Ad Widget

நுவரெலியாவில் வித்தியாவுக்காக அமைதி ஊர்வலமும் ஆத்ம சாந்தி நிகழ்வும்

புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமைதி ஊர்வலமும் ஆத்ம சாந்தி நிகழ்வும் நுவரெலியாவில் நடைபெற்றது.

nuvareleya

புனித சவேரியார் கல்லூரிக்கு அருகிலிருந்து ஆரம்பமான இப் பேரணி, நுவரெலியா பிரதான வீதி ஊடாக லோசன் சுற்றுவட்டத்தை வந்தடைந்ததுடன் அங்கு இரங்கல் உரையும் சர்வ மத வழிபாடுகளும் இடம்பெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மேற்கொண்டிருந்தார்.

இவ் ஊர்வலத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான புத்திரசிகாமனி, மதத் தலைவர்கள், வர்த்தகர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts