- Monday
- July 13th, 2026
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து ஒரு பிரம்மாண்டமான தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசை வெளியீட்டை இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் வகையில் வெளிநாட்டில் நடத்த படக்குழு...
அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று மாடிக் கட்டடத்தில் நாடு முழுவதும் சேவையாற்ற கூடிய “மிரிகம தேசிய சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம்” எதிர்வரும் 12ஆம் திகதி பொது மக்களின் பாவனைக்காக வழங்கப்பட உள்ளது. இலங்கையில் சிறுநீரக கல் நோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையமாகவும், சிறுநீரக கற்களை அகற்றும் சத்திரசிகிச்சைக்காக தற்போதுள்ள 5000...
சமகால சமூகத்தில் சிறுவர்களை இலக்கு வைத்து பல்வேறு நுணுக்கமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தலில், அறிமுகமில்லாத நபர்கள், சிறுவர்களைத் தன்பால் ஈர்ப்பதற்காக இனிப்புகள், சொக்லேட், ஐஸ்கிரீம் அல்லது பல்வேறு விளையாட்டுப் பொருட்களைக் காட்டி ஆசை காட்டுகிறார்கள். இத்தகைய உணவுப் பொருட்களில் போதைப்பொருட்களையோ...
தெலுங்கானாவின் நலகொண்டா மாவட்டம் வெளிமினேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கொண்டே ரகுபதி. இவருக்கு நீண்ட நாளாக புதுமையான அதிக திறன் கொண்ட பைக்கை வாங்க விரும்பினார். தான் விரும்பும் பைக்குக்கான தொகையை 10 ரூபாய் நாணயமாக வழங்கித்தான் பெறவேண்டும் என முடிவ் செய்தார். இதற்காக மாவட்டம் முழுவதும் அலைந்து, திரிந்து கடைகளிலும் ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் 10...
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு நீண்ட இழுபறிக்கு பிறகு தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துள்ளது. 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) கொண்ட இந்த படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் வருகிற 24-ந்தேதி அன்று ‘ஜனநாயகன்’ படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை முன்றலில் நேற்றைய தினம் (09) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கும் தமக்கும் தொடர்பு இல்லை என பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும் அதன் சமூகப்...
அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் நேற்றைய தினம் காலையில் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், மதியம் 12.40 மணியளவில் அவர் கடலில் சடலமாக...
சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) தங்களும் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சட்டவிரோத சொத்துக் குவிப்புகள் தொடர்பான...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறை வாசலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "உன்னை எங்காவது கண்டால் கொன்றுவிடுவோம். வெளியே மாட்டும் போது உன்னை விடமாட்டோம், கொன்றுவிடுவோம்" என அவர்கள் மிரட்டியுள்ளனர். குறித்த...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட வன்முறை மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மிகவும் மிருகத்தனமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அவர்களது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மரண பரிசோதனை அறிக்கைகளின்படி, தலைப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகவே இந்த அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 மற்றும்...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நான்கு வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதவிய, அனுராதபுரம், பொத்துவில் மற்றும் வெலிகம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (09) இந்த விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. போகஸ்ஹந்திய - புல்மோட்டை வீதியின் 2ஆம் கட்டை தூணிற்கு அருகில் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. போகஸ்ஹந்திய நோக்கி...
ஐரோப்பிய நாடான ஜேர்மனியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடும் வெப்ப அலை காரணமாக மதிப்பிடப்பட்ட 5,120 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் புகழ்பெற்ற ரொபர்ட் கோக் பொதுச் சுகாதார நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலான மரணங்கள் ஜூன் மாதத்தின் பிற்பகுதியில், வாராந்த சராசரி வெப்பநிலை வழமைக்கு மாறாக 20 டிகிரி செல்சியஸைக் (20°C) கடந்த...
தென்கிழக்கு சீனாவின் சின்ஜியாங் நகரில் உள்ள ஒரு காலணித் தொழிற்சாலையில் 9ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளின்படி, எரிந்து கொண்டிருந்த கட்டிடத்திலிருந்து அடர்த்தியான கருப்புப் புகை வானத்தை நோக்கி எழுந்தது. நூற்றுக்கணக்கான மீட்புப்...
வவுனியாவில் வியாழக்கிழமை (9) முதல் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. வவுனியா பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஆரம்பமான இப்போட்டிகள், எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், மாவட்ட குத்துச்சண்டைச் சங்கத்தின் தலைவரும் குத்துச்சண்டை பயிற்சியாளருமான நிக்ஸன் ரூபராஜ் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் நடைபெறும் இப்போட்டித் தொடரில், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
உலகக் கிண்ண கால்பந்து 2026 தொடரின் விறுவிறுப்பான கால்இறுதிப் போட்டியில், மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு கெத்தாக நுழைந்துள்ளது. கடந்த 2022 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் மொரோக்கோவை வீழ்த்திய பிரான்ஸ், இந்த முறையும் அதே வெற்றியை மீண்டும் பதிவு செய்துள்ளது. போட்டியின் முதல் பாதியில் இரு...
பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் ஆசனங்கள் மாற்றப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் தமது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விடுத்த கோரிக்கையையடுத்து அவரது ஆசனம் இடமாற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த இராமநாதன்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் உட்பட இருவர் மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு தற்சமயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த விசாரணைக் காலத்தை மேலும் இழுத்தடிக்காது உடனடியாகத் துரிதப்படுத்துமாறு கோரி, இன்றைய தினம் (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் "பாலியல் வன்முறைகளுக்கு எதிரான...
இந்தியாவில் மராட்டியத்தில் பெய்துவரும் தொடர் மழையால், பல்வேறு நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நான்டெட், ஹிங்கோலி மற்றும் பர்பானி மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நில நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 முதல் 4.6 வரை பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் லேசான குலுங்கியதால் அச்சமடைந்த...
இலங்கை தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் (University of Vocational Technology - UoVT) காலியாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களுக்கு தகுதியான இலங்கை குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ரத்மலானையில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் உணவுத் தொழில்நுட்பத் துறையில் (Department of Agriculture & Food Technology) விரிவுரையாளர் பதவிகளுடன், பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்நுட்பப்...
Loading posts...
All posts loaded
No more posts
