Ad Widget

உறவுகளை மீட்டுத்தரக் கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரி ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரி வட பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போன பொதுமக்கள் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதில் கலந்து கொண்ட உறவுகள் காணாமல் போன தங்களது பிள்ளைகளை , கணவன்மாரை, சகோதர , சகோதரிகளை, தந்தையை மீட்டுத்தாருங்கள் எனக்கோரி போராட்டத்தினை மேற்கொண்டனர்.

போராட்டத்தின் முடிவில் அனைவரும் இணைந்து மாவட்ட செயலகத்திற்குச் சென்று தங்கள் உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியும் ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தித் தருமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கான மகஜரை வழங்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரிடமும் மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts