கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு கடமைக்குச் சென்று திரும்பிய பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
குருநாகல், கிரில்ல என்னும் இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையாக எல்.ஆர்.செனதீர (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
படகில் திரும்பிக்கொண்டிருந்த இவர் தவறி கடலுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவரது சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.