Ad Widget

கச்சதீவுக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு கடமைக்குச் சென்று திரும்பிய பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

குருநாகல், கிரில்ல என்னும் இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையாக எல்.ஆர்.செனதீர (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

படகில் திரும்பிக்கொண்டிருந்த இவர் தவறி கடலுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவரது சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts