- Monday
- November 10th, 2025
சிவராத்திரி தினத்துக்காக கோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு புதன்கிழமை (18) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார். சிவராத்திரியை முன்னிட்டு வடமாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், கலாசாலைக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான பதில் நாளாக எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை கலாசாலை செயற்படும். கற்பித்தல் பயிற்சிக்காக பாடஅலகுகளை பெறவேண்டிய ஆசிரிய மாணவர்கள்...
ஆவரங்கால் மந்திரிமனை ஜே-277 பகுதியில் அமைந்துள்ள வீடொன்று திங்கட்கிழமை (16) மாலை தீக்கிரையாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தனர். வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முற்றாக எரிந்தமையால் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. மேற்படி வீட்டில் சாமி அறையில் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்த தீ, வீடு முழுவதுமாக பரவியதாக விசாரணைகளின் மூலம்...
கடந்த அரசாங்கத்தின் போது அறுகம்பே மற்றும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு ஜனாதிபதி மாளிகைகள் இரண்டும் ஹோட்டல்களாக மாற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாளிகைகள் இரண்டும் ஜனாதிபதி செயலக நிதியத்திலிருந்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவற்றை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்றத்தின்...
இறுதிப்போரில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிப்பதை தாமதப்படும் முடிவை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை எடுத்தால் அதன் காரணமாக குற்றம் புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பி செல்ல கூடும். அதற்கு இலங்கை இடமளிக்க கூடாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய கீர்த்தி திஸாநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திலிருந்து 100 வாகனங்கள் காணாமல் போன குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படாது காணப்படுகின்றன என வடக்கு முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் இணைந்து உள்ளூராட்சி அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது. அதன்போது வடக்கு மாகாண பிரதம செயலர் பத்திநாதன் தனது வரவேற்புரையிலும் முதல்வர்...
"இரத்தம் சிந்தி, சத்தியாக்கிரகம் இருந்து இழந்து - அழிந்து போன ஒரு சமூகத்திற்காக உருவானது தான் இந்த மாகாண சபை. எனவே, கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவியை வகிக்க எமக்கு உரிமை இல்லையா?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். "கிழக்கு மாகாணத்திற்கு...
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்ரெம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்ஸில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒரு முறை மட்டுமே தாம் இதனை ஒத்திவைப்பதாக அவர் வலியுறுத்தினார். இலங்கையில்...
இளவாலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சகோதரர்களின் இரண்டு படகுகள் விசமிகளால் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு தீயிட்டு எரிக்கப்பட்டதாக இளவாலை பொலிஸார் திங்கட்கிழமை (16) தெரிவித்தனர். சகோதரர்களான பாக்கியநாதன் றேகன் மற்றும் பாக்கியநாதன் கமில்ரன் ஆகியோருடைய இரண்டு படகுகள், இரண்டு படகு இயந்திரங்கள் 40 வலைகள் என்பன தீயால் எரிந்துள்ளன. இரண்டு படகுகள் எரிவதாக பொதுமக்கள் வழங்கிய...
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரின் கைப்பையில் இருந்த நகைகள் திருட்டுப்போன சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றதாக யாழ்ப்பாண பொலிஸார் கூறினர். பெண்ணொருவர் தனது சிறிய கைப்பையை தனதருகில் வைத்துவிட்டு, அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த தருணம், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் அதனை திருடிச் சென்றுள்ளார். அலைபேசியில் உரையாடிய பின்னர், தனது கைப்பையை தேடியபோதே...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பு மட்டத்தில் நீலப்படையணி எனும் பெயரில் கடந்த காலங்களில் செயற்பட்ட படையணி, இனிமேல் செயற்படாது என்றும் அப்படையணி ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் சு.க.வின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இனிமேலும் நீலப்படையணி போன்ற படையணிகள் செயற்பட மாட்டாது. எங்களிடம் ஸ்ரீ லங்கா...
கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு திருயாத்திரை மேற்கொண்டிருந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் சமூக சேவை நிதியத்துக்காக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபையினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 8.7 மில்லியன் ரூபாய் நிதியை, இலங்கைக்கே மீண்டும் பரிசளிக்க பாப்பரசர் தீர்மானித்துள்ளார். அந்த நிதியில், இலங்கையிலுள்ள ஏழைகளுக்கான உதவிகளைச் செய்து, அது தொடர்பான அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு கொழும்பு...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான சிவில் பயன்பாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு, விவசாயம், கல்வி, கலாச்சாரம் ஆகிய நான்கு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு நான்குநாள் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் புதுடில்லியில் நேற்று திங்கட்கிழமை மதியம் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இந்தச் சந்திப்பின் இறுதியில் முக்கிய ஒப்பந்தங்கள்...
கீழுள்ள படத்தில் இருப்பவரை கண்டால் உடனடியாக பொலிஸூக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இணையத்தளங்களின் ஊடாக பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் தேடப்பட்டுவருகின்றார். குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே இந்த சந்தேகநபரை கைதுசெய்துசெய்வதற்கு தேடிவருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், அதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர். திஸாநாயக்க முதியன்செலாகே சுஜித் நிலந்த என்ற...
பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தினை அடுத்து பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. குறித்த வாகனங்களை கரு...
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் நரேந்திரமோடியை இன்று திங்கட்கிழமை காலை சந்தித்தார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு விசேட இராணுவ மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபாலவின் பாரியார், இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவலோக்தேஸ்வர போதிசத்துவர் சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (15) பிற்பகல் திரை நீக்கம் செய்து வைத்தார். கி.மு 08ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த போதிசத்துவர் சிலை அனுராதபுர வேரகல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட வெண்கலச் சிலையான இதன் பாதங்கள் லலிதாசன...
வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை யாழ்.பிரதான நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய, வடக்குமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், வடக்குமாகாண ஆளுநர், வடமாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர்கள்,...
கோண்டாவில் பகுதியில் வாள்கள், பொல்லுகள் மற்றும் கம்பிகளுடன் வீதியில் நின்றுகொண்டிருந்த நான்கு சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (15) இரவு கைது செய்ததாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சண்டையொன்றில் ஈடுபடும் நோக்குடன் வீதியில் நின்றிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்தனர். கோண்டாவில் பகுதியில் சனிக்கிழமை (14) மாலையில்...
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இனப்படுகொலை குறித்த தீர்மானம் பற்றி, வட மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா கருத்து வௌியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இலங்கை அரசின் இனப் படுகொலை தொடர்பாக அண்மையில் வட மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஜனாதிபதி சிறிசேனவிற்கோ அல்லது அவரின் அரசிற்கோ எதிரானதல்ல எனவும் முன்னைய அரசுகளையே, குறிப்பாக...
Loading posts...
All posts loaded
No more posts
