- Wednesday
- September 17th, 2025

வடமாகாண கல்வி அமைச்சினால் உருவாக்கப்பட்ட கல்வி நியதிச் சட்டம் வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (30) நடைபெற்றபோது, கல்வி நியதிச் சட்டத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வாசிப்பு சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவால் சமர்ப்பிக்கப்பட்ட கல்வி நியதிச் சட்டத்தின் முதலாம்...

வடக்கு மற்றும் கிழக்கைச்சேர்ந்த இளைஞர் இருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர். போலியான கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்வதற்கு முயன்ற போதே அவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுகளுடைய இளைஞர் என்று தெரியவருகின்றது. அவ்விருவரும்...

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று தொழிலாளர்களின் தினமாகும். தனது வியர்வையைச் சிந்தி உழைத்து உலகத்தின் நிலைத்திருப்பை உறுதிசெய்யும் தைரியம் மிக்கவர்களின் தினமாகும். தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்கு கட்டுப்பாடு விதித்து அவற்றை நசுக்கியிருந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மேற்கொண்ட பாரிய சமூகப் போராட்டத்தின் இறுதியில் மக்களுக்கு சுதந்திரமாக...

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் மீது மீசாலைச் சந்திக்கு அண்மையில் இனந்தெரியாத நபர்கள் புதன்கிழமை (29) இரவு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். இந்தக் கல்வீச்சுத் தாக்குதலில் பஸ்ஸின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. பஸ்ஸில் பயணித்த பயணிகளை பிறிதொரு பஸ்ஸில் அனுப்பி வைத்த சாரதி, பஸ்ஸை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்....

கொள்ளையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரை தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல யாழ். நீதவான் பொ.சிவகுமார் புதன்கிழமை (29) அனுமதி வழங்கினார். கொள்ளையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கடந்த 23ஆம் திகதி ஊடகவியலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட நால்வர்...

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மாகாண சபை தீவிர நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது. இன்று நடைபெற்று வரும் வடக்கு மாகாண சபையின் 28ஆவது மாதாந்த அமர்வில் அவைத்தலைவரால் குறித்த விடயம் சபைக்கு முன்வைக்கப்பட்டது. தற்போது அதிகரித்துள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தினால் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே வாள்வெட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்...

நேபாள பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கும் செம்மரங்களைக் கடத்தினர் என்ற குற்றச்சாட்டில் ஆந்திராவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 21 தமிழர்களுக்கும் வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை காலை அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 28 ஆவது அமர்வு இன்று காலை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் கைதடியில் உள்ள பேரவை அலுவலகத்தில் ஆரம்பமானது. இந்த அமர்வின்...

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அரச வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அரச வேலையை வழங்க வேண்டும் என்றும் தமக்கு குறித்த பிரச்சினைக்குரிய தீர்வை எழுத்துருவில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்றும் இரண்டாவது நாளாகவும்...

வடக்கு-கிழக்கு மக்களின் அதிகப்படியான வாக்குகளால் நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவானீர்கள். தமிழ் மக்கள் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எதிர்பார்த் திருக்கிறார்கள். அதற்கான செயற்பாடுகளை நாங்கள் உங்களிடம் எதிர்பார்த்திருக்கின்றோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் வலியுறுத்தினார் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை. இவ்வாண்டுக்கான முதலாவது ஆயர் பேரவை கடந்த வாரம் கண்டியில் கூடியது. இதன் பின்னர்...

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு பகுதிகளின் 1,000 ஏக்கர் காணிகளில் மீளக்குடியமர்வதற்கு இதுவரையில் சுமார் 825 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், புதன்கிழமை (29) தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர்...

வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்குப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயமாக இருக்கும் பொதுமக்களின் காணிகளை மீள்குடியேற்றத்துக்கு விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம், 2ஆவது தடவையாகவும் ஒத்திவைக்கட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டம் பிற்பொடப்பட்டு இன்று புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தத. இந்நிலையில் நேற்றய கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதிக்கு பிற்பொடப்பட்டுள்ளது....

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம், இன்று ஏப்ரல் 30ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என்று தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, எனினும் இந்த திருத்தச் சட்டத்தின் முக்கிய மூன்று சரத்துக்கள், அடுத்து வரும் புதிய நாடாளுமன்றிலிருந்தே அமுலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள...

பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட 37 இந்திய மீனவர்களை, எதிர்வரும் மே 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, நேற்று புதன்கிழமை (29) உத்தரவிட்டார். தமிழக மாநிலத்தின் நாகப்பட்டினம், அக்கரைபேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சேர்ந்த 37 இந்திய...

ஜனாதிபதி தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிகம ரஜமஹா விஹாரையில் 28ஆம் திகதி நடைபெற்ற ஆசீர்வாத போதி பூஜையில் கலந்துகொண்டதன் பின்னர் அங்கு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதுதான்...

இப்பவும் மத்தியே எம்மை வழிநடத்திவருகிறது. நாங்கள் சேர்ந்தே செய்வோம் வாருங்கள் என்று கூறிவிட்டு கடிவாளத்தை சட்டப்படி தம்வசம் வைத்திருக்கின்றனர் எனவே வெகுவிரைவில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். மாந்தை கிழக்கு பாலிநகரில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கடைத்தொகுதி திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்....

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சாதாரண மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமல்லாமல், ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். அவரின் முன்னேற்றகரமான பாதைக்கு இது நல்ல உதாரணமாகும்.' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாட்டில் பிரச்சினைகள்...

நேபாளத்தில் இடம்பெற்ற பாரிய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நோக்கில் யாழ் மாவட்டச் செயலகம் உதவிப் பொருட்களை சேகரித்து வருகிறது. உதவ விரும்புகிறவர்கள் இன்று (30) பொருட்களை பிரதேச செயலகத்துக்கு வழங்க முடியும். இதனடிப்படையில் கூடாரம் (Tents small, medium and large)-மெத்தைகள் (Mattress)-போர்வைகள் (Blankets) நீர் தூய்மையாக்கும் கருவி (Water Purifiers)-சுகாதார...

சீகிரியாவில் எழுதியமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட மட்டக்களப்பு யுவதி சின்னத்தம்பி உதயசிறி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அனுராதபுரம் சிறையில் இருந்த இவருக்கு அண்மையில் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. 27 வயதான இவர், கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி தொல்பொருள் ஆய்வுக்குரிய சிகிரியா மலைக் குன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த வேளை, சுவரோவியங்களில்...

கூட்டுறவு அமைப்புகள் பல சாதனைகளை நிகழ்த்திய காலம் ஒன்றிருந்தது. ஆனால், இன்று கூட்டுறவுத்துறை நலிவடைந்திருப்தோடு, கூட்டுறவு அமைப்புகளுக்கும் சமூகத்துக்கும் இடையிலான இடைவெளியும் அதிகரித்து வருகிறது. கூட்டுறவுத்துறையின் இந்தச் சரிவுக்குப் பல காரணங்கள் உண்டு. அதில் இளையோர் பற்றாக்குறைவும் ஒன்று. இளையோரை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டால் கூட்டுறவுத்துறைக்குப் புதுவேகம் பிறக்கும் என்று வடக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

கௌரவ சபாநாயகர் அவர்களே!.... 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்கான இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். 1978 இல் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான காலஞ்சென்ற ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சி முறையை அறிமுகமாக்கியிருந்தார். அது நடைமுறைக்கு வந்தபோது தென்னிலங்கையிலிருந்து நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை...

All posts loaded
No more posts