அரச பணியாளர்களின் சம்பளம் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் 2000 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
அரச பணியாளர்களுக்கான 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பின் ஒரு கட்டமாக இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் நேற்று நாடாளுமன்றில் வைத்து குறித்த விடயத்தை அறிவித்தார்.