Ad Widget

சுன்னாகத்தில் ஆர்ப்பாட்டம், பேரணிக்கு தடை

புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த தடையுத்தரவு இன்று 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts