இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

முல்லைத்தீவு, நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முழுமையாக உடைந்துள்ளது. இதனால், குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாலம் உடைந்ததன் காரணமாக முல்லைத்தீவிலிருந்து மணலாறு பகுதிக்கு, முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு, முல்லைத்தீவிலிருந்து கோக்கிலாய் பகுதிக்குமான போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்டிய...
Ad Widget

யாழில் மூன்று நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு!

அல்வாய் கிழக்கை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனொருவன் மூன்று நாட்கள் தொடர் காய்ச்சலின் காரணாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மூன்று நாள் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனை , தாயார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

நெடுந்தீவு மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சிற்று காலநிலை காரணமாக கடற்போக்குவரத்து பாதிக்கப்படுள்ளதையடுத்து நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்கும்படி நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையை தொடர்ந்து பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ் போதாக வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகளை உடனடியாக மாற்றம“ செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. எனவே நெடுந்தீவுப் மக்கள் அனைவரையும்...

அவசர வானிலை எச்சரிக்கை..200 மி.மீ இற்கு அதிகமான மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் (அட்சரேகை 5.9°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E இற்கு அருகில்) மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தத் தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கிச் சாய்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த...

யாழில் அனர்த்த உதவிக்கு 24 மணி நேர அவசர இலக்கம் அறிவிப்பு

சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னாயத்தங்கள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று (26) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மு.ப 10.00 மணிக்கு நடைபெற்ற இக் கலந்துரையாடலின் முடிவில், அனர்த்தத்தின் போது பொதுமக்கள்...

உயர் தரப்பரீட்சை நடைபெறாது – முக்கிய அறிவிப்பு !

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று வியாழக்கிழமை (27) மற்றும் நாளை வெள்ளிக்கிழமை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாதென பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக வெளியிடப்பட்டுள்ள விஷேட அறிவித்தல் மூலம் இதனை தெரிவித்துள்ள அவர், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை...

யாழில் இளைஞர் படுகொலை: அம்பாறை இளைஞர்கள் கைது!!

பிரான்ஸிலிருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில், அம்பாறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞரே கடந்த செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்கள் அம்பாறைப்...

யாழில் பொலிஸாரின் கெடுபிடி!!

மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் புதன்கிழமையும் மாவீரர் நாள் நாளை வியாழக்கிழமையும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் அதற்கான அலங்கரிப்பு பணியில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை...

பொலீஸ் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டோர் கண்காணிப்புத் தகவல் அமைப்பு அறிமுகம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் "டிஜிற்றல் ஶ்ரீலங்கா" செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக இலங்கையில் குற்றவியல் அல்லது போக்குவரத்து விதி மீறல் குற்றங்களுக்காகக் குற்றஞ்சாட்டப்படும், கைது செய்யப்படுபவர்களின் விபரங்களை உடனடியாகக் கண்டறிந்து விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கும், குற்றமற்றவர் எனின் அவரை விரைவாக விடுதலை செய்வவதற்கும் ஏற்ற வகையில் பொலீஸ் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டோர் கண்காணிப்புத் தகவல் அமைப்பு (Arrested...

இன்று முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு!

இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும்...

ஆசியர் சங்கம் எதிர்வரும் 12 ஆம் திகதி நாடளாவிய ரீதியான பணிபகிஷ்கரிப்பு!

எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை ஆசியர் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியான பணிபகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நேற்று (24) யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில்...

காங்கேசன்துறையில் கொலை வழக்குகளில் தேடப்பட்ட முக்கிய நபர் கைது!

காங்கேசன்துறை பகுதியில் தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவான் பகுதியில், ஒருவர் தாக்கப்பட்டு, காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியவாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், திங்கட்கிழமை (24) காங்கேசன்துறை - கீரிமலை பகுதியில்...

யாழில் இன்று முதல் புதிய பேருந்து சேவை!!

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு 782 வழித்தட பேருந்து சேவையில் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு - காரைநகர் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து கொழும்பில் இருந்து வந்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றியவாறு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வரும்....

இன்றும் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழை!

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை நாளை (25) ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில்...

யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு குழப்பம்; நினைவுக்கல் திறப்பு நிகழ்வை தவிர்த்த அமைச்சர்

நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க...

எம்.பி அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல்?

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று (21) பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் என்பவரே தனக்கு இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாக இராமநாதன் அர்ச்சுனா இன்று...

யாழில் 4 பிள்ளைகளின் தந்தை அடித்துக் கொலை!

அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கள்ளுத்தவறணை ஒன்றில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். நேற்று (20) மாலை, புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றுக்கு அவர் கள்ளு அருந்தச் சென்றபோது, அங்கு கள்ளு அருந்திக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர்...

வட மாகாணத்தில் அதிகளவான சைபர் குற்றங்கள் பதிவு!

நாளொன்றுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 25 முறைப்பாடுகள் இலங்கையில் பதிவு செய்யப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2026 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். அவரது கூற்றுப்படி, இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் வட மாகாணத்தில் பாதிவாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....

யாரை திருமணம் முடித்துள்ளேன் என்றும் கூற முடியாதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்தப்போவதாக கூறுகிறார்கள் – இளங்குமரன்

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற தமிழரின் கலாசாரத்தை கடைப்பிடிக்காது, யாரை திருமணம் முடித்துள்ளேன் என்பதை கூட கூற முடியாதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்தப்போவதாக கூறிக்கொண்டிருக்கின்றனர். இவரின் வெற்றுப்பேச்சுக்களால் யாழ். மாவட்டம் முன்னேறாது என்பதை கூறிக்கொள்கின்றேன் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான...
Loading posts...

All posts loaded

No more posts