Ad Widget

உடுத்துறையில் காவல்துறை செய்தது என்ன! உண்மைகள் இதோ

உடுத்துறையில் காவல்துறை சுட்டது பற்றிய செய்திகள் காவல்துறையின் வாக்கு மூலத்துடன் உள்ளுர் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி 

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய நபரின் குடும்பத்தின் மீது கஞ்சா காய்ச்சுவதாக காவல்துறையிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை சென்று விசாரித்ததில் அங்கு தடயங்கள் எதுவும் இல்லை . தகவல் கொடுத்தவர் யார் என்பது குறித்த குடும்பத்திற்கு தெரிய வந்தது ம்.தகவல்கொடுத்தவரது வீட்டில் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது .

பின்னர் அதனை செய்ததற்காக மீண்டும் பளை காவல்துறை யின் 10 பேர் கொண்ட குழு சந்தேக நபரின் வீட்டுக்கு படையெடுத்துள்ளனர் அங்கு கைது செய்ய முற்படுகையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்போது காவல்துறையினரும் திருப்பி தாக்கியுள்ளனர். கர்ப்பிணி பெண் மீதும் தாக்குதல் செய்யப்பட்டிருக்கிறது. 36 தடவை பொலிசார் வானத்தினை நோக்கி துப்பாக்கி வேட்டு வைத்தும் நிலமை கட்டுக்கடங்காத நிலையில்  இறுதியில் கோடாரி துாக்கியவர் மீது பிஸ்டலால் காவல்துறை சுட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர்ஃ

காவல்துறை தந்திரமாக இரகசியமாக செய்யவேண்டிய நடவடிக்கைகளை வேண்டுமென்றே வன்முறை துாண்டும் வண்ணம் நடந்துகொள்வதாகவும் தகவல் தருபவர்களை காட்டிக்கொடுப்பதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts