Ad Widget

லண்டன் விபத்தில் தமிழ்ப் பெண் சாவு

லண்டனில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

லண்டனில் நேற்று மாலை நடந்த விபத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

ஹம்டனில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பென்ஸ் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.

மேற்கு ஹம்டனில் இருந்து றோயல் பார்க் செல்லும் நோக்கில் பஸ்ஸில் ஏறுவதற்காக வீதியைக் கடந்து செல்லும்போது சுபாஹரி மீது கார் மோதியுள்ளது. அவர் மீது மோதியகார் நிறுத்தப்படாமல் சென்றுள்ளது.

விபத்துக் காரணமாக தலையில் படுகாயம் ஏற்பட்டதுடன் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுச் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

சமையல் தொழிலில் ஈடுபட்டு வரும் சுபாஹரி, 2006 ஆம் ஆண்டு லண்டனுக்குப் புலம்பெயர்ந்து சென்றார்.

Related Posts