அர்ச்சுனாவை வெளியேறச் சொல்ல அமைச்சருக்கு அதிகாரமில்லை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள் சார்பில் கேள்விகளை எழுப்புவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள்...

செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் 420 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 420 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 34 வது நாளான நேற்று (16) 6 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்...
Ad Widget

மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்கா

அமெரிக்காவிற்கு செல்லும் சர்வதேச மாணவர்கள், கலாசார பரிமாற்றத் திட்ட பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருக்கக்கூடிய வீசா காலக்கெடுவை கடுமையாகக் குறைத்து, நிலையான ஒரு காலப்பகுதியை நிர்ணயிப்பதற்கான புதிய இறுதி விதியை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை வியாழக்கிழமை (16) வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதிாக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக்கப்பட்டு...

தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு சிறந்த அறிகுறி!

தமிழ் பேசும் ஆறு அரசியல் தரப்புகள் ஒன்றிணைவது தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான அறிகுறியாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். சிங்கள மொழி பேசும் கட்சிகளிடமிருந்து தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்...

சுகாதார துவாய்களுக்கு SLS தரச்சான்றிதழ் கட்டாயம்!!

SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச்செல்லல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் தடைசெய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச்...

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று (16) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 73,455 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் 50 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. நேற்றைய...

மீண்டும் கொரோனா!! ஒரே மாதத்தில் 4 பேர் உயிரிழப்பு!!

ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை இந்தியா முழுவதும் 12 பேருக்கு கோவிட் - 19 வைரஸ் தொற்று ஏற்பட்டது என்றும், அவர்களில் நான்கு பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர் என்று ஆந்திர பிரதேச மாநில சுகாதார ஆணையர் ஜி. வீரபாண்டியன் தெரிவித்தார். இறந்தவர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்சினைகள்...

ராகுல் டிராவிட்-ஐ முந்திய விராட் கோலி!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார். SENA (South Africa, England, New Zealand & Australia) நாடுகளில் அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி அடித்த...

மியான்மர் கடற்பகுதியில் 500க்கு மேற்ப்பட்டோர் உயிரிழப்பு??

மியான்மர் கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று ஐ.நா. அச்சம் தெரிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரைச் சேர்ந்த அகதிகள், பாதுகாப்பு மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேடி ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில், 500 இற்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற 02 படகுகள் சமீப...

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் ஐவர் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல்களில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவின் வடக்கில் உள்ள துஃபா பகுதிக்கு அருகே நடந்த இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், கிழக்கு காசா நகரின் ஸைத்தூன் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த பீரங்கித் தாக்குதலில் மூன்றாவது நபர் கொல்லப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்....

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மர்மமான முறையில் மரணம்!!

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி. டி. விக்ரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தற்கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய சி. டி. விக்ரமரத்ன, இலங்கையின் 35ஆவது...

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் கவனத்திற்கு!!

தேசிய பாடசாலை ஆசிரியர்களின் (2026) வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் இணையவழியில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்றத்திற்காக விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் நேற்றைய தினம் 16ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க...

2026 LPL இன்று கோலாகல ஆரம்பம்!!

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், லங்கா பிறீமியர் லீக் (LPL) 2026 தொடரின் தொடக்க விழா இன்று (17) கொழும்பு SSC மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. கிரிக்கெட், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் தேசியப் பெருமிதம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின்...

ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்!

ஊழல் புகார்களில் சிக்கினால் பதவி பறிக்கப்படும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (16) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு...

பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி!!

தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த தமிழ்த் திறன் போட்டிகள் – 2026: பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி அறிவிப்பு!  தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த தமிழ்த் திறன் போட்டிகள் – 2026 இன் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய மட்டக் கட்டுரைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. திலீபன் ஆவணக்காப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில் இலங்கையிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்துத்...

பொதுச்சேவை பதவிகளுக்கான போட்டிப் பரீட்சை அறிவிப்பு!

வடக்கு மாகாண பொதுச்சேவையிலுள்ள குறிப்பிட்ட பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகள் - 2026 தொடர்பான அறிவித்தலை வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலின்படி, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவி இடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2026.07.28 ஆகும். விண்ணப்பம் கோரப்பட்டுள்ள...

காக்கைதீவில் உள்ள கழிவு மீள்சுழற்சி மையத்தை அகற்றுமாறு பிரதேச மக்கள் போராட்டம்!!

யாழ்ப்பாணம், காக்கைதீவு பகுதியில் உள்ள கழிவு மீள்சுழற்சி மையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்பாக நேற்றைய தினம் புதன்கிழமை (15) காலை குறித்த போராட்டம் நடத்தப்பட்டது. மாநகர சபையின் கழிவு மீள்சுழற்சி மையம் காக்கைதீவு பகுதியில் அமைந்துள்ளது. தற்போது அங்கு மீள்சுழற்சிகள் இடம்பெறாமல் குப்பைகள்...

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற கபடி பெண்கள் அணிக்கு கெளரவிப்பு!

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36 ஆவது போட்டி மாத்தறையில் இம் மாதம் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெற்றதற்கு அமைவாக, இவ் போட்டித் தொடரின் கபடி போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணியினர் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றமைக்காக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் நேற்றைய தினம்...

மனைவியின் கைபேசித் தாக்குதலால் கணவர் மரணம்!

குடும்பத் தகராறு காரணமாக மனைவி தனது கைபேசியை கணவர் மீது வீசியதில் அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தம்பதியினருக்கு இடையே அவர்களது வீட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த மனைவி, தனது கணவரின் தலையில் கைபேசியால் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார். காயமடைந்த கணவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரடைந்ததை அடுத்து, மருத்துவர்கள்...

3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!!

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில், ஒரே நாளில் 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "சட்டம் அனைவருக்கும்...
Loading posts...

All posts loaded

No more posts