- Wednesday
- July 2nd, 2025

பழைய பூங்கா வளாகத்தில் 48 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தொகுதி உள்நாட்டு அலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரால் திங்கட்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. சென்.ஜோன்ஸ் கல்லூரியில் வசதிகள் குன்றிய நிலையில இயங்கி வந்த...

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் அழகியற் பாட கற்கை நெறியை மீள ஆரம்பிக்கவேண்டியது அவசியம் என கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் திங்கட்கிழமை (09) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கல்வியற் கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வந்த அழகியல் கற்கைநெறி கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கற்கை நெறியை கற்பதற்கு...

ஆலயமொன்றின் தேர் திருவிழாவுக்குச் சென்று காணாமற்போன எனது மகன் பற்றிய தகவல்கள் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளதாக தாய் ஒருவர் தெரிவித்தார். காணாற்போன மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தாயொருவரே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், எனது மகன்...

“பொதுமக்களின் பாதுகாப்புக்காக அமைக்கபட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் தீர்மானிக்க வில்லை. இராணுவத்தை குறைக்கும் தேவைப்பாடும் எமக்கு தற்போது இல்லை' என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார். இதேவேளை, 'சர்வதேச நாடுகள் பல எமது பாதுகாப்பு படையினருக்கு பயிற்சிகள் வழங்க தற்போது முன்வந்திருக்கின்றன. இது வரவேற்கதக்கதாகும்' என்றும் அவர் தெரிவித்தார். திருகோணமலைக்கு ஞாயிற்றுக்கிழமை(8)...

விமானக்கொள்வனவு, வாகனங்கள் மீட்பு, ஜனாதிபதி செலவுக்கென கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கீடு மற்றும் ஊழல் மோசடி உட்பட தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்றாக மறுத்துள்ளார். தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளித்து ஊடக அறிக்கையொன்றை திங்கட்கிழமை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதில், '2015ஆம் ஆண்டில் ஜனாதிபதி செயலகத்துக்கு 959 கோடி...

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு தனக்கு இதுவரையிலும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பியை பார்வையிட்டதன் பின்னர், அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நான், திஸ்ஸ அத்தநாயக்க, பிரேமலால் ஜயசேகர...

கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற பாரிய ஊழல்களை பற்றி விசாரணை செய்வதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அடுத்தவாரம் நிறுவப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரலகங்விலவில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதவி, தராதரம், கட்சி மற்றும் நபர்கள் யாரென்று பார்க்காது இந்த ஆணைக்குழு செயற்படும். சொத்துக்களை...

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் சங்கானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது நூலக கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. வலிகாமம் மேற்கு பிரதேச சபை தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சிறப்பு...

மதவாச்சியில் இடம்பெற்ற லொறி விபத்தில் ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு ரயில் தண்டவாளங்களை ஏற்றிக்கொண்டு வந்தபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தண்டவாளங்களுக்குள் நசுங்குண்ட நிலையிலேயே அந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தில் காயமடைந்த 13 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு...

மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தால் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்க சர்வதேச பொறிமுறை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் - என்ற தலைப்பில் கடந்த ஆண்டு மாகாண சபையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த பிரேரணை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் விசேட...

சுன்னாகம், தெல்லிப்பளை பிரதேசங்களில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக விரிவான விஞ்ஞான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாகப் பூரணமான ஆய்வு ஒன்றை நடாத்துவதற்கு வடக்குமாகாண முதல்வரின் பணிப்பின் பேரில் நிபுணர் குழு ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்,கிழக்கு பல்கலைக்கழகம்,கொழும்புபல்கலைக்கழகம், மற்றும் பேராதனைபல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுநர்கள் இக்குழுவில்...

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை சீர்திருத்தம் புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி தற்போது 60 பில்லியனால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை (6) நிபுணத்துவ சங்கங்கள் அமைப்பின் அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தொடரில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் போது நிதியமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து ஒப்பந்தக்காரர்களை அழைத்து...

மருதங்கேணி பிரதேச செயலகத்தின் திறப்பு விழாவை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். மருதங்கேணி (வடமராட்சி கிழக்கு) பிரதேச செயலக கட்டடத் திறப்பு விழா மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜீ.எஸ்.பலிகக்கார, வடமாகாண...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவை இன்று திங்கட்கிழமை பார்வையிட்டார். திஸ்ஸ அத்தநாயக்கவுடன் சில நிமிடங்கள் உரையாடிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது...

தமிழ் மக்களின் உரிமைக்காகவும் நலன்களுக்காகவும் இறுதிவரை உழைத்த மாபெரும் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 38ஆவது சிரார்த்த தினம் குருநகரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலையில் திங்கட்கிழமை (09) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், சேர்.பொன் இராமநாதனின் மறைவுக்கு...

காணாமற் போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறும் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் கோரி அவர்களின் உறவுகள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். இதன்போது அவர்களின் கண்ணீர்க் கதறலால் யாழ். நகரமே சோக மயமானது. யாழ்ப்பாணம் பஸ் நிலையம் முன்பாக முற்பகல் 10 மணியளவில் ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். "அரசே காணாமல் போனோரை கண்டுபிடித்துத் தா",...

2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 6ம் திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கலாம். பாடசாலை பரீட்சார்த்திகள் தங்களின் விண்ணப்பங்களை பாடசாலை அதிபரின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம். இதன்படி...

வடமாகாணத்தில் வாழும் சாதாரண மக்களின் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு நிலையான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது எமது பொறுப்பும் கடமையுமாகும் என்று வடமாகாணத்தின் புதிய ஆளுநர் எச்.எம்.பி.எஸ். பளிகக்கார தெரிவித்தார். வடமாகாணத்தில் வாழும் மக்களின் தேவைகளையும், அவர்களது எண்ணங்களையும் சரியான முறையில் அடையாளம் காண வேண்டும். நீண்ட காலமாக பல தரப்புக்களுடனும் செயற்பட்ட இவர்களது பிரச்சினைகளுக்கு...

யாழ் மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் 2014 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று (08) நடைபெற்றது. 51, 52 மற்றும் 55 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்...

பொதுப் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படாவிடின், நாடாளுமன்றம் இந்தவாரம் கலைக்கப்பட்டுவிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று (08) தெரிவித்தார். ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே...

All posts loaded
No more posts