Ad Widget

விலை விபரம் இல்லாமையால் ரூ. 1 இலட்சம் அபராதம்

யாழ். நகரப் பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் விலைவிபரம் இல்லாமல் பொருள் விற்பனை செய்த குற்றத்துக்காக 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து யாழ். நீதவான் பொ.சிவகுமார் செவ்வாய்க்கிழஇமை (03) உத்தரவிட்டார்.

விலை விபரம் இல்லாத கண்ணாடி சுத்திகரிப்பு ஸ்பிரேயை வைத்திருந்த குற்றத்துக்காக, யாழ். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் அங்காடி உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு செவ்வாய்க்கிழமை (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உரிமையாளர் தனது, குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதேவேளை, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் தாக்கல் செய்யப்பட்ட 7 வழக்குகளுக்கு 42,500 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

காலாவதியான பொருட்கள் விற்பனை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை ஆகிய குற்றங்களுக்கு எதிராகவே 7 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

Related Posts