- Thursday
- August 20th, 2026
2028 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பில் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எழுதிய “Yudha Dekakata Ura Dee” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர்...
இந்தியா தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட மீன் பிடி விசைப்படகு முந்தைய ஆட்சியில் வழங்கிய நிவாரணத் தொகை போல இந்த ஆட்சியிலும் நிவாரணத் தொகை...
ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் மாதம் வெளிவரவிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார்....
காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிக மோசமான நிலையில் இலங்கை இருக்கிறது. இப் போட்டியில் தோல்வியைத் தவிர்ப்பதாக இருந்தால் போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் இலங்கை கடுமையாக போராட வெண்டிவரும். ஆனால், 6 விக்கெட்கள் மாத்திரமே மீதம் இருப்பதால் இலங்கை முழு நாளும் தாக்குப்...
பிலிப்பைன்ஸில் பாடசாலையொன்றில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியரை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததோடு, பின்னர், தாக்குதல் நடத்திய மாணவர், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தாக்குதல் நடத்திய மாணவர், தான் தாக்குவதை நேரலையாக காட்சிப்படுத்துவதற்காக ஒரு கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றதாக...
செம்மணி மனித புதைகுழியில் கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன்கிழமை (19) இறுதி நாள் அகழ்வு பணிகள் நடைபெறவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (18) முன்னெடுப்பட்டன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க...
சமூக வலைத்தளங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, உறுதிப்படுத்தப்படாத பொய்த் தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளம் வாயிலாக காணொளி ஒன்றை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி,...
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின்கீழ் 19 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் (உண்டியல் முறையில்) பணப் பரிவர்த்தனை செய்யும் நபர் ஒருவர் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (18) மாலை வேல்லவீதி பொலிஸ் பிரிவில் இந்தச்...
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார், 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கைகோர்க்கும் புதிய திரைப்படத்திற்கு 'டேர் டெவில்' என தலைப்பிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமாருக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அவர் 'பிரேவ் ஹார்ட்ஸ்...
இசையமைப்பாளர் அனிருத்தும் பிரபல தயாரிப்பாளர் மதுரம் தொழிலதிபரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து இவர்கள் இருவரிடமிருந்தும் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், பிரபல நடிகர் YG மகேந்திரன் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்பதை உறுதி செய்தார். இந்நிலையில்,...
காலி மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று (18), களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் உபாதைக்கு உள்ளானார். எல்லைக் கோட்டிற்கு அருகில் நான்கோட்டத்தை (four) தடுக்க முயன்ற போது, அவரது வலது தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் உபாதை...
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்து வெற்றிகரமாக 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான கோலி, உலகக் கிரிக்கெட்டின் முன்னணி துடுப்பாட்ட வீரராக உருவெடுத்துள்ளார். டி20 போட்டிகள் மற்றும்...
கர்நாடகாவில் 3 தமிழர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு அரசும் தமிழக அரசியல் தலைவர்களும் தலையிடக் கூடாது என்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகா வனத்துறையினரால் 3 தமிழர்கள் அநியாயமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின்...
தமிழக முதலமைச்சர் விஜயின் மகனும், இளம் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் திகதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக இத்திரைப்படம் ஜூலை 31 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப மற்றும்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை ஒன்றுக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (18) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் ஆஜரானதை அடுத்து முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர்...
வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தபட்டதாக கூறி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளார். பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்ரன் சுதாகர், வேலணை பிரதேச சபை உறுப்பினர்...
யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பிறவுண் வீதியில் உள்ள தனது வீட்டினுள் 14ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய இளைஞன் ஒருவர் முயன்றதாக பெண்ணொருவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாண...
கூட்டுறவு வங்கிகளில் ரூ 75,000 ரூபாய் வரையிலான விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஒரு லட்சம் வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு 75,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தொடர் நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் நடைபெற்றது. இதில்...
யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தார். இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை எழுதும்போது மயக்கம் ஏற்பட்டது. இதன்போது அவரது...
Loading posts...
All posts loaded
No more posts
