Ad Widget

யாழ். எஸ்.எஸ்.பி கொலைக்குற்றச்சாட்டில் கைது

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன கொலை குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொம்பே பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளரைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டே விமலசேன கைது செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.எஸ்.பியுடன் தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணத்திற்கு பதவியேற்று வருவதற்கு முன்னர் குறித்த பகுதியில் எஸ்.எஸ்.பியாக விமலசே கடமையாற்றியபோது விடுதி உரிமையாளர் ஒருவரை சுட்டுக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

எனினும் சூட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்தியது விமலசேனவின் துப்பாக்கி என்ற காரணத்தின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் கொழும்பில் வைத்து விமலசேன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts