யாழில் கடந்த மூன்று மாதங்களில் 80 பேர் தற்கொலை!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதுடன், அதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று...

இந்திய தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. இதில் அனுபவம் வாய்ந்த விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் டிக்வெல்லா மீண்டும் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார். தனஞ்சய டி சில்வா அணிக்குத் தலைமை தாங்குவார், அதேவேளையில் கமிந்து மெண்டிஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காயம்...
Ad Widget

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல்!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் வேறு பகுதி மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றையதினம் 12 திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது....

கீரிமலையில் குப்பை விவகாரம் – துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்!

கீரிமலை பகுதியில் கொட்டப்படுகின்ற குப்பைகளை அகற்றுமாறு கோரி, ஆடி அமாவாசை தினமான நேற்றைய தினம் கவனயீர்ப்பு நடவடிக்கையாக துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு...

9 இந்திய மீனவர்கள் கைது!!

தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (12) இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 9 இந்திய கடற்றொழிலாளர்களும், அவர்களின் படகுகளுடன் மேலதிக...

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் சீமான்!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் பராசக்தி. இந்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியானது, பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தன. பராசக்தி படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் சேயோன். தாய் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் தான் படம் தயாராகி வருகிறது. கமல்ஹாசன்...

எல்லோரின் ஆசையையும் நிறைவேற்றுவாரா தளபதி!!

தளபதி விஜய் நடிப்பில் அவரின் கடைசி படமான ஜனநாயகன் பல தடைகளை தாண்டி கடந்த மாதம் திரைக்கு வந்தது. இந்த படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனது அனைவரும் அறிந்தது தான். அப்படி படம் லீக் ஆகியும் உலகம் முழுவதும் இந்த படம் ரூ 300 கோடி வசூலை குவிக்க, கண்டிப்பாக இந்த சாதனை எல்லாம்...

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (12) நடைபெற்றது. இதன்போது, 05 மனித எலும்புக்கூடு இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் அகழ்வு...

இளைஞர்கள் மத்தியில் குடல் நோய்கள் அதிகரிப்பு!!

இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார். இளம் தலைமுறையினர் செயற்கை உணவுகளை அதிகம் உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதே இந்த நிலைமைக்குக் காரணம் என அவர் கூறுகிறார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

ஜப்பானில் இலங்கை இளைஞரை கொலை செய்த நண்பன்!!

ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கொலையை அவருடன் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட...

உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரிப்பு!!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 277 ரூபா உயர்வாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்சத் தொகையே உத்தியோகபூர்வ வறுமைக்கோடு மூலம்...

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் பதவிப்பிரமாணம்!!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இராஜாங்கத் திணைக்களத்தில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் நீண்டகால அனுபவம் கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான இவர், இலங்கை – அமெரிக்கா...

செம்மணி வீதியை தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பம்!!

யாழ். நகரின் முக்கிய நுழைவாயில் பகுதிகளில் ஒன்றான செம்மணி வீதியில் காணப்படும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை அகற்றுவதுடன், வீதியோரங்களில் வளர்ந்துள்ள சிறு புற்கள் மற்றும் தேவையற்ற தாவரங்களை அகற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை நல்லூர் பிரதேச சபை ஆரம்பித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செம்மணி வீதிப் பகுதியில் காணப்பட்ட பற்றைகள் வெட்டி அகற்றப்பட்டு, குறித்த...

டெங்கு மரணங்கள் 68ஆக உயர்வு!! 91,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.98% ஆனோர், அதாவது 48,244 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியாக அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கு...

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் பதவி விலகத் தீர்மானம்!!

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) இம்மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதற்காகவே அவர் இந்தப் பதவியிலிருந்து விலகுவதாகவும், அந்த முடிவை முழுமையாகப் புரிந்துகொண்டு மதிப்பளிப்பதாகவும் ஜனாதிபதி தனது சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும்...

கருப்பு சாதனையை முறியடித்த ஜனநாயகன்!!

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜனநாயகன் திரைப்படம், ரிலீஸ் ஆன மூன்றே வாரத்தில் கருப்பு படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்து உள்ளது. தமிழ் சினிமாவில் 2026 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்க படங்களில் ஒன்று தான் ஜனநாயகன். விஜய், ஹீரோவாக நடித்த கடைசி படம் என்பதால் இதன்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு...

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதலிடம்!!

தமிழக சட்டப் பேரவையில் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதலிடம் அளிக்கும் வகையில் முதல்வர் விஜயால் முன்மொழிக்கப்பட்ட தனி தீர்மானத்திற்கு திமுக மற்றும் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கட்டாயம் முதலில்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சை நிறைவடைந்து ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பரீட்சை மையங்களில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைத்...

சீனாவில் 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!!

சீனாவில் டொல்பின் சூறாவளி பெரும் தாக்கத்தையும் சேதத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வரும் நிலையில், ஷாங்காய் நகர் உட்பட கிழக்குப் பகுதிகளிலிருந்து 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை அந்நாட்டு அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டொல்பின் புயல் காரணமாக பலத்த மழை பெய்து அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்று...

துணை மருத்துவ சேவையின் 8 பயிற்சிப் பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

நோயாளி பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக, துணை மருத்துவ சேவையின் (Paramedical) 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. துணை மருத்துவ சேவையின் (Paramedical) புதிய பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, துணை மருத்துவ சேவையின் கீழ்வரும்...
Loading posts...

All posts loaded

No more posts