தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் (02) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளை அடிக்கல் நாட்டி...

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் (VTA) வெற்றிடமாகவுள்ள பல்வேறு உயர் மற்றும் நிர்வாகப் பதவிகளுக்காக தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நிர்வாகம், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மேலாண்மைத் துறைகளில் திறமையும் தகுதியும் கொண்ட நபர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த வேலைவாய்ப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை...
Ad Widget

காணி விடுவிப்பு கோரி ஏழாவது வாரமாகவும் போராட்டம்!!!

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது...

ஜெயிலர் 2ல் நடித்தது ஏன்: விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி ஒருகாலத்தில் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட அவர் கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்கள் தான் அதிகம் வரும். அந்த படங்கள் தோல்வி அடைந்தால், அது அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தின. அதனால் நான் இனிமேல் கெஸ்ட் ரோலில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார் விஜய் சேதுபதி. அதன் பிறகு...

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை இன்று மீள ஆரம்பம்!!

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று (3) முதல் மீண்டும் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ​ எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு எதையும் அவர் நிர்ணயிக்கவில்லை. ​ ஹோர்முஸ் நீரிணையை விரைவாக மீண்டும் திறப்பது மற்றும் தெஹ்ரானின் அணுசக்தித் திறன் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான உடன்பாட்டை எட்டும் நோக்கில்,...

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ​ நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். ​அதற்கமைய அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தங்களது பாடசாலைகளுக்கான விடுமுறையை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எடுக்க...

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!!

மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ​மோதலுக்கான காரணங்களைக் கண்டறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ​சிறைச்சாலையின் பெருமளவிலான சொத்துக்களைக் கைதிகள் அழித்துள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​பெரும்பாலான கட்டடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகளுக்குக் பலத்த...

கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (3)சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. ​இதற்கமைய, ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.67 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.27 அமெரிக்க டொலராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. ​ஈரானுடன் புதிய பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோருக்கு மணிமண்டபம்

மறைந்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகள் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ் இருவருக்கும் மணிமண்டபம், மார்பளவு சிலை வைக்க திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். ​ இதற்காக முதலில் அவர்களுக்கு ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம் என்கிற நிகழ்ச்சியை வருகிற 16ம் திகதி கலைவாணர் அரங்கில் நடத்த உள்ளனர். ​ தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்...

மலிவு விலைகளில் கூட்டுறவுச் சங்கங்களூடாக அத்தியாவசிய பொருட்கள்!

உள்நாட்டுத் தொழில்களை பலப்படுத்தி, மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்கும் நோக்கில், இலங்கை நுகர்வோர் கூட்டுறவுச் சமாசம், லங்கா சுகர் கம்பனி மற்றும் பி.சி.சி லங்கா நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. கைத்தொழில் அமைச்சு இந்நிறுவனங்களுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்நிகழ்வு அண்மையில் நாரஹேன்பிட்டியிலுள்ள கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது. இப்புதிய திட்டத்தின் கீழ்,...

வட்டுவாகல், கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு...

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது!

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது. மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினிப் புலனாய்வுப் பிரிவு இன்று (31) மேற்கொண்ட நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட அதிகாரி கைது செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும்...

இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Nilantha Premaratne) இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன இராணுவத் தலைமையகத்தில் 2026 ஜுன்...

11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி 2027 ஜனவரியில்!

இலங்கை சாரணர் இயக்கம் ஏற்பாடு செய்யும் 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் முன்னேற்பாடுகள் மற்றும் அதன் தற்போதைய முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை சாரணர் இயக்கத்தின் 115ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 11ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்படும் தேசிய சாரணர் ஜம்போரி, 2027 ஜனவரி மாதம் 17ஆம்...

தேசிய சேமிப்பு வங்கியில் (NSB) புதிய வேலை வாய்ப்புகள்!

இலங்கை தேசிய சேமிப்பு வங்கி (National Savings Bank) வெற்றிடமாகவுள்ள 3 முக்கிய பதவிகளுக்கான புதிய வேலை வாய்ப்பு அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வழங்கப்பட்டுள்ள பதவிகள்: Junior Executive (IT) - Grade IV Executive - Card Operations - Grade III Class III Deputy Regional Security...

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன...

எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

‘எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருக்க வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் புத்தி மரம்பே எச்சரித்துள்ளார். பசிபிக் பெருங்கடல் பகுதியில் தற்போது உருவாகியுள்ள எல் நினோ நிலைமை இன்னும் பலவீனமான கட்டத்தில் இருந்தாலும், எதிர்காலத்தில் அது மேலும் வலுப்பெறக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்....

விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல் மோசடி!!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நேற்றையதினம் பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில்...

தனியார் சந்தைக்கு போட்டியாக கூட்டுறவு சங்கங்களை நவீனமயமாக்க அரசு விரிவான வேலைத்திட்டம்!!

இலங்கையில் கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்து வந்த கூட்டுறவுச் சங்கங்களை மறுசீரமைத்து அதனை நவீன தனியார் சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரிவான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்று வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (31) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற...

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு!

புங்குடுதீவுப் பகுதியில் பனை வெட்டச் சென்ற முதியவர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 67 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; உயிரிழந்த முதியவர் பனை வெட்டுவதற்காகப் புங்குடுதீவு காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராதவிதமாக அவரைக் கருங்குளவிகள் தீவிரமாகக் கொட்டியுள்ளன. இதனைத்...
Loading posts...

All posts loaded

No more posts