- Wednesday
- July 22nd, 2026
டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதனுடன் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 77,000 ஐ கடந்துள்ளது
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (20) நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38 ஆவது நாளான நேற்று புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம்...
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (20) வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்ததோடு, அவர்களுள் பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 199,598 ஆகும். மேலும் 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்குவர். நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 1,669 பரீட்சை...
மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேரர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில்...
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இந்த வரி விதிப்பு 30 நாட்களுக்குள் அமுல்படுத்தப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க வர்த்தகக் கொள்கைக்கு எதிராக கனடா செயல்படுவதன் காரணமாகவே இந்த புதிய வரி விதிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உற்பத்தி...
நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பல...
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. இதன்படி, நேற்று (20) முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் எதிர்கால பணி வெற்றிடங்களுக்கு தகுதியான நபர்களைப் பரிந்துரைப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதன்படி, அரசியலமைப்பு சபை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது. ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான பரிந்துரை’ என்ற விரைவு இணைப்பின் கீழ் இலங்கை பாராளுமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தின்படி விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட வேண்டும். பூர்த்தி...
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணைக்குழு ஜப்பானின் 'டகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ்' நிறுவனம் உருவாக்கிய 'QDENGA' என்ற டெங்கு தடுப்பூசிக்குச் சந்தை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் தடுப்பூசியை விற்பனை செய்வதற்கான இந்த சந்தை அனுமதி இந்தியாவிலுள்ள தகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 4 முதல் 60...
பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க, அத்துடன் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்டோர் இந்த...
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள மங்களாம்பட்டியில், மழையை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோதத் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அந்த மரபுப்படி, இந்த ஆண்டிற்கான 'ஆடிப் படையல்' திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி, கிராம மக்கள் பலரும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக, மதுரைவீரன் சுவாமிக்குச் சேவல்களைப்...
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார், பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, 1997 ஆம்...
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து புங்குடுதீவு மீனவர்கள் கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புங்குடுதீவு ஆலடி சந்தியில் இருந்து நேற்று காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஒரிரு நாட்களுக்கு முன்னர் புங்குடுதீவு மீனவர்கள் நெடுந்தீவிற்கு அண்மித்த பகுதியில் நண்டு வலைகளை வீசிவிட்டு காத்திருந்த போது, இந்திய மீனவர்களின் அத்துமீறி நுழைந்து மீனவர்களின் வலைகளை...
குறிப்பிட்ட வருமான வரிப் பொறுப்புகளைத் திட்டமிட்டு நிறைவேற்றத் தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் திருத்தச் சட்டத்தின் மூலம், அதற்கான அதிகாரம் உள்நாட்டு இறைவரித் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. வருமான...
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்கள் மேற்காசியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கட்கிழமை (20) மசகு எண்ணெய் விலை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை வழியிலான எரிபொருள் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகளே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்....
பல தடைகளை தாண்டி முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ஜனநாயகன்...
நடிகை ஜோதிகா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்த போவதாகவும் கூறப்பட்டது. அவர் நடித்த ஹிந்தி படத்திற்க்கு தேசிய விருது தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜ்குமார் ராவ் உடன் ஜோதிகா நடித்து இருந்த ஸ்ரீகாந்த் என்ற படம் சிறந்த ஹிந்தி படமாக விருது பெறுகிறது....
ரயில் பயணத்தின் போது செல்பி படம் எடுக்க முற்பட்ட துருக்கி நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். நேற்று (19) முற்பகல் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிய ரயில் பயணித்தின் போது குறித்த யுவதி அம்பேவளை பகுதியில் வைத்து செல்பி எடுக்க முற்பட்ட போதே, அதிலிருந்து தவறி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான யுவதி உள்ளிட்ட...
செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (19) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன. நேற்றைய அகழ்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டன. இதன்மூலம், செம்மணி மனித புதைகுழி அகழ்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 446 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு...
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் பிலியந்தலை மற்றும் தெஹிவளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 2 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடனேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இவ்வாறு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக...
Loading posts...
All posts loaded
No more posts
