Ad Widget

கொக்குவிலில் ஆர்ப்பாட்டம்!!

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு தாமதமின்றி நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் ‘பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின்’ ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று கொக்குவிலில் இடம்பெற்றது.

kokuvil-2

இந்த ஆர்ப்பாட்டம் யாழ். பஸ் நிலையப் பகுதியில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. யாழ். மாநாகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆர்ப்பட்டங்ளை நடத்த யாழ். நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி கொக்குவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொக்குவில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை அலுவலகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Posts