Ad Widget

நிதி அமைச்சின் சில ஆவணங்களைக் காணவில்லையாம்!

நிதி அமைச்சின் 2000க்கும் அதிகமான ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இவற்றில் முக்கியமான ஆவணங்களும் அடங்குவதாக அவர் கூறியுள்ளார். மேலும் இவற்றை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். விரைவில் இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரிசியின் விலையில் மேலும் அதிகரிப்பு?

வரவு செலவு திட்டத்தில் நெல் விலை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாயாக அதிகரித்தமையால் அரிசி விலை குறைக்கப்படும் என எதிர் பார்த்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். எப்படியிருப்பினும் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பினால் வாடி க்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப் பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. புதிய விலையின் கீழ் கடைகளில் நாட்டு அரிசி ஒரு கிலோ 85...
Ad Widget

ஹக்கீமின் தேசிய அரசுக்கான அழைப்பை ஏற்க ஆலோசித்துவருகிறதாம் கூட்டமைப்பு!

கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசை நிறுவுவதற்கான ஹக்கீமின் அழைப்பை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது என்றும், இதுகுறித்த முடிவை நாளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவிப்பார் என்றும் தெரியவந்துள்ளது. மத்தியைப்போன்று, மாகாணத்திலும் தேசிய அரசை உருவாக்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி என்பன முன்வரவேண்டும் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ஹக்கீம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்....

யாழில் இன்று போராட்டம்!

காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தவுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்ற போராட்டங்களைத் தொடர்ந்தே இன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தின் முன்பாக இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்தப் போராட்டங்களை வவுனியா, மன்னார் மாவட்டங்களின் பிரஜைகள் குழு, 'நாங்கள்'...

வீதியில் துரத்திச்சென்று இளைஞனின் கையை வெட்டிய குழுவினர்

யாழ்ப்பாணம் கோப்பாய் அம்மன் கோவிலுக்கு அருகில், ஞாயிற்றுக்கிழமை(08) இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞனின் கை வெட்டப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் பகுதியை சேர்ந்த ஏ.அலெக்ஸ்தீபன் (வயது 20) என்பவரே இவ்வாறு கையை இழந்து படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனை வீதியில் துரத்தி சென்ற குழுவினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன்...

சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய ஐவர் கைது

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை(07) இரவு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொகான் மகேஸ் தெரிவித்தார். தாவடி, இளவாலை மற்றும் ஆனைக்கோட்டையை சேர்ந்த இந்த சந்தேகநபர்களிடமிருந்து குறடுகள், கத்தி மற்றும் கம்பிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன. வீதியில் நடமாடிய சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, சந்தேகத்துக்கிடமான...

மகிந்தவின் ஆட்சியில் உரிய அந்தஸ்து தரப்படவில்லை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எனக்கும் கூட சரியான அந்தஸ்து தரப்படவில்லை. ஆனாலும் நான் கட்சியை விட்டு ஓடிவிடவில்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். எந்தப் பதவி என்றாலும் கட்சிக்காக தொடர்ந்து போராடுவதே சிறந்தது. எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெப்ரவரி 14 ஆம் திகதியன்று கலந்துரையாடவுள்ளதாகவும்...

இந்த வாரத்துள் 3000 ஏக்கர் விடுவிப்பு

வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் ஒரு பகுதியை முதல் கட்டமாக இந்த வாரத்துக்குள் விடுவிப்பதற்கு கொழும்பு அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளதாக நம்பகரமாக தெரிய வருகிறது. தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு முதலில் சில ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்குத தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம்...

காணாமற்போன வாகனங்களைத் தேடும் புதிய அரசு காணாமற்போனவர்கள்பற்றி அக்கறை காட்டவில்லை

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமற்போயுள்ள வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், கடந்த ஆறு வருடங்களாகக் காணமற்போனவர்களைத் தேடி அவர்களது உறவுகள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்தும் புதிய அரசு அதுபற்றி அக்கறை காட்டுவதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். காணாமற்போனவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டச்...

யாழில் கழிவு ஒயிலினால் பாதிக்கப்பட்ட கிணறுகளை பார்வையிட்ட கொழும்பு சுகாதார அதிகாரிகள்!

யாழ்.சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயிலினால் பாதிக்கப்பட்ட கிணறுகளை பார்வையிடுவதற்காக கொழும்பிலிருந்து சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்றைய தினம் குறித்த பகுதிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், நீர் மாதிரிகளையும் சேகரித்துள்ளனர். இன்றைய தினம்  காலையிலேயே உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய் ஆகிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்படும் இடங்களிலிருந்து நீர் மாதிரிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்....

மாற்றத்துக்காய் வாக்களித்தோம் மாற்றுவீரா எம் வாழ்வை?

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்டப் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் முல்லைத்தீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காணாமல் போனோரை கண்டுபிடிக்க கோரியும், கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியுமே இந்தப்...

மஹிந்த அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – ஜே.வி.பி

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும், இதுவரை காலமும் தமது பிரச்சனையை வெளியிடாது மௌனமாக இருந்த அனைவரும், தமது முறைப்பாடுகளை மக்கள் விடுதலை முன்னணியின் நீதி வழங்கும் குழுவிடம் அறியத்தருமாறு மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது...

20 கிலோ கஞ்சா மீட்பு

பருத்தித்துறைமுனை கடற்கரைப் பகுதியிலிருந்து 20 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா பொதியொன்று ஞாயிற்றுக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவான் பி.தந்தநாராயண தெரிவித்தார். கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டு பொலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கஞ்சா மீட்கப்பட்டது. மேற்படி பகுதியில் கஞ்சா பொதியிருப்பதை அவதானித்த இராணுவத்தினர் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலின்...

சாவகச்சேரியில் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் படுகாயம்

சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த செல்வராசா உதயராசா (வயது 34) என்பவரே படுகாயமடைந்தவராவார். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வீட்டில் இருந்த குடும்பஸ்தரை வெளியில் அழைத்த 6 பேர் கொண்ட குழுவினர்,...

சிற்றுண்டி விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டதையடுத்து சிற்றுண்டி உணவுகளின் விலைகளைக் குறைத்து விற்பனை செய்ய வியாபாரிகள் முன்வந்துள்ளதாக யாழ்.வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். அதன்படி யாழ்.நகரில் இயங்கும் ஏ தர உணவு நிலையங்களில் 15 ரூபாவுக்கு விற்ற தேநீர் 10 ரூபாய்க்கும், 30 ரூபா விற்ற பால் தேநீர் 25 ரூபாய்க்கும், பசுப்பால் தேநீர் 30...

சந்தேகநபர்கள் விசாரணைக்காலம் 48 மணித்தியாளங்களாக நீடிப்பு

சந்தேகநபர்களை 24 மணித்தியாளங்கள் தடுத்துவைத்து விசாரிக்கும் சட்டத்தை 48 மணித்தியாளங்களாக புதிய அரசு நீடித்துள்ளது. கொலை மற்றும் பாரிய குற்றங்கள் தொடர்பில் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை தற்போது 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கலாம் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார். இதே வேளை இச் சட்டத்தை முன்னைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய போது அதற்கு ஐக்கிய...

உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் அமோக நெல் விளைச்சல்

கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை அமோக விளைச்சலைப் பெற்றுள்ள நிலையில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (06.02.2015) அறுவடை விழா நடைபெற்றுள்ளது. மத்திய கல்வி அமைச்சால் விவசாய வளாகப் பாடசாலை என அங்கீகாரம் பெற்ற உருத்திரபுரம் மகா வித்தியாலயம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 3...

காணாமல் போன வாகனங்களை கண்டுபிடிக்க மகிந்தவின் ஜோதிடரை நாடவுள்ள ரணில்!

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான காணாமல் போன வாகனங்களை கண்டுபிடிக்க ஜோதிடர்களையே நாடவேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் காணாமல் போன ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை கண்டுபிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட...

பொலிஸாருக்குரிய அதிகாரங்கள் இராணுவத்திடம்: மக்கள் அச்சம் – டக்ளஸ்

பொலிஸாருக்குரிய அதிகாரங்களை இராணுவத்துக்கு வழங்கியிருப்பதன் காரணத்தால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு விதமான அச்சமும் அதேநேரம் சந்தேகமும் எழுந்துள்ளது, எனவே இந்நிலைமை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வில் இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டம்...

முன்னாள் அமைச்சர்களுக்கு இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள்

மகிந்த ராஜபக்ச அரசில் அங்கம் வகித்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்க புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் இவர்களுக்கு அந்தந்த அமைச்சுக்களின் ஊடாக வாகனங்கள் வழங்கப்படவுள்ளதுடன் அதற்கான எரிபொருளையும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி...
Loading posts...

All posts loaded

No more posts