- Saturday
- June 27th, 2026
வடமாகாண சபையின் செயற்பாடுகளை வெளியிடக்கூடிய வகையில் வடக்கு மாகாண சபை பேரவைச் செயலகத்துக்கு தனியான இணையத்தளம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை(17) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே, அவைத்தலைவர் இந்த பிரேரணை...
கிளிநொச்சி, புதுக்காட்டுச் சந்தியில் இன்று புதன்கிழமை (18) அதிகாலை பாரவூர்தியொன்று மரத்துடன் மோதியதால், பாரவூர்தியின் சாரதியும் உதவியாளரும் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். பாரவூர்தியின் உரிமையாளரும் சாரதியுமான இரத்தினசிங்கம் தர்மசிங்கம் (வயது 51), ஆவரங்காலைச் சேர்ந்த தெய்வம் ரங்கநாதன் (வயது 33) ஆகிய இருவருமே உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு...
யாழ்ப்பாணம் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது என்று பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தரை நீக்குமாறு விஞ்ஞான பீட விரிவுரையாளர்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்று சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி பிரபாத் ஜய சிங்க தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் முறையாக...
இராணுவத்தினரிடமே எனது கணவரை ஒப்படைத்தேன். அரசுதான் எனது கணவருக்குப் பொறுப்பு. அவர்கள்தான் எனது கணவரை விடுவிக்க வேண்டும் இவ்வாறு கண்ணீர் விட்டவாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனைவி ஒருவர் சாட்சியமளித்தார். காணாமற் போனோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த தவணையில், வழக்காளி ஒருவர் குறுக்கு விசாரணை...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த முயற்சிக்கின்றார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாக வடக்கு மாகாணசபையில் நேற்றுக் குற்றஞ்சுமத்தினார். வடக்கு முதலமைச்சருடன் பேசமாட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்தான் பேசுவேன் என்று அவர் கூறுவது எம்முள் பிரிவினையை ஏற்படுத்தப் பயன்படுத்தும் உபாயமாகவே நான் கருதுகின்றேன் என்று முதலமைச்சர் தெரிவித்தார்....
இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய சிவில் நிர்வாக, கல்வித்துறை, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. இது அரசியலமைப்பு உரிமையாகும். இதை தடை செய்வது சட்ட விரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமுலாகும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி...
வடமாகாணத்தில் இருக்கும் இராணுவ முகாம்களை அகற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்மதிக்கின்றாரா? என்பது தொடர்பில் அறியத்தர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 26 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அவ்வமர்வில் இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு பிரதமர் வழங்கிய செவ்வியில் நான் பொய் உரைப்பதாக கூறி இருந்தமை தொடர்பில் முதலமைச்சர் கருத்து...
பேஸ்புக், அதாவது முகநூலில் இனிமேல் என்னென்னவையெல்லாம் அனுமதிக்கப்படும்; எவையெவையெல்லாம் அனுமதிக்கப்படாது என்பது குறித்த தனது புதிய விதிமுறைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆபாசமானவை, ஆபத்தை விளைவிப்பவை, தற்கொலை, கொலை போன்ற உயிர்ப்பலியை ஊக்குவிப்பவை, குற்றச்செயல் தொடர்புடையவை, துவேஷத்தை தூண்டுபவை, பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீதான வன்மான தாக்குதல் உள்ளிட்ட பலவிதமானவை இனிமேல் முகநூலில் அனுமதிப்படாது என்று முகநூலின்...
மத்திய வங்கியின் திறைசேரி பிணைப் பத்திரங்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை, மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் விடுப்பில் செல்லவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ஆற்றும் விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்ட திறைசேரி பிணைப் பத்திரங்கள்...
வரலாற்றில் முதன்முறையாக வடக்கிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடையில் அழைத்து வர தன்னால் முடிந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற விஷேட சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இனவாத கோசங்களினால் நாட்டை மீளவும் யுத்தத்தை நோக்கி நகர்த்தக் கூடாது, எனவும் இங்கு...
யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் சித்திரமும் வடிவமைத்தலும் கற்கை மாணவர்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி இன்று செவ்வாய்க்கிழமையும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கடந்த காலத்தில் தமக்கான பரீட்சைகள் சீராக நடை பெறவில்லையெனவும் ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும் நுண்கலைப் பீட்த்தின் சித்திரமும் வடிவமைப்பும் கற்கைக்கான பரீட்சைகள் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்து மூன்றம்சக் கோரிக்கைகளை...
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இன்று காலை தண்ணீர் எடுக்கச் சென்றவர்கள் கிணற்றினுள் சடலம் காணப்படுவதை அவதானித்துள்ளனர். இதுகுறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல்கொடுக்கப்பட்டு, பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா, வேப்பங்குளம், 7 ஆம் ஒழுங்கைச் சேர்ந்த குணரட்ணம்...
யாழ். மாநகர சபைக்குட்பட்ட நாவாந்துறை, பண்ணை ஆகிய பகுதியில் அமைந்துள்ள இறைச்சிக்கடையின் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (17) தமது கடைகளை பூட்டி ஆடு, மாடுகள் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை தருமாறு மாநகரசபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனிடம் மகஜர் கையளித்துள்ளனர். யாழ்.மாநகர சபையின் கேள்வி அறிவித்தல் மூலம் கடைகளை குத்தகைக்கு எடுத்த இறைச்சிக் கடைக்காரர்கள், பண்ணையிலுள்ள கொல்கலனுக்கு ஆடு,...
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் நியதிச்சட்டம் சபையில் ஏகமனதாக திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் 2ஆம் 3ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. குழு நிலைக்கு மாறிய சபையில் 16 சரத்துக்களை கொண்ட நியதிச்சட்டம் தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்றன. திருத்தங்களுடன் நியதிச்சட்டம் சபையில் அமைச்சர் சத்தியலிங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. அதனை உறுப்பினர் பரஞ்சோதி...
யாழ்ப்பாணம், அச்சுவேலி அந்தோனியார் தேவாலய முன்றலில் பஸ் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனொருவர் படுகாயமடைந்த சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்றது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறையை சேர்ந்த வி.ரவீந்திரன் (30) என்பவரே படுகாயமடைந்தார். வீதியொன்றில் திரும்ப முற்பட்ட பஸ் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது....
வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவை ஆளுங்கட்சியின் பக்கம் வந்து அமரும்படியும் தங்களின் சில உறுப்பினர்களை எதிர்க்கட்சியின் பக்கமும் அமருவதற்கும் அனுமதிப்பதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களின் ஒழுங்குகள், சபையில் நடந்துகொள்ளும்...
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் வரவேற்பு மிகவும் குறைந்தளவிலேயே இருந்தது . இதற்கு ஏற்பாடு செய்த நிர்வாகத்தில் பிழை இருப்பதாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா குற்றஞ்சாட்டியிருந்தார். வடக்கு மாகாண சபையின் 26ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கட்டடதொகுதியில் இடம்பெற்று வருகின்றது ....
யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையான எமது மனநிலையை எடுத்துக்காட்ட முடியவில்லை என வடக்கு முதல்வர் க.வி விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிந்தார். எனினும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் பாதுகாப்பு பிரிவினரால் அசௌகரியங்களுக்கு...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் பொதுமக்கள் தங்களுடைய ஆலோசனை மற்றும் கரிசனையை இரண்டுவாரக்காலத்துக்குள் சமர்ப்பிக்க முடியும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. வர்த்தமானி இணைப்பு
வடக்கு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ள முறையற்ற நியமனங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு 7 பேர் கொண்ட குழு ஒன்று இன்று நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 26ஆவது மாதாந்த அமர்வு இன்று காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இன்றைய அமர்விலேயே முறையற்ற நியமனம் தொடர்பில் விசாரணையினை...
Loading posts...
All posts loaded
No more posts
