- Tuesday
- September 1st, 2026
பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இந்த ஒலி மாசுபாடானது கைக்குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாரிய சுகாதார மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தமது அறிக்கையில்...
அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்து தொடரில் (MLS), என்யூ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இன்டர் மியாமி , சிஎப் மாண்ட்ரியல் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இன்டர் மியாமி வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். அந்த அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி 4 கோல்களை அடித்து அசத்தினார். மேலும்,...
நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து சந்தேகநபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போது அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராக்களும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நெல்லியடி...
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 762 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் 2,715 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், விகாரைக்குத்...
இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கான வெளிநாட்டுக் கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதி வளர்ச்சி 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சுட்டிக்காட்டுகின்றார். தெங்கு சார்ந்த உற்பத்திகள் 42 சதவீதமும், பழங்கள் 21 சதவீதமும், காய்கறிகள் 20 சதவீதமும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக்...
ஜூலை மாதத்தின் பிற்பகுதிக்குக்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்கப் படைகள் ஈரானிய நிலப்பரப்பு மீது தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரானின் லாரக் தீவில் அமைந்துள்ள இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) நோக்கிய கடல்சார்...
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக...
உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின்...
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும். அதன்படி, கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ. வரை அதிகரிக்கும்...
இந்தியாவின் மேற்கு வங்க அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் ஒரே வாரத்தில் புதிதாகப் பிறந்த 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரே நாளில் 10...
கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலிச்சோலை, பாசிக்குடா பகுதியில் கைப்பேசி வெடித்ததில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞர் கைப்பேசியை மின்னேற்றத்தில் (Charging) இணைத்துவிட்டு, அதனை நெஞ்சில் வைத்தவாறு உறங்கியதாகவும், இதன்போது மின்சாரம் தடைப்பட்டு, சிறிது நேரத்தின் பின்னர் மின்சாரம் மீண்டும் வழமைக்குத்...
இந்தியாவில் பெற்றோர் ஐபோன் வாங்கித் தர மறுத்ததால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் மலையிலிருந்து குதித்துத் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அவரைக் காப்பாற்றச் சென்ற பெற்றோர் அவருடன் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் கூறி செய்தித் தளங்கள் மற்றுமு் சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது எனத் தகவல்களைச் சரிபார்க்கும் அமைப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஊடகங்கள்...
கொழும்புத்துறை இறங்குதுறையை அகலப்படுத்தும் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். கடற்றொழிலாளர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு, இறங்குதுறை வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் தற்போதைய பணிநிலை மற்றும் எதிர்கால கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம்...
கயாடு லோஹர் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் மிக நெருக்கமாக நடித்து Immortal படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. தனியாக ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வரும் கயாடு லோஹர் போன் செய்து ஜிவி பிரகாஷை ரூம் மேட் ஆக தங்க சொல்கிறார். அவரும் அழகான பெண்ணை பார்த்ததும் மயங்கி வந்து தங்குகறார். ஒரு கட்டத்தில் அவர்கள் பழகி...
திபெத் பகுதியில் இருந்து போதே கோஷி நதி ஊடாக நேபாளத்தின் ரசுவா மாவட்டத்துக்குள் புகுந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளின் தாழ்நில கரையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்...
இன்று (ஆகஸ்ட் 28) நண்பகல் 12:11 மணிக்கு கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நகர்கோவில் ஆகிய இடங்களுக்கு மேலாகச் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளது. சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...
பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயில் பொதுஹெர ரயில் நிலையத்தில் வைத்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், தடங்கல் நிமித்தம், பொதுஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகவே பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டிய அரசுப் பொருளான கைவிலங்கை, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் தனது ஹெல்மெட் திருடு போகாமல் இருக்க பைக்கில் பூட்டி வைத்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த காவல் நிலைய வளாகத்திலேயே காவலரின் பொருளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையையும், அரசுப் பொருளைச் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய துறை சார்ந்த...
கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான போராட்டத்தை வெளிப்படுத்திப் போட்டியைச் சமநிலையில் முடித்துக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் இமாலய பின்னடைவைச் சந்தித்த போதிலும், இலங்கை வீரர்களின் விடாமுயற்சியால் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம்...
Loading posts...
All posts loaded
No more posts
