Ad Widget

கட்டுவனில் மற்றுமொரு கிணற்றிலும் எண்ணெய் கசிவு

சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தற்போது கட்டுவன் பகுதியிலுள்ள வள்ளுவன் சனசமூக நிலைய பொதுக்கிணற்றுக்கும் பரவியுள்ளதாக பாதிக்கப்பட்ட சனசமூக நிலைய அங்கத்தவர்கள், தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்கு செவ்வாய்க்கிழமை (02) தெரியப்படுத்தியுள்ளனர். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால் சுற்றாடலிலுள்ள கிணறுகளில் எண்ணெய்...

ஜனவரியில் 8 நாட்கள் பாடசாலைகளுக்கு பூட்டு

ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி மாதம் 7ஆம், 8ஆம், 9ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி...
Ad Widget

காரைநகர் உவர்நீர்த் தடுப்பணை உடைப்பு!!புனரமைப்புப் பணியில் வடக்கு விவசாய அமைச்சு தீவிரம்

காரைநகர் வேணன் உவர்நீர்த் தடுப்பணை விசமிகளால் உடைக்கப்பட்டதால் அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த மழைநீர் கடலினுள் பாயத் தொடங்கியுள்ளது. இது வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து உடைக்கப்பட்ட அணைப்பகுதியைத் தற்காலிகமாகப் புனரமைக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (03.12.2014) பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்...

300 மூடை சீனியுடன் பாரவூர்தியை காணவில்லை

கொழும்பிலிருந்து 300 சீனி மூடைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்துகொண்டிருந்த பாரவூர்தியொன்றை கடந்த 30ஆம் திகதி முதல் காணவில்லையென சீனி மூடைகளின் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (02) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதியை சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் இணைந்து பாரவூர்தியொன்றில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சீனி மூடைகளை எடுத்து வந்துள்ளனர்....

நட்புறவை பேணுவதன் மூலம் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்: தெல்லிப்பளை பொலிஸ் பொறுப்பதிகாரி

பொதுமக்கள் பொலிஸாருடன் மிக நெருங்கிய நட்புறவை பேணுவதன் மூலம் குற்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும் என தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.என்.எஸ்.கஸ்தூரியாராச்சி புதன்கிழமை (03) தெரிவித்தார். பிரதேசத்திலுள்ள குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொறுப்பதிகாரி தொடர்ந்து கூறுகையில், எமது பொலிஸ் நிலையத்தில் கடந்த வருடத்தை (2013) விட இவ்வருடம் குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. பொதுமக்களின் ஆதரவுடன் சமூகத்தில்...

மீனவர்களுக்கு மழை பாதுகாப்பு அங்கிகள்

யாழ். உடுத்துறை பகுதியிலுள்ள 100 மீனவர்களுக்கு மழை பாதுகாப்பு அங்கிகள் 2 வழங்கப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி புதன்கிழமை (03) தெரிவித்தார். மழை காலங்களில் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் அவசியமாகின்றன. கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் காப்புறுதி செய்த 100 மீனவர்களுக்கு 2,500 ரூபாய் பெறுமதியான பாதுகாப்பு...

வடமாகாணத்தில் முதலாவது பூங்கனியியல் தாய் தாவர பண்ணை

அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டையில் பூங்கனியியல் தாய் தாவர பண்ணை அமைப்பதற்குரிய ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பண்ணை அமைக்கப்பட்டு வருகின்றது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து...

சமுர்த்தி பயனாளிகளின் செழிப்பான இல்லத்துக்கு நிதியுதவி

யாழ். மாவட்டத்திலுள்ள 53 ஆயிரத்து 907 சமுர்த்தி பயனாளிகளுக்கு செழிப்பான இல்லத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் நல உதவி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் எஸ்.ரகுநாதன் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது, யாழ். மாவட்டத்தில் உள்ள 33 சமுதாய...

நீர்ப்பாசன திணைக்களத்தின் அசட்டுத்தன்மை!! காரைநகரில் 60 குடும்பங்கள் இடம்பெயர்வு

கரைநகர் - களபூமி பகுதியில் வீடுகளுக்குள் 3 அடி உயரத்தில் வெள்ளநீர் புகுந்தமையால் 60 குடும்பங்கள் இடம்பெயர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியின் நன்னீர் திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி கிராமத்துக்கும் கடலுக்கும் நடுவில் அணைக்கட்டு ஒன்று, ஆசிய அபிவிருத்தி வங்கியின் 40 மில்லியன் ரூபாய் நிதியுதவியின் கீழ் நீர்ப்பாசன திணைக்களத்தால் நிர்மாணிக்கப்பட்டு,...

த.தே.கூ. முடிவெடுக்கவில்லை – சுமந்திரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையிலும் முடிவெடுக்கவில்லை என்று அக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர், விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் மீண்டும் கட்டியெழுப்பவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

தனியார் வகுப்புகளுக்கு தடை

இவ்வருடம் 2014ஆம் ஆண்டுக்கான க.பொ.சதாரண தரப்பரீட்சைக்காக தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள் இன்று புதன்கிழமை (03) நள்ளிரவுடன் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், மாணவர்களுக்கான க.பொ.சாதாரண தர அனுமதி அட்டைகள், அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனியார் பரீட்சாத்திகளுக்கான அனுமதி...

புலிகளால் எரியூட்டப்பட்ட 80பேர் தொடர்பில் தடயவியல் ஆய்வு

போர் நிறுத்தக் காலப்பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஜயரத்னம் மற்றும் இராணுவ கெப்டன் லக்கீ ஆகியோர் உள்ளடங்கலான 80பேர் தொடர்பான தடயவியல் ஆய்வு நேற்று செவ்வாய்க்கிழமை (02) ஆரம்பிக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான், இந்திமடு, சமளன்குளம் ஆகிய பகுதிகளில், கடந்த 2006ஆம் ஆண்டு...

கூட்டமைப்பிடம் ஆதரவு கோரியுள்ள எதிரணி

ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய உடன்பாடு ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது. இவ்வாறு எதிரணியில் பௌத்த கடும்போக்கு அமைப்புகள் என்று கருதப்படும்...

மைத்திரிபால சிறிசேன ராஜபக்‌ச படையணியை விரட்டுவார் – ரணில்

ராஜபக்‌ச படையணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மைத்திரிபால சிறிசேனவை நாம் பொது வேட்பாளராகக் களமிறக்கிப் போராட்டம் செய்கின்றோம், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கெளதம புத்தர் சமாதானமாக ஒன்று கூடுங்கள், சமாதானமாகப் பேசுங்கள், சமாதானமாகக் கலைந்து செல்லுங்கள் எனப் போதனை செய்தார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தலைமையிலான அரசினர்...

அன்னம் சின்னத்தில் போட்டியிடுகிறார் மைத்திரி!

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும், மைத்திரிபால சிறிசேன சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல்கள் செயலகத்தில் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். புதிய ஜனநாயக முன்னணிக் கட்சியில் அன்னம் சின்னத்தில் மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

சர்வதேச தரத்தில் யாழ்ப்பாணத்தில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம்

சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை யாழ். அரியாலைப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜோசப் ஷெப் பிளாட்டர் பிற்பகல் 1.50 மணியளவில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், மத்திய...

தேசிய கல்வியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியல் பாடங்களை அடுத்த ஆண்டுமுதல் கற்பிக்க நடவடிக்கை – டக்ளஸ்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியல் பாடங்களை அடுத்த ஆண்டுமுதல் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை, மேலும் கல்லூரியின் வளங்களை மேலும் நிறைவு செய்து சிறப்பான வளங்களோடு இயங்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் முத்தமிழ் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு...

இயற்கையால் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – ஈ.பி.டி.பி

இயற்கை தாண்டவத்தால் பாதிப்புக்குள்ளான ஏழை மக்களின் அன்றாட வாழ்வியலை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஒருபோதும் விரும்புவதில்லை என அந்த கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட வலி.வடக்கு மக்களை திங்கட்கிழமை (01) மாலை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர்,...

சுகாதார தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ். மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் மாநகர முன்றலில் பணி புறக்கணிப்பு போராட்டமொன்றை இன்று (02) மேற்கொண்டனர். சுகாதார தொழிலாளர்களாகிய தங்களை வீதி புனரமைப்பு வேலைக்கு அனுப்பியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை சுகாதார தொழிலாளர்கள் மேற்கொண்டனர். இது தொடர்பில் தெரியவருதாவது, யாழ். மாநகர சபையின் சுகாதார பணிமனையில் பணியாற்றுவதற்காக 22 பெண், 55...

வீதியில் உணவு சமைத்து போராட்டம்

யாழ்ப்பாணம், பொம்மாவெளி, முதலாம் குறுக்குதெரு ஜே - 87 கிராமஅலுவலர் எல்லைக்குட்பட்ட முஸ்லிம் மக்கள், வீதியில் உணவு சமைத்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை (02) முன்னெடுத்தனர். கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அன்றாட உணவுகளை...
Loading posts...

All posts loaded

No more posts