- Tuesday
- February 17th, 2026
காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவர்களே காரணம் என யாழ். பொலிஸ் நிலையத்தில் மகன் முறைப்பாடு செய்துள்ளார். சுன்னாகம் சூராவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வீரசிங்கம் அம்பிகைபாகன் என்பவர் கடந்த 23ஆம் திகதி காதுக் குத்து காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் கண், காது, தொண்டை (ENT)...
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளான் சந்தியில் இரண்டு குழுவினருக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பெரிய விளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளை சேர்ந்த இருவருக்கிடையே இந்த மோதல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஆதரவாக இரண்டு குழுக்கள் அந்த இடத்திற்கு சென்ற நிலையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது இருவர் காயங்களுக்கு...
தபால் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவை இன்று திங்கட்கிழமை (09) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் எடைக் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 50 ரூபாவாக இருந்த சாதாரண கடிதத்திற்கான கட்டணம் 70 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. தபால் அட்டை ஒன்றின் கட்டணம் 20 ரூபாவிலிருந்து 40...
அரசாங்கத்தின் உறுதிமொழிக்கு இணங்க, அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சராசரி...
நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி்ல் நேற்றையதினம் (4) போராட்டங்கள் இடம்பெற்றன. அதற்கமைய கிளிநொச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் A9 வீதி ஊடாக டிப்போ...
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, அரச சேவையில் பட்டதாரிகளையும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளையும் இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, பொது சேவையில் பட்டதாரிகள் ஆசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இன்று...
78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி சீனிவாசன் இந்திரகுமார் அவர்களின் தலைமையில் நேற்று காலை 2 சிறை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். கசிப்பு வழக்கு ஒன்றுக்காக தண்டப்பனம் செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த...
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத் தொகுதியில் நேற்று புதன்கிழமை (4) நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக மாகாண மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலந்துகொண்டு தேசியக் கொடியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்று (03) ஆளுநர்...
இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று, மோதுண்டதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார். மயிலிட்டி பகுதியில் நேற்றையதினம் (2) குறித்த வயோதிபர் துவிச்சக்க வண்டியில் பயணித்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு பயணித்த இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் குறித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. இதன்போது துவிச்சக்கரவண்டியில் பயணித்த வயோதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,...
யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் எந்த திட்டமும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சமூகத்திற்குள் இது போன்ற தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யாகொந்தா குறிப்பிட்டார். இதுபோன்ற புனையப்பட்ட மற்றும் உணர்திறன் மிக்க கூற்றுக்களைப்...
அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழகம் சென்றிருந்த நிலையில் இந்திய மீனவர் விடயங்கள் பேசும் பொருளாக காணப்பட்டது. ஆனால் தமிழகம் செல்வதற்கு முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து எதுவிதமான கலந்துரையாடும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக தமிழகம் சென்று அங்கு இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசி இருக்கின்றார் என...
வட மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும் போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியான மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குளத்தின் நீர்மட்டம் தற்போது...
எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.அந்த நாளை கரி நாளாக அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைத்து நிற்பதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ.அபிஷேக் இந்த அழைப்பினை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணியில், புதிய கட்டுமானங்களை அமைக்காமல் அவர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரியில் அதை அமைப்பதே பொருத்தம் என, காணியின் உரிமையாளரான தலைவர் பிரபாகரனின் சகோதரிக்கு அறிவுறுத்த வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானித்துள்ளது. வல்வெட்டித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வு அண்மையில் நகர பிதா எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, தலைவர்...
நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளை , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களின் படகொன்று அப்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களை தமது...
T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் ஞாயிற்றுக்கிழமை (01) யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் , நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலும், துரையப்பா விளையாட்டு அரங்கிலும், யாழ்ப்பாணம் கோட்டையிலும், யாழ்ப்பாணம் நூலகத்திலும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்த...
யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை...
யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேன்முறையீட்டு...
பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த காடாப்புலம் காணியானது இன்று புதன்கிழமை பிரதேச சண்டிலிப்பாய் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக...
Loading posts...
All posts loaded
No more posts
