Ad Widget

எல்லை தாண்டிய மீனவர்கள் 37 பேர் கைது

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐந்து மீனவப்படகுகளும் இதன்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் கைதான மீனவர்களும் கைப்பற்றப்பட்ட படகுகளும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts