Ad Widget

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

பாரம் தூக்கி மூலம் சீமெந்துத் தூணை தூக்கி நட முயன்ற வேளையில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தெல்லிப்பழை, கொல்லங்கலட்டிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான சங்கானை, சிலம்பு புளியடியைச் சேர்ந்த தங்கமுத்து சோதிநாதன்(வயது-34) என்பவரே உயிரிழந்தார்.

கொல்லங்கலட்டிப் பகுதியில் வீதிக்கு மின்சார இணைப்பை வழங்குவதற்காக தனியார் ஒப்பந்தகாரர் மூலம் தூண்களை நிறுத்தும்பணிகளை மின்சார சபை மேற்கொண்டுவருகிறது. நேற்று இரவு குறித்த பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பாரம் தூக்கிமூலம் மின்சாரக் கம்பத்தை நட முற்பட்டவேளை அந்தத் தூண் உயர் மின் அழுத்த இணைப்பில் பட்டுள்ளது.

இதன்போது பாரம் தூக்கியை இயக்கிக் கொண்டிருந்த சாரதி மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts