Ad Widget

வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது – இராணுவத் தளபதி

வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக படையினரோ அல்லது படைமுகாம்களோ அங்கிருந்து அகற்றப்படமாட்டாது என,இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டிசில்வா,தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கில் மீண்டும் ஆயுதக்கிளர்ச்சி ஏற்படாமல் தடுப்பதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.தேசிய பாதுகாப்புக்கோ அல்லது நாட்டின் ஒருமைப்பாட்டுக்ககோ,சவால்கள் ஏற்பாட்டால் அந்த அச்சுறுத்தலை முறியடிப்பதற்கு எம்மாலான முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

வடக்கு – கிழக்கு காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக படையினரோ அல்லது படைமுகாம்களோ அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்படாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts