- Wednesday
- July 9th, 2025

வடக்கு மாகாணசபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிதி நிறுவனங்கள் மாலை 5 மணிக்குப் பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை, வடக்கு மாகாண சபை இது குறித்த தீர்மானம் ஒன்றை சபை அமர்வின்போது...

உணவு உண்பவர்கள் போன்று சென்ற சிலர் மாற்றுத்திறனாளி ஒருவர் உட்பட இரு பணியாளர்களை கடுமையாகத் தாக்கியதுடன் வாளால் வெட்டியும் காயப்படுத்தியுள்ளனர். சாவகச்சேரியில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவின் மல்லாவியைச் சேர்ந்த மருது லோஜன் (வயது 28), மாற்றுத்திறனாளியான ரஞ்சித் (வயது 37) ஆகியோர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். முன்பு இருந்த...

யாழ்.நாவாற்குழி சந்தியில் வியாழக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். நாவற்குழி சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றுவதற்காக காத்திருந்த பஸ் மீது, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் பின்பக்கமாக மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் 2 பேர்...

நாட்டு மக்கள் தொடர்ந்தும் அடிமை நிலையில் வைத்திருக்க விரும்பும் சிலரே நாட்டில் குழப்பத்தை தோற்றுவித்து வருவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு நேரடியாக உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சிறுபான்மை சமூகங்களுக்கு சிறப்புச் சலுகை வழங்குவதாகவும் வடக்கில் இராணுவம்...

திவிநெகுமவின் கீழ் அனைத்து நிதியும் மக்களுக்கு உதவுவதற்காகவே செலவிடப்பட்டுள்ளது. அது தவறு எனின் மக்களுக்காக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பஷில் ராஜபக்வின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் நல்லாட்சிக்குப் பதிலாக வைராக்கிய ஆட்சி தற்போது தோன்றியுள்ளதாகவும், மக்கள்வாத ஆட்சியை...

சுஹாசினி சமீபத்தில் கூறிய கருத்து ஒன்று பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டது. இவர் ‘Mouse’ பிடிக்க தெரிந்தவர்கள் எல்லாம் விமர்சனம் எழுதக்கூடாது என்று ஒரு மேடையில், கூற இந்த பிரச்சனை இணைய விமர்சகர்களை கோபம் அடைய செய்தது. இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் ஒரு வார பத்திரிக்கையில் உத்தம வில்லன் படத்திற்காக பேட்டியளித்துள்ளார். இதில் சுஹாசினி கூறியது...

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் எஸ்.கே.எம்.டீ தர்ஷனீ குணதிலக்கவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க முன்வைத்த இக்கோரிக்கைக்கு அமைச்சரவை நியமனம் வழங்கியது.

யாழ்.நகரிலுள்ள தனியார் நிறுவனங்களினூடாக பொதிகளை பரிமாறுவதில் தவறுகள் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் மாவட்ட இணைப்பதிகாரி வசந்தசேகரன் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அண்மையிலும் இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவ்விரண்டு முறைப்பாடுகளும் யாழ்.நகரிலுள்ள தனியார் பொதிகள் சேவைகள் மீதே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த வகையில்...

தகவலறியும் உரிமை சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 100 நாள் திட்டத்தின் ஊடாக தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்படும் என மைத்திரி அரசு தெரிவித்திருந்தது. எனினும் 100 நாள் இன்றுடன் முடிவடைகின்ற நிலையிலும் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் தகவலறியும் உரிமை சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அந்த...

யாழ்.மாவட்டத்தின் தனியார் துறையில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு இளைஞர், யுவதிகளை சேர்த்துக்கொள்ள யாழ்.வணிகர் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் யாழ். வணிகர் கழகத்திடம் விண்ணப்பிக்க முடியும் என வணிகர் கழகத்தின் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். தனியார் துறைகளில் கணனி இயக்குநர், விற்பனையாளர்கள், வெளிக்கள அலுவலர், கணக்குப் பதிவாளர்கள், லிகிதர்கள், விற்பனை...

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்ந்து விளக்கமளிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கோரியதற்கிணங்க அவருக்கு 90 நாள்கள் கால அவகாசம் வழங்கியது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை முன்னிலையாகினார்....

கொழும்பு-7 விஜயராம மாவத்தையிலுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை நோக்கி, ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு குழுவினரே, அங்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் இன்றுடன் முடிவடைகின்றது. தேர்தலில் மாற்றத்திற்கு ஒன்றுபடுவோம் மைத்திரி அரசின் கீழ் ஜனவரி 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய 100 நாள் வேலைத்திட்டம் இன்றுடன் முடிவடைகின்றது. ஆயினும் குறித்த திட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்ட பல விடயங்கள் இன்னமும் செய்து முடிக்கப்படவில்லை. அதன்ஒரு அங்கமாக 100 நாள் முடிவில்...

"ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான தேசிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஆக்கபூர்வமான சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன'' - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடைகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின்...

யாழ்ப்பாணத்தில் ஊடகவியளலாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் அவருடன் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்த கைது சம்பவத்தில் ஹிரு செய்திச் சேவையின் யாழ்ப்பாணத்துக்கான ஊடகவியலாளரான த.பிரதீபன் என்பவரே கைது செய்யப்பட்டவராவார்.

யாழில் புதன்கிழமை (22) நடைபெற்ற யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்க உரிமையாளர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை புகைப்படம் பிடிக்க முற்பட்ட இராணுவப் புலனாய்வாளருக்கும் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பேரணியில் கலந்து கொண்டவர்களை தனித்தனியாக படம் எடுக்க ஒருவர் முற்பட்டமையை அவதானித்த பேரணியில் கலந்து கொண்டவர்கள், அவரிடம் நீங்கள் ஊடகவியலாளரா என கேட்டபோது, அவர் அதற்கு...

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் இன்று 23ஆம் திகதியுடன் நிறைவடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக புத்தக நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (23) இரவு 9.00 மணிக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் உரை அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒலி,ஔிபரப்பு செய்யப்படவுள்ளது.

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு கடுவல நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மூவரும் மே மாதம் 5ம் திகதிவரை விளக்கமறியலில்...

All posts loaded
No more posts