தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் (UoVT) வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இலங்கை தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் (University of Vocational Technology - UoVT) காலியாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களுக்கு தகுதியான இலங்கை குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ரத்மலானையில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் உணவுத் தொழில்நுட்பத் துறையில் (Department of Agriculture & Food Technology) விரிவுரையாளர் பதவிகளுடன், பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்நுட்பப்...

கொழும்பு பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு!!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கலைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் கல்விச் செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி, ஒரு வார காலத்திற்கு பல பீடங்களின்...
Ad Widget

அமைச்சர்களுக்கு முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!

ஆய்வுக்கு செல்லும் அமைச்சர்களால் சர்ச்சை ஏற்படுவதால், முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17 ஆவது சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அதிக இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க. கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் த.வெ.க.வினரை தாண்டி, கூட்டணி கட்சிகளான...

ChatGPT மூலம் கார்ட்டூன் தளத்தின் 46,000 கணக்குகளை முடக்கிய 15 வயது மாணவன் ஜப்பானில் கைது!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்ட ChatGPT மென்பொருளின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட கணினி நிரல் மூலம், பிரபல ஜப்பானிய கார்ட்டூன் இணையதளத்தின் 46,000 இற்கும் அதிகமான பயனர் கணக்குகளை இரத்து செய்த 15 வயது பாடசாலை மாணவனை ஜப்பானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த மாணவன் 'Bandai Namco Filmworks' நிறுவனத்திற்குச் சொந்தமான 'Bandai Channel' என்ற...

அடுத்த பட சம்பளத்தை ரூ. 100 கோடியாக உயர்த்தினாரா நடிகர் சூர்யா?

நடிகர் சூர்யா, கருப்பு என்ற மாஸ் வெற்றிப்படத்தை சமீபத்தில் கொடுத்தவர். இப்படத்திற்கு பிறகு வெங்கட் அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாக தயாராகிவிட்டது. இதன் தொடர்ச்சியாக இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கிவரும் சூர்யா 47 படமும் தயாராகி வருகிறது. அடுத்ததாக இயக்குனர் த.செ.ஞானவேலுடன் சூர்யா தனது 48வது படத்தில் நடிக்கிறார், இப்படத்தை ஹொம்பாலே...

சவுரவ் கங்குலியாக நடிக்கும் ராஜ்குமார் ராவ்!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனைகளை படைத்தவர் முன்னணி இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி. 1992-ல் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்த இவர் 1999-ஆம் ஆண்டு கேப்டன் ஆனார். நிலை தடுமாறி சென்றுகொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பான டீமாக மாற்றிக்காட்டினார். இவருடைய தலைமையில் இந்தியா பல வெற்றிகளை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. DADA...

யாழில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதைப்பந்தாட்டப் போட்டி!

யாழ் சென்றோக்ஸ் விளையாட்டு கழகத்தின் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டி யாழ் குருநகர் சென்றோக்ஸ் விளையாட்டு கழகம், யாழ் லீக் அனுசரணையுடன் நடத்தும் அமரர் மாணிக்கம் அருளானந்தம் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்று போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சென்றோக்ஸ் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. யாழ் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கில்...

யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் – கடந்த 07 நாட்களில் மாத்திரம் 65 பேருக்கு சிகிச்சை

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்க்கான சிகிச்சை பெறுபவர்களின் எண்னிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், இந்த மாதத்தின் கடந்த 07 நாட்களில் மாத்திரம் 65 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே...

யாழில்.டெங்கு ஒழிப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக இம் மாதம் - ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தி வீடுகள், பாடசாலைகள், தனியார், உயர்கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முழுமையாக சிரமதானப்பணிகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல்...

அமெரிக்க தாக்குதலில் ஈரான் இராணுவத்தினர் 8 பேர் பலி!!

அமெரிக்க நடத்திய தாக்குதலில் ஈரானிய இராணுவத்தினர் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஈரானிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக பி.பி.சி செய்தி வௌியிட்டுள்ளது. ஈரான் மீது இன்று இரவு தாக்குதல் நடத்தப்படும் என முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்த நிலையிலேயே இந்த தகவல் வௌியாகியுள்ளது. இரவோடு இரவாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானிய இராணுவத்தின் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக...

நீர்கொழும்பு சிறை மோதலில் இந்தியர் ஒருவரும் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக 'த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் வௌியாடாத போதிலும், இலங்கை வெளிவிவகார...

நாட்டின் பல பகுதிகளில் வறண்ட வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வட, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, இன்று (09) காலை 6.00 மணி நிலவரப்படி WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.28 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.03 சதவீத அதிகரிப்பாகும். அத்துடன், பிரெண்ட் ரக...

கவனம் சிதறுகிறது – அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள்!

பாராளுமன்றில் சுயேட்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனாவின் இருக்கையை மாற்றித் தருமாறு கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து மூலம் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில், தாங்கள் அறிந்தவாறு, பாராளுமன்றத்தில் எனக்கு இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மாவட்ட...

முடிவுக்கு வந்தது போர் நிறுத்த ஒப்பந்தம்!! டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டில் ஊடவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட அவர், நான் இனி அவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை என...

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது!!

தெங்கு அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரவை அமைச்சரான ஜகத் புஷ்பகுமார ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (08) காலை 9.20 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜகத் புஷ்பகுமார கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்....

The HALO Trust நிறுவனத்தில் சாரதிகளுக்கான வேலைவாய்ப்பு!!

ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட உலகப் புகழ்பெற்ற சர்வதேச மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ‘ஹலோ ட்ரஸ்ட்’ (The HALO Trust), இலங்கையில் காலியாகவுள்ள சாரதி (Driver) பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. உலகளவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நிலத்தை மீட்டெடுத்து,...

400 இற்கும் மேற்பட்ட தாய், தந்தையர் நீதி கிடைக்காமலே இறந்துவிட்டனர்!!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச மாநாட்டினை நடாத்தவுள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,...

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பிரதான பாதை திறக்க நடவடிக்கை!

பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார். அதன்படி, பாராளுமன்ற...

தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணியை மருதங்கேணி பகுதியில் சுவீகரிக்க நடவடிக்கை!

வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுபிகரிப்பு நடவடிக்கைகள் நாளை (09) இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரளுமாறும், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார் . அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட...
Loading posts...

All posts loaded

No more posts