Ad Widget

122 வாகனங்களும் நீதிமன்றில் ஒப்படைப்பு!

யாழ். நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது கைப்பற்றப்பட்ட 122 வாகனங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 20ம் திகதி புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சம்பவத்தினைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் யாழில் நடைபெற்றது. அதன்போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள் பலர் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

இதன் பின்னர் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

அந்த தாக்குதலின் போது இளைஞர்கள் தாம் வந்த மோட்டார் சைக்கிள்களையும், துவிச்சக்கர வண்டிகளையும் அந்த இடத்தில் விட்டு விட்டு தப்பி ஓடினர்.

இவ்வாறு கைவிட்டு ஓடிய வாகனங்களை மீட்ட பொலிஸார் அவற்றை நீதிமன்றில் ஒப்படைத்தனர். அவ்வாறு மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் 73, மற்றும் துவிச்சக்கர வண்டிகள் 46 உட்பட 03 முச்சக்கர வண்டிகளை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts