- Saturday
- May 18th, 2024
இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும். இதன்மூலம், இலங்கையிலுள்ள எந்தவொரு இடத்தையும் கூகிள் இணையத்தளத்தில் தத்ரூபமாக பார்வையிடக்கூடிய வசதி கிடைக்கிறது. கூகிள் ஸ்ட்ரீட் வியூ என்ற சேவையில் 63 நாடுகள்...
யாழ். மாவட்டத்திலுள்ள வானொலி அறிவிப்பாளரான பெண் ஒருவர் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரியாலை பகுதியில் வைத்து இரவு 07.00 மணியளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான 23 வயதான குறித்த யுவதி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது, அரியாலை பகுதியில் வைத்து அவர் சென்ற மோட்டார் சைக்கிளை தள்ளிவிழுத்தியதுடன், கழுத்தை நெரித்துக் கொலை...
யாழ் குடாநாட்டில் இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராணுவத்தினர் உதவிகளைச் செய்து வருகின்றனர். யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ளனர். யாழ் மாவட்ட பாதுகாப்புப் படையின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸின் வழிகாட்டலின் கீழ் இந்த உதவி வேலைகள், நடமாடும் சேவைகள்...
திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் உலக வாழ் இந்துக்களின் புனித ஸ்தலம். கிறிஸ்தவர்களுக்கு வத்திகானும், இஸ்லாமியர்களுக்கு மெக்காவும் எப்படியோ, அப்படியே இந்துக்களுக்கு திருப்பதி ஆகும். இந்நிலையில் இங்கே வாழும் இந்துக்களை பந்தாடிவிட்டு, உலக இந்துக்களின் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்றாடுவது நியாயமா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி...
யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள பொதுக்கிணறு நாம் நண்பர்கள் அமைப்பினால் புனரமைக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் பலர் பாவிக்கும் இந்தக் கிணற்றின் முன் பகுதி பாதுகாப்பாக இல்லாமையால் வீதியிலுள்ள அழுக்குகள் கிணற்றினுள் செல்கிறது. அதைத் தடுப்பததற்காக தற்போது கிணற்றின் முன் பக்க கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, கால்நடைகள் நீர் அருந்துவதற்கேற்ற வகையில் நீர்த்தொட்டி ஒன்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளியிலிருந்து...
எமது வடமாகாண இளைஞர் யுவதிகள் நினைத்தால் எதனையும் சாதிக்கக் கூடிய சக்தி கொண்டவர்கள். இவர்களை ஊக்குவிக்க எமது விளையாட்டுத் திணைக்களம் காத்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் உதவினாலும் நீங்களே உங்களை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்லவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஐந்தாவது வர்ண இரவு விருது வழங்கும்விழா...
இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் வழங்குவதாக இருந்தால் மாத்திரமே இரணைமடுக்குளத்தைப் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யமுடியும் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் இரணைமடுக்குள அணைக்கட்டைப் புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி வழங்க முன்வந்திருப்பதாக வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல், உணவு வழங்கல், சுற்றாடல், மற்றும் கூட்டுறவுத்துறை...
பத்திரிகைகள் பக்கச் சார்பாக இயங்கி, பத்திரிகை பயங்கரவாதத்தை நடத்துகின்றன. உண்மையான செய்திகளை வெளியிடுவதற்கு பத்திரிகைகளுக்கு காசு கொடுக்க வேண்டுமா? என வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, வடமாகாண சபை அமர்வில் தான் கூறிய கருத்தொன்றுக்கு...
வடமாகாண சபையின் அபிவிருத்தி மற்றும் கவனிப்புக்களில் வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அதனை தவிர்த்து அனைத்து நடவடிக்கைகளிலும் வவுனியா மாவட்டத்தை உள்ளடக்கி வடமாகாண சபை செயற்படவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.தியாகராசா கோரிக்கை முன்வைத்தார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, மழை...
யாழ்ப்பாணம் தமிழ் சங்கம் நடத்தும் நாவலர் விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்புரையை "நாவலரின் பன்முக ஆளுமை" என்ற தலைப்பில் உரும்பிராய் இந்துக்கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் நிகழ்த்துவார். தொடர்ந்து...
அரசியல் யாப்புக்கு முரணான விதத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு துணை போகும் வர்த்தமானி அறிவித்தலை (1882/6 இலக்கம் - 2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் 30ஆம் திகதி) ரத்து செய்ய கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு, கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது,...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது, வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் உள்ளக வீதி திருத்தல் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதி திருத்தல், வர்ணம் பூசுதல் ஆகியவற்றுக்காக 8.87 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11)...
மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத மூவர் கொண்ட குழு வாளினால் வெட்டியதில் திசைகாட்டி நிறுவனத்தின் நிர்வாகி எஸ்.சுபசீலன் (வயது 42) படுகாய மடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நேற்று இரவு 11 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலேயே மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த...
2014 டிசம்பர் 10ம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் 'சுதந்திர பயணம்' வடமாகாண இளைஞர்கள் மாநாட்டில் ஏகமானதாக கைக்கொள்ளப்பட்ட பிரகடனம். முன்னுரை இலங்கை 1948இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்ததோடு இனமுரண்பாடு தோற்றம் பெற்றது எனலாம். இதன் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த தலைவர்களின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் மற்றும் அவர்களின் கொள்கைகள் காரணமாக தொடர்ந்த இன...
வடக்கு, கிழக்குத் தமிழர்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமது வாக்குரிமையை முழு அளவில் பிரயோகிக்கும்படி வலியுறுத்தி வேண்டுவது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது. எனினும் யாருக்குத் தமது வாக்குகளை அளிப்பது என்பது பற்றிய முடிவை பின்னர் தீர்மானித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவது என்றும் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...
"சில அம்மையார்கள் வந்து எதற்கும் பயப்பட வேண்டாம் என்று கூறுகின்றனர். அத்துடன் எமக்கு எதிராக ஆணைக்குழு அமைத்து விசாரிக்கப்போகிறார்களாம். ஆணைக்குழுவை அமையுங்கள். நாங்கள் பயப்படவில்லை. எனது கையில் இரத்தம் தோயவில்லை. எனது கையில் அழுக்குப் படியவில்லை. அவ்வாறு இரத்தம் தோய்ந்தும் அழுக்குப் படிந்தும் இருந்தால் எனது கைகளை நானே வெட்டிவிடுவேன்." - இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த...
நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சருக்கு அதிகாரங்கள் இல்லையென்றால் அதற்காக போராடுவதற்கு தயாராகவிருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, வியாழக்கிழமை (11) தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, நெல்சிப் திட்டத்தில் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில், அதற்கு...
ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் வேளையில் வட மாகாண ஆளுநரால் ஒரு தொகுதி மோட்டார் சைக்கிள்கள் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் அரச துறைகளில் வேலை வாய்ப்புக்களோ, அரச உதவிகளோ, இடமாற்றங்களோ வழங்கப்படுவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல். இந்தநிலையில் ஆளுநர் செயலகத்தில் பல்வேறு திணைக்களங்களை சேர்ந்த 92 அரச...
சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது. வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது கடந்த அமர்வில் உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலைத் தூக்கியெறிந்து சபையின்...
கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய, ஹோகந்தரவில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் 32 ரக விமானமே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த சில நிமிடங்களிலேயே விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. அனைத் தொடர்தே விமானம் விபத்துக்குள்ளானது....
Loading posts...
All posts loaded
No more posts