Ad Widget

எரிந்த நிலையில் கர்ப்பிணி மீட்பு

அல்வாய் முத்துமாரியம்மன் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் திங்கட்கிழமை (02) காலை மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

வதிரியைச் சேர்ந்த பிரதீபன் சரண்யா (வயது 24) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டார்.

இவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்றார். இருவரும் வதிரியிலிருந்து அல்வாய் பகுதியிலுள்ள வீடொன்றில் தங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை (01) சென்றனர்.

இந்நிலையில் பெண் இன்று (திங்கட்கிழமை) எரிந்த நிலையில் பெண் மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts