- Wednesday
- May 13th, 2026
கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையில் நேற்று (4) நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த இளைஞர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சம்பவத்தில் கரவெட்டி...
வடக்கில் உள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதினப் பேரணி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இடம்பெற்றது. இந்தப் பேரணியில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்....
ஆபாசமான காணொளி அழைப்புகள் மற்றும் மிரட்டல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான மோசடி குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளதுடன், பயனர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT), கேட்டுக்கொண்டுள்ளது. CERT-இன் கூற்றுப்படி, மோசடி செய்பவர்கள் முதலில் போலி கணக்குகள் மூலம் தனிநபர்களில் சமூக ஊடக வலைப்பின்னல்களில் ஊடுருவி, பெரும்பாலும் முகநூலில்...
தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்பதாகக் கூறி சிலர் இனவாதிகளுக்கு தீனி போடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார் தையிட்டி பகுதியில் ஊடகங்களிடம் அவர் இதனை கூறியுள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயற்சித்த வேளை, காணி உரிமையாளர்கள் சிலருக்கு நம்பிக்கை இல்லை என்பதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் காணி அளவீடு...
பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு பூநகரி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், கைது செய்யப்பட்ட சாரதியினையும் சட்டநடவடிக்கைக்காக நீதி மன்றில் முற்படுத்த பூநகரி பொலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஜெயபுரம் பகுதியிலிருந்து அனுமதியற்றவகையில் மணலுடன் பயணித்த உழவு இயந்திரத்தினை...
யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தனது நண்பர் ஒருவருடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட...
குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில் அருச்சுனா இராமநாதனுடன் முரண்பட்ட தரப்பினர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை. அங்கே என்ன கதைத்தார்கள் என சொல்வதில்லை. கூட்ட அறிக்கைகள் கேட்டால் அவற்றை எமக்கு தருவதில்லை கடந்த 11ஆம் திகதி காணி அளவீடு செய்ய போதாக மாவட்ட செயலகத்திற்கு எம்மை அழைத்து கூட்டம் நடத்தினார்கள். அந்த அறிக்கையை கேட்டால்,...
அதிகரித்த போக்குவரத்துச் செலவுகளால் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாக ப்ரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்ப்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு அமைவாக முன்பு 220 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை, 225 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துப் பாத்தி இந்துமயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாவது நாள் அகழ்வு பணிகளானது நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா கருத்து தெரிவிக்கையில், இன்றைய அகழ்வப் பணியின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு இலக்கங்களான 217 மற்றும் 220 ஆகிய இலக்கங்களை கொண்ட எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து...
வட மாகாணத்தின் அரச சேவையைப் பலப்படுத்துவதற்காக, ஒருங்கிணைந்த அரச சேவை பதவிகளுக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 28ஆம் திகதி வட மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்வு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ மற்றும் வட...
காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில்...
மின்சாரக் கட்டணங்களை மீண்டும் உயர்த்துவது தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவை வழங்குநர்கள் (தனியார்) நிறுவனம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்காக, தனது திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீட்டை PUCSL-க்குச் சமர்ப்பித்துள்ளது. அண்மைய எரிபொருள் விலை உயர்வின் அடிப்படையில் இந்தத்...
வடமராட்சிப் கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்தில் தங்கியிருந்த இராணுவத்தின் திடீரென அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நாச்சிமார் ஆலயப் பகுதியைக் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்த நிலையில் நேற்றையதினம் அங்கிருந்து வெளியெறியுள்ளனர். இராணுவத்தினர் வெளியேறியதைத் தொடர்ந்து ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடவும் ஆரம்பித்துள்ளனர். ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து...
அரசியல் தீர்வு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒற்றுமை முயற்சியை மேலும் பலப்படுத்துவதாகவே அமையும் எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் சட்டத்தரணிகள் பேரவை மற்றும் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி என்பன அக்கூட்டு...
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்கு பதிவுகளை மேற்கொண்ட பின்னரே அனுமதிப்போம் என பலாலி பொலிஸார் காணி உரிமையாளார்களுடன் முரண்பட்டமையால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களில் காணி உறுதிகள் வைத்துள்ள 17 பேரின் காணிகளை அளவீடு செய்வதற்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விகாரை அமைந்துள்ள...
யாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டம் விதித்ததுடன் அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி குறித்த நபர் காரைநகர் பகுதி வீதியால் தலைக்கவசம் இன்றி சென்றுள்ளார். இதன்போது அவரை வழிமறித்த ஊர்காவற்துறை பொலிஸார் அவர்...
கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் புதன்கிழமை (29) வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கியைக் காட்டி மிரட்டியமை மற்றும் அத்துமீறி நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரால் நேற்று (27) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். சனிக்கிழமை யாழ்ப்பாணம்...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியில் நிலத்தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சர்ச்சைக்குரிய பெரியவிளான் நிலத்தின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts
