவப் பகிர்வு விரிவுரை...
Ad Widget

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் வேலைவாய்ப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  வெற்றியடமாகவுள்ள கல்விசாரா ஊழியர் (Non-Academic) நிரந்தரப் பணியிடங்களுக்குத் தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து இணையவழி (Online) மூலம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 1. வெற்றிட விபரங்கள் (Posts & Vacancies) துணை விடுதிப் பொறுப்பாளர் (Sub Warden - Full Time, Grade II): 02 இடங்கள் கால்நடை உதவியாளர் (Livestock Assistant, Grade III):...

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI), இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சுகாதார அலுவலகத்தில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலைய...

இம்ரான் கானுக்காக குரல் கொடுத்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்!

21 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் அணித் தலைவர்கள் அடங்கிய குழுவினர், பாகிஸ்தான் முன்னாள் அணித் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு “மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் முறையான மருத்துவச் சிகிச்சை” கிடைப்பதை உறுதி செய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். ஆகஸ்ட் 23 அன்று விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோள், இம்ரான் கானின்...

ரேஸில் விபத்து : நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு?

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார், மோட்டார் வாகனப் பந்தயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். சர்வதேச அளவில் நடைபெறும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் அவர், சமீபத்தில் 'அஜித் குமார் ரேசிங்' என்ற சொந்தப் பந்தய அணியை உருவாக்கி, பல்வேறு சர்வதேசப் தொடர்களில் களம் இறக்கி...

மொத ராத்திரி திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்!!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'மொத ராத்திரி'. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், மொத ராத்திரி திரைப்படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் திரைப்படம் "நகைச்சுவை விருந்து" என்று...

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்!!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில்...

இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயயிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட சிந்தி சமூகத்தை சேர்ந்த மணப்பெண்கள் ஓராண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூகக் குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்கள் அல்லது சமூகத்தினருக்கு தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பது வழக்கமான ஒன்று. கடந்த...

இமாச்சல பிரதேசம், லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இன்று (24) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பா பகுதியில் அதிகாலை 3.40 மணியளவில் ரிக்டர் அளவில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 8 கி.மீ.கடல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,...

உசேன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோக்கள்!!

சீன தலைநகர் பீஜிங்கில் மனித வடிவ ரோபோக்களுக்கான 2 ஆவது உலக விளையாட்டுப் போட்டி கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகியது. தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ் உள்பட 51 வகையான போட்டிகள் நடக்கின்றன. [caption id="attachment_129080" align="aligncenter" width="760"] created by photogrid[/caption] இதில் 16 நாடுகளைச் சேர்ந்த 2,056 மனித வடிவ ரோபோக்கள்...

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவச்சீட்டு!!

தனியார் துறை ஊழியர்கள் இணைய வழியில் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறையை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்காக அண்மையில் இணையவழி பருவச்சீட்டு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில், இதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் உஷ்ண எச்சரிக்கை!!

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு, மொணராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்...

யாழ். மாவட்ட செயலக்கத்தின் முக்கிய அறிவிப்பு….

பண்டத்தரிப்பு பிரான்பற்று கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நேற்று இரவு (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது, வாணவேடிக்கையால் ஏற்பட்ட புகை மற்றும் ஒளி கூடிய மின் விளக்குகளின் பயன்பாடு காரணமாக பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை 127 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளதாக கண் வைத்திய...

யாழில் திருவிழா லேசர் வெளிச்சத்தால் நூற்றுக்கணக்கானோருக்கு கண் பாதிப்பு!!

பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயத்தில் நேற்றைய உற்சவத்தின்போது அதிக வானவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு ஆலயத்தில் இசை நிகழ்வின்போது அதிக சக்திகொண்ட லேசர் லைற் வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன இதனால் கண்ணில் பாதிப்படைந்த...

கவின் – நயன்தாரா இணையும் ‘ஹாய்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா மற்றும் இளம் முன்னணி நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்தத் திரைப்படம் ஒரு முழுமையான காதல் மற்றும் குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'ஹாய்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கவின் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து தமிழ்...

வலி. தெற்குக்கு பிரதேச சபைக்கு காலக்கெடு விதித்துள்ள வலி.வடக்கு பிரதேச சபை!!

வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை மீள அள்ள வேண்டும் என காலக்கெடு விதித்து வலி. வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை...

நெடுந்தீவுக்கு அதிசொகுசு படகு!!

சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின்...

நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்!!

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் முதலாம் பிரிவு கால்பந்தாட்டப் போட்டியில் தனது கன்னி முயற்சியிலேயே நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனானது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பதுளை தர்மதூத்த கல்லூரியை 4 - 3 என்ற பெனல்டி முறையில்...

அதிப​ரை கொன்றுவிட்டு சுற்றுலா சென்ற மாணவர்கள்!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 48 வயதான பாடசாலை அதிபர் 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 10ஆம் தரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நாகார்ஜுனா பொதுப் பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான கல்லு ரூபா ரெட்டி, கடந்த 12ஆம் திகதி தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்....
Loading posts...

All posts loaded

No more posts