Ad Widget

உணவு தவிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது

காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரியும் நீதியான சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்றும் வலியுறுத்தி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 2ஆம் நாளாக நேற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது.

காணாமல் போனோரின் அமைப்புக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்குப் பல அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன்போது கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களுடன் பாதிக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் முள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பமாகிய நடைபவணி இன்று நல்லூர் முன்றலை வந்தடைந்து போராட்டம் நிறைவு பெறவுள்ளது என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபடும் இடத்திற்கு பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தியோக பூர்வமாக கோரிக்கை விடுத்தபோதும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related Posts