Ad Widget

காணாமற்போனவர் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது

கடந்த 25ஆம் திகதி முதல் காணாமற்போனதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த யாழ்.மாலுசந்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் மயூரன் (வயது 21) என்ற இளைஞனை திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இளைஞனைக் காணவில்லையென அவரது தாயார் கடந்த 26ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

குளிர்பான நிலையமொன்றுக்கு வேலைக்காக சென்ற மகன் வீடு திரும்பவில்லையென தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருட்டுக் குற்றச்சாட்டில் கொடிகாமம் பொலிஸாரால் சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களில் மேற்படி இளைஞனும் அடங்குவதாக கொடிகாமம் பொலிஸார் நெல்லியடி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

Related Posts