Ad Widget

ஆயுதக் குழுவின் அட்டகாசங்களால் கெருடாவில் மக்கள் இரவில் நடமாட அச்சம்!

சாவகச்சேரி கெருடாவிலில் கொட்டன்கள் மற்றும் ஆயுதங்களுடன் நடமாடும் குழுவினரால் மக்கள் இரவில் நடமாட மக்கள் அஞ்சுகின்றனர்.

இந்தக் குழுவினர் இரவில் நடமாடுவோரை வழிமறித்து இடையூறு விளைவிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் இரவில் நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது.

தவிர மட்டுவில், சரசாலை பகுதிகளைச் சேர்ந்த சாவகச்சேரி நகர்ப் பகுதி வர்த்தகர்கள் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு வீடுகளுக்குச் செல்வதற்கு சாவகச்சேரி கனகன்புளியடி வீதியைப் பயன்படுத்தாமல் வேறு மார்க்கத்தில் செல்கின்றனர்.

அண்மையில் இப்பகுதி வர்த்தகர் மீது இனந்தெரியாதோரால் வாள்வெட்டு நடத்தப்பட்டதையடுத்து இரவுவேளைகளில் இவ்வாறான நடவடிக்கை இடம்பெறுகின்றன எனக் கூறப்படுகின்றது.

இந்தக் குழுவின் அடாவடிகளுக்கு எதிராக சாவகச்சேரிப் பொலிஸார் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts