Ad Widget

யாழ் மாவட்ட செயலகத்தில் சுதந்திரதின நிகழ்வு!

இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்திற்கான தேசிய நிகழ்வு நேற்று (04) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது தேசியக்கொடியை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் ஏற்றிவைக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இதேவேளை 67 ஆவது சுதந்திர தினத்தையொட்டி யாழ் மாவட்ட சிறைச்சாலையிலிருந்து 3...

67ஆவது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நிரலில் தவறு

நாட்டின் 67ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திபால சிறிசேனவின் தலைமையில் நாடாளுமன்ற விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. செழுமையான தாய்நாடு! வளமான எதிர்காலம் எனும்தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த வைபவத்துக்கான நிகழ்ச்சி நிரலை உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சு தயாரித்திருந்தது. அத்துடன் கையேட்டையும் அச்சடித்திருந்தது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அச்சடிக்கப்பட்ட...
Ad Widget

சம்பந்தன் மீது நடவடிக்கை வேண்டும்: தமிழரசுக்கட்சி

67ஆவது சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும்...

புதிய அரசின் புதிய தேசத்தில் தமிழ்,முஸ்லிம் மக்கள் அச்சப்படத் தேவையில்லை – சந்திரிக்கா

அரசியல் காரணங்களால் பிளவுபட்ட சமாதானத்தை கட்டியெழுப்பி நல்லிணக்கத்தை ஏற்படுத்த மீண்டும் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். சட்டரீதியாக பெற்றுக்கொண்ட சமாதானத்தை உண்மையான சமாதானமாக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் புதிய அரசின் புதிய தேசத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இனி ஒருபோதும் அச்சம், சந்தேகத்துடன் வாழத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்....

தமிழர்களின் உணர்வுகளைப் புதிய அரசாங்கம் புரிந்து கொள்ளத் தவறினால் நாம் இன்னுமொரு போகியைக் கொண்டாட வேண்டிவரும் – பொ.ஐங்கரநேசன்

தமிழகத்தில் தைப்பொங்கல் திருநாளுக்கு முதல்நாள் பழையவற்றை எரித்துக்கழிக்கும் போகிப்பண்டிகையை வெகுசிறப்பாகக் கொண்டாடுவார்கள். அதேபோன்றுதான் நாமும், பொங்கலுக்கு முதல் வந்த தேர்தலில் பழைய ஜனாதிபதியை எமது வாக்குகளால் எரித்துப் பொசுக்கி அதிகாரத்தில் இருந்து களைந்திருக்கிறோம். புதிய அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இனப்பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வை முன்வைக்கத் தவறினால் நாம் இன்னுமொரு போகியைக் கொண்டாடவேண்டிவரும். என்று...

தமிழர்களின் எதிர்காலம் கருதியே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பு: சம்பந்தர் விளக்கம்

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாத வகையில் மூத்த தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.கொழும்பிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் மற்றும் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். அவ்விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பிறகே தான் முடிவெடுத்ததாக...

முதலைக்குழி நன்னீர் விநியோகத் திட்டம்

கரணவாய் தெற்கு முதலைக்குழி கிராமத்துக்கான நன்னீர் விநியோகத்திட்டத்தை வடமாகாண நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று செவ்வாய்க்கிழமை (03.02.2015) ஆரம்பித்துவைத்துள்ளார். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை எல்லைக்கு உட்பட்ட கரணவாய் தெற்கு முதலைக்குழியில் கிணற்று நீர் உவர்ப்புத்தன்மையுள்ளதாக இருப்பதால் இங்கு வாழும் மக்கள் குடிநீரைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.வடமாகாணநீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத்துறைகளுக்குப்...

வடக்கு – தெற்கு மக்களிடையே சுமுகநிலை விரைவில் உருவாக்கப்படவேண்டும்! – ஜனாதிபதி

தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரளவேணடும். போர் முடிவுக்கு கொணடுவரப்பட்டாலும் வடக்கு, தெற்கு சமூகங்களிடையே சுமுக நிலை உருவாக்கப்படுவதற்கான தேவைப்பாடுகள் இருக்கின்றன. -இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் இன்று காலை 9.30க்கு ஜனாதிபதி நாட்டுமக்களுக்கு சுதந்திர...

72 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை சுதந்திர தினத்தில் தமிழ் தலைவர்!

1972 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழர்களின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்குபற்றவில்லை. இந்த நிலையில் 43 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டார். இலங்கையின் 67...

காணாமற்போனோரின் கண்ணீரே மஹிந்தவின் ஆட்சியை கலைத்தது

கண்ணகி சிலம்பை வைத்து மதுரையை எரித்தது போல, காணாமற்போனோர் தங்கள் குழந்தைகளுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சிந்திய கண்ணீரே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை இல்லாமல் ஆக்கியதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பொது நூலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற புதிர் எடுத்து பொங்கல் நடத்தும் விழாவில்...

பொருளாதார, மத ரீதியிலான மாற்றங்கள் ஏற்படும்

எதிர்வருங் காலங்களில் நடைபெறும் சுதந்திர தினத்தில் பொருளாதார மற்றும் மத ரீதியான மாற்றங்கள் ஏற்படும் என நம்புவதாக யாழ்.மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற இலங்கையில் 67 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு...

வழிபாடுகளில் கலந்துகொள்ள இராணுவம் அனுமதி

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள பலாலி இராஜஇராஜேஸ்வரி ஆலயத்தில் தைப்பூச திருநாளான செவ்வாய்க்கிழமை (03) பொதுமக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட இராணுவத்தினர் அனுமதியளித்தனர். இராணுவ சோதனை சாவடியில் இருந்து இராணுவத்தினரின் பஸ்கள் மூலம் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆலயத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். பொதுமக்களுடன் இணைந்து யாழ். மாவட்ட படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்,...

முதியோர்களுக்கான கண்வில்லைகள், பிரதேச செயலாளர்கள் ஊடாக வழங்கப்படும்

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தால் வறிய நிலையில் வாழும் முதியோர்களுக்கு வழங்கப்படும் இலவச கண்வில்லைகள், எதிர்காலத்தில் உரிய பிரதேச செயலாளர் ஊடாக முதியவர்களுக்கு வழங்கப்படும் என செயலகத்தின் பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த இலவச கண்வில்லைகளை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பிரதேச...

அசிட் வீசிய வயோதிபருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பூதவராயர் வீதி பகுதியில் வைத்து நபரொருவர் மீது கடந்த திங்கட்கிழமை(02) அசிட் தாக்குதல் மேற்கொண்ட வயோதிபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், செவ்வாய்க்கிழமை(03) உத்தரவிட்டார். இந்த அசிட் தாக்குதலில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பொன்னுத்துரை கமலநாதன்(வயது 45) என்பவர் படுகாயமடைந்த யாழ். போதனா...

மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு

பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மாற்றுவலுவுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து செலவு கொடுப்பனவாக மாதாந்தம் 750 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் சி.பரந்தாமன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2015ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட பிரேரணையின் பிரகாரம் ஜனவரி...

விவசாய காணிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் – மாவை

இராணுவம் பயன்படுத்திவரும் விவசாய நிலங்களை, மக்களுக்கு பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தில் அமைக்கப்பட்ட நெல்லியடி மரக்கறிச் சந்தையை செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும்...

ஓமந்தை சோதனைச் சாவடி அகற்றப்படவில்லை – இராணுவம்

ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மை இல்லை என பதில் இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். முன்னரைப் போலவே ஓமந்தை இராணுவ முகாம் அவ்விடத்தில் இருக்கும். ஆனால் யுத்த காலத்தை போன்று அல்லாமல் அதனை சோதனை நடவடிக்கைகளில் தளர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓமந்தை ஊடாக பொருட்கள்...

பிரதமரின் சுதந்திரதின செய்தி

இன்று, நாம் 67ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு நாகரீகமான அரசியல் கலாசாரம் எமது தாய்நாட்டில் உதயமாகிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்திலேயே கொண்டாடுகின்றோம். இலங்கையின் முதலாவது பிரதம அமைச்சர் தேசபிதா மேன்மை தங்கிய டீ.எஸ்.சேனாநாயக்க அவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தையே பிரதான கருவியாகப் பயன்படுத்தினார். அந்தச் சக்தியின் மூலம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அந்த...

ஜனாதிபதியின் சுதந்திர தின செய்தி

நாட்டில் ஒரு புதிய நல்லாட்சி யுகம் உதயமாகியிருக்கும் இவ்வேளையில் இந்த 67 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் விசேட முக்கியத்துவம் பெறுகிறது. இது எமது தேசத்தின் சுதந்திரம் மற்றும் சனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எமது மக்களின் ஐக்கியத்திற்கான புதியதோர் அர்ப்பணத்துடன், மீண்டும் மேலெழுந்துவரும் காலனித்துவ சக்திகளைத் தோற்கடித்து எதிர்காலத்தை நோக்கி புதிய உத்வேகத்துடன் முன்னோக்கிச் செல்லும்...

அரசின் 100 நாள் திட்டத்திற்கு கமலேஷ் ஷர்மா பாராட்டு

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் ஷர்மா தற்போதைய அரசின் 100 நாள் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று (02) அலரிமாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடும் போது அவர் பொதுநலவாய அமைப்பின் ஆலோசனைகள் பல 100 நாள் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் அதனூடாக இலங்கையில் புதிய...
Loading posts...

All posts loaded

No more posts