Ad Widget

வித்தியா படுகொலை வழக்கு: விசேட நீதிமன்று ஊடாக விசாரிக்கப்பட்டு விரைவில் தீர்ப்பு! – ஜனாதிபதி

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை விசேட நீதிமன்றில் நிறுத்தி, குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு யாழ்.வேம்படி உயர்தரப் பாடசாலையில் வைத்து உறுதியளித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் தீடீர் பயணமாக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதந்தார். முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் 10:15 மணியளவில் பழைய மாநகர சபை வளாகத்தில் வந்திறங்கினார்.

cm

cm2

அவரை முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் வரவேற்றார்.வடமாகாண ஆளுநர் பளிஹக்கார வரவேற்று ஆளுநர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கிருந்து ஜனாதிபதி குழுவினர் வேம்படி உயர்தரப் பாடசாலைக்கு சென்றடைந்தனர். அங்கு மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார்.

இதன்போதே அவர் மேற்படி உறுதியை வழங்கினார். இந்த விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts