- Friday
- July 17th, 2026
யாழ்ப்பாணம், காக்கைதீவு பகுதியில் உள்ள கழிவு மீள்சுழற்சி மையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்பாக நேற்றைய தினம் புதன்கிழமை (15) காலை குறித்த போராட்டம் நடத்தப்பட்டது. மாநகர சபையின் கழிவு மீள்சுழற்சி மையம் காக்கைதீவு பகுதியில் அமைந்துள்ளது. தற்போது அங்கு மீள்சுழற்சிகள் இடம்பெறாமல் குப்பைகள்...
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36 ஆவது போட்டி மாத்தறையில் இம் மாதம் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெற்றதற்கு அமைவாக, இவ் போட்டித் தொடரின் கபடி போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணியினர் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றமைக்காக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் நேற்றைய தினம்...
குடும்பத் தகராறு காரணமாக மனைவி தனது கைபேசியை கணவர் மீது வீசியதில் அவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தம்பதியினருக்கு இடையே அவர்களது வீட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த மனைவி, தனது கணவரின் தலையில் கைபேசியால் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார். காயமடைந்த கணவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரடைந்ததை அடுத்து, மருத்துவர்கள்...
மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில், ஒரே நாளில் 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "சட்டம் அனைவருக்கும்...
சாது மிரண்டால் என்ன நடக்கும் என்பதை இலங்கை மக்களும், அண்மையில் தமிழ்நாட்டு மக்களும் செயலில் காண்பித்துவிட்டனர். இலஞ்ச ஊழலில் இதுவரையில் ஈடுபட்டவர்களை நாம் அடையாளம்கண்டு தண்டிப்போம் என்று கூறியே தற்போதைய தமிழக அரசும், இலங்கை அரசாங்கமும் மக்களின் ஆதரவைப் பெற்றது. இப்போது அன்று இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை இந்த அரசாங்கங்கள் அடையாளம்காண விளைந்தால், அவர்கள் பழிவாங்கலில்...
23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (16) மோதின. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் முதல்...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று (15) ஆரம்பமாகியுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த 23 ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட...
50 ஓவர் ஆடவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற இருக்கிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன. உலக கிண்ணத்தில் ஐசிசி சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றம் ஐசிசி-யின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 50 ஓவர் உலகக் கிண்ண தொடரில் 14 அணிகள் பங்குபெறும்....
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசிப் படமாக உருவானது ‘ஜனநாயகன்’. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 ஆம் திகதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது CBFC தரப்பு. அது குறித்த பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு ஜூலை 9 ஆம் திகதி CBFCயிலிருந்து இப்படத்துக்கு ஏ...
ஈரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்திருப்பதோடு மேலும் முக்கிய கடல்வழி பாதையை முடக்குவது குறித்து ஈரான் எச்சரித்திருக்கும் சூழலில் போர் பதற்றம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாகவும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்திய...
பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தவும், ஈராக்கின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் அமெரிக்க, ஈராக் தலைவர்கள் உறுதிபூண்டுள்ளனர். அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று முன்தினம் வௌ்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சமயமே மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது, அமெரிக்காவுடனான உறவுகள் இராணுவ ரீதியான...
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இலங்கை பரீட்சைத் திணைக்களம் விசேட தெளிவுபடுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 03 ஆம் திகதி ஆரம்பமான விண்ணப்பக் கோரல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில்,...
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் அதன் ஆராய்ச்சிப் பிரிவான சமூகக் குறிகாட்டி இணைந்து நடத்திய அண்மைக்கால “ஜனநாயக ஆட்சியில் நம்பிக்கை பற்றிய சுட்டெண்” என்ற பொதுஜன கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் தனிப்பட்ட நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீதான...
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப் பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட நாட்களாக இடம்பெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் கதிரேசு வீதிக்கு திரும்பும் சந்தியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடை ஒன்றில் அக்கடைக்குரிய கோழிகள் மலசலகூடம் மற்றும் அதனுடன்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயல்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தின் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். பழைய...
இலங்கையில் பேஸ்புக் (Facebook) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பெண்களின் பெயர்களில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட ஏமாற்று மற்றும் பணமாக்கும் வலைப்பின்னல் ஆய்வொன்றின் மூலம் முதன்முறையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளரும் தகவல் ஆய்வாளருமான சஞ்சன ஹத்தொடுவ (Sanjana Hattotuwa) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கையில் இந்த அதிர்ச்சித்...
தமிழ் சினிமா ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாத ஒரு எவர்கிரீன் திரைப்படம் என்றால் அது இயக்குநர் வெங்கட் பிரபுவின் அறிமுகத் திரைப்படமான 'சென்னை 600028'. சென்னை இளைஞர்களின் வாழ்வியலையும், தெருமுனை கிரிக்கெட்டையும் மையமாக வைத்து வெளியான இதன் முதல் பாகமும், கிராமத்துப் பின்னணியில் வெளியான இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், ரசிகர்களுக்கு...
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கான பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலாக நேற்று மாலை 5 மணியளவில் அடையாளம் தெரியாத ட்ரோன் (Drone) ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டுப் பறந்ததால் சிறைச்சாலை நிர்வாகத்திடையே பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. சிறை அதிகாரிகள் அதனை அவதானிப்பதற்குள் அந்த ட்ரோன் அங்கிருந்து மறைந்துள்ளது. இது குறித்து சிறைச்சாலை நிர்வாகம் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை...
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்துமாறு கோரி வரும் போலிச் செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறான செய்திகள் போக்குவரத்துப் பிரிவினரால் அனுப்பப்படுவதில்லை என பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், இத்தகைய போலி குறுஞ்செய்திகளுக்கு எவ்விதப் பதிலும் அளிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப்...
Loading posts...
All posts loaded
No more posts
