- Monday
- November 10th, 2025
ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிடுமாறு வலியுறுத்தி நாளைமறுதினம் இடம்பெறும் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் விடுத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இறுதிப் போரிலே எம் இனத்தின் மீது இலங்கை அரசு அதன் இராணுவ இயந்திரத்தைக் கொண்டு ஈவிரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலங்களுக்கு ஆறு...
காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றினை மிகவிரைவில் வெளியிட வேண்டும் - TNA காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி நேற்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? உலகே உனக்கு...
எமது மக்களுக்காக அரசியல் துணிச்சலோடு எமது இணக்க அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தோம். நாம் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வந்த எமது அரசியல் வழிமுறை நோக்கி காலம் கடந்தாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வந்திருப்பதை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்கின்றோம் என ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார். அவர்...
செயற்றிட்டங்களுக்கு வடமாகாண சபையிடம் நிதியுதவி கோருவோர் வடமாகாண சபை உறுப்பினர்களை தொடர்பு கொண்டு தமது கோரிக்கைகளை அவர்கள் ஊடாக சமர்ப்பிக்குமாறு வடமாகாண சபை உதவிச் செயலாளர் பா.ஜெயகரன் சனிக்கிழமை (21) அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், செயற்றிட்டங்களுக்கு வடமாகாண சபையிடம் நிதியுதவி கோரும் விண்ணப்பங்கள் பல பேரவைச் செயலகத்துக்கும் அவைத்தலைவருக்கும் அனுப்பப்படுகின்றன. எனினும் பிரமாண அடிப்படையிலான...
காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு மேலும் 6 மாதங்களுக்கு கால நீடிப்புச் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றினை மிகவிரைவில் வெளியிட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்றும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் இராணுவம் வெளியேற வேண்டும்,...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயான ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு அவரின் மகள் விபூசிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது மகாதேவா ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுமி விபூசிக்கா, தனது தாய் கைது செய்யப்பட்டமைக்கான விபரம் முழுவதையும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.
இலங்கை பற்றிய பிரதிபலிப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தால் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தை நிறுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் வௌிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தால், குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தின் கடைசி சில மாதங்களில் பெருந்தொகை பணம் இவ்வாறு செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....
காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும் யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. தொடர்ந்து பேரணியாகச் சென்றவர்கள் ஆஸ்பத்திரி வீதியூடாக காங்கேசன்துறை...
தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடாத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை பின்போடுவது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்றும் புலிகளே அவரைக் கொன்றிருக்கலாம் என மறைமுகமாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரபாகரனின் இளைய மகன் தொடர்பில், இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும்...
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையை வெளியிடும் திகதி ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்மானம் எம்மை ஆழ்ந்த கவலைக்கு உட்படுத்தியுள்ளது என தமிழ் சிவில் சமூகம் வெள்ளிக்கிழமை (20) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையயில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இத்தீர்மானம்,...
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (20) ஆளுநர் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த தொண்டர்கள் கடந்த 4 தினங்களாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (20) ஆளுநர் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆளுநருக்கு...
சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைதியான முறையில் பேரணியில் ஒன்று திரளுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் யாழ். மாவட்ட தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான சந்திரலிங்கம் சுகிர்தன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (20) ஊடகங்களுக்கு அவர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அவருடைய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை...
யாழ்.நகரப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் தொடர்பில் உடனடியாக கவனத்தில் எடுத்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரை யாழ்.வணிகர் கழகம் கோரியுள்ளது. இது தொடர்பில் யாழ். வணிகர் கழகம் ரயில்வே திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ரயில் பயணத்துடன் யாழ்.குடாநாட்டு மக்கள் நீண்ட பரீட்சயம் அற்றவர்கள். இரண்டு தசாப்தங்களின்...
காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் “காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா?“ “உலகே உனக்கு கண்ணில்லையா?“ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்தப் போராட்டத்தில் வடமாகாண...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரின் விரைவான செயற்பாட்டால் நூற்றாண்டுகள் பெறுமதியான மரம் காப்பற்றப்பட்டது. அத்துடன் அயலில் இருந்த வீடுகளுக்கு ஏற்படவிருந்த பெரும் சேதமும் தவிர்க்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை 4 மணியளவில் நல்லூர் கற்பகப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இருந்த மகோகனி மரமே எரியுண்டது. மரத்துக்கு அண்மையாக குப்பைகளைப் போட்ட சிலர் அதை எரியூட்டி சென்றனர்...
வன்னியில் தற்போதுள்ள மக்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்கள் குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்குமான தேவை அதிகமாகக் காணப்படுகின்றது என சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதிக்கு சென்று திரும்பிய பிரிட்டனின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் லாரா டேவிஸ் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ இணையப் பக்கத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...
சாவகச்சேரி நகராட்சி மன்ற சுகாதாரத்தொழிலாளர்களுக்காக விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை (20) காலை உதயசூரியன் குடியிருப்புப்பகுதியில் சாவகச்சேரி நகராட்சி மன்ற தவிசாளர் தேவசகாயம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. அதிபர் க.அருந்தவபாலன் பிரதம விருந்தினராக கலந்த கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன் முதற்கட்டமாக 5 விடுதிகள் 47 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில்...
இலங்கை கடல் எல்லையைத் தாண்டி தமிழக மீனவர்கள் வருவதைத் தடுப்பதற்கு எமது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட கடல்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் தலைவர் சு.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். கடற்தொழிலாளர் சங்கத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழக மீனவரின் இழுவைப்படகுகளால் எமது...
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தினால் இவ்வாண்டும் 'அறிவு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக உற்பத்தி திறனை மேம்படுத்தல்' என்னும் தொனிப்பொருளிலான சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆய்வரங்கிற்கான ஆக்கங்கள் யாழ் பல்கலைக்கழகத்தினால் கோரப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் முகாமைத்துவ...
Loading posts...
All posts loaded
No more posts
