Ad Widget

நீதிமன்றம் மீதான தாக்குதலாளிகள் குறித்த ஆதாரங்களை தந்துதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்!

யாழ். நீதிமன்ற வளாகத்தின் மீது கடந்த 20 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வீடியோ, புகைப்படங்களை எடுத்தவர்கள் அவற்றைத் தந்துதவுமாறு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கேட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவியின் படுகொலையைத் தொடர்ந்து இடம்பெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து யாழ். நீதிமன்ற வளாகத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து 130 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய குற்றத்தின் கீழேயே கைதாகினர்.

எனினும் நீதிமன்றின் மீது தாக்குதல் நடத்திய மேலும் பலர் கைதாகவில்லை. எனவே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வீடியோ, புகைப்பட ஆதாரங்களை தந்துதவுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். மேலும் இவ்வாறு ஆதாரங்களை தருபவர்களின் விவரங்களில் பூரண இரகசியம் பேணப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts