- Thursday
- September 3rd, 2026
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதலமைச்சர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, ஏழை எளிய மக்களிடம் நிதியுதவி மற்றும் கடன் வாங்கித் தருவதாகக்...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்...
இந்தியாவின் பஞ்சாப் ஷஹீத் பகத் சிங் நகர் பகுதியில் இன்று (02) அதிகாலை 1.44 மணியளவில் ரிக்டர் அளவில் 3 நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 31.124 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.040 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவக் காலத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2026 எதிர்வரும் செப்டம்பர் 5-ஆம் திகதி முதல் 9-ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நல்லூர் கோவிலுக்கு அருகில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இப்புத்தகத் திருவிழாவில், 30-க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்களில்...
தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்போது வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் மூழ்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எல் நினோ காலநிலை நிலைமை குறித்து...
யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து மீள கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5...
வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் இயங்கும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் காணப்படும் 20 கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (தரம் III) வெற்றிடங்களை நிரப்புவதற்காகத் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முக்கிய விபரங்கள்: பதவியின் பெயர்: கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் (தரம் III) வெற்றிடங்களின் எண்ணிக்கை: 20 விண்ணப்பிக்கும் கடைசித் திகதி: 2026 செப்டம்பர்...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில், புதுக்குடியிருப்பு பங்கிற்ற்கு உட்பட்ட சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி எஸ். அஜந்தன் தலைமையிலும், முல்லைத்தீவு மாவட்ட குருமுதல்வர் இராஜசிங்கம் அடிகளார் அவர்களது ஆன்மீகத் தலைமையிலும் இடம்பெற்ற இந்த மதிப்பளிப்பு...
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. சுமார் ஒரு மாத காலத்தில் முதல் முறையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் மேற்காசியாவில் போர்ச் சூழல் ஆறாவது மாதத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ்...
இந்தியாவின் தோல்ப்பூர் மாவட்டம் நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ரவி குமார் (21), அவரது சகோதரிகள் மனோரமா (22), போட்டோ (25) மற்றும் அவர்களின் உறவினர் பெண் நிஷா (18) ஆகிய நால்வரும் பிர்ஜா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிராமன் பாபா திருக்கோயிலுக்குச் சென்றிருந்தனர். ரக்ஷா பந்தனை முன்னிட்டு கடந்த 29 ஆம் திகதி இரவு நடைபெற்ற...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை தோனி கோரியதாகப் பரவி வரும் வதந்திகளை அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் தோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு...
அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது "வேதனையான" ஒரு முடிவு என்றாலும், "அதற்கான நேரம் வந்துவிட்டது" என்பதைத் தான் புரிந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்குத் தலைமை தாங்கி சாம்பியன் பட்டம் வென்று...
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் சென்ற ஜூலை 22 ஆம் திகதி முதல் மேற்கோள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே இடைநிறுத்துமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று (31) திங்கட்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், இது தொடர்பில் மேல் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கில்,எதிர்வரும் செப்டெம்பர் 22...
விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, ரவி கருணாநாயக்க திங்கட்கிழமை (31) காலை சுமார் 8:15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப்...
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன், தனியார் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். குறித்த தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர், நெல்லியடிப் பகுதியில்...
இன்று நள்ளிரவு (ஆகஸ்ட் 31) முதல் 450 கிராம் எடையக்கொண்ட பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 30) ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு எவ்வித unfair (முறையற்ற)...
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் தாயார்கள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மிகவும் மோசமான ஒரு சம்பவமாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிக்குழுவின் பிரதிநிதி அனா லோறினா டெல்கடிலோ பெரஸ் (Ana Lorena Delgadillo Pérez) கவலை...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளைக் குறைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் (LIOC) தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. இதற்கமைய, ஐ.ஓ.சி நிறுவனம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012 ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர்....
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இம்மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே, அர்ச்சுனா எம்.பி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இக்கோரிக்கையை முன்வைத்தார். எவ்வாறாயினும்,...
Loading posts...
All posts loaded
No more posts
