Ad Widget

யாழில் மைத்திரிபாலவை வரவேற்றார் முதலமைச்சர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30. மணியளவில் யாழ் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

vick-my3

யாழிற்கு வருகை தந்துள்ள புதிய ஐனாதிபதியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாலை அணிவித்து வரவேற்றார். இதன் போது மத்திய அரசின் அமைச்சர்கள் சிலரும் வருகை தந்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதே போன்று ஈபிடிபியினரும் கலந்து கொண்டுள்ளனர். இதன் போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts