- Thursday
- September 18th, 2025

விளையாட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கின்றது. சுற்றி இருப்பவர்களுடன் மனம் விட்டுப் பேச வசதி அளிக்கின்றன. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதை விளையாட்டுக்கள் தடுக்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண கல்வி, கலாசாரம், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையின் கீழ் வடமாகாண முதலமைச்சர் வெற்றிக் கிண்ணத்துக்காக அமைச்சுக்களுக்கிடையிலான விளையாட்டு விழா – 2015 நாயன்மார்கட்டு,...

இந்த வருடமும் மாவீரர் நாளன்று ஈகச்சுடர் ஏற்றுவேன். எங்கள் உறவுகளை, பிள்ளைகளை, நினைவு கூர்வதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன். கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினமன்று ஈகச்சுட ரேற்றியமை தொடர்பில், விசாரணைக்கு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

வடமராட்சி மணற்காட்டுப் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மணற்கொள்ளையர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை (07), இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த எம்.அச்சல (வயது 32) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த துன்னாலை,...

புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த கையேடு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்தார். இதுகுறித்த விளம்பர அறிவித்தல் நாளை மற்றும் எதிர்வரும் ஞாயிறு பத்திரிகைகளில் வெளியிடப்படும் என அவர் கூறினார். கடந்த உயர்...

இலங்கை மத்திய வங்கியின் ஆறாவது பிரதேச அலுவலகம் நேற்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஒன்பது மணிக்கு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்தனர். ஏற்கனவே அநுராதபுரம், மாத்தளை, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம்,...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் 100 நாள்கள் வேலைத்திட்டத்துக்கு வாழ்த்துத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டம்' என தலைப்பிட்டு, வெள்ளைவான் கலாசாரம், கழிவு எண்ணெய் கலாசாரம், கசாப்புக்கடை அரசியல் கலாசாரம், இலஞ்ச ஊழல் கலாசாரம் ஆகியவற்றை நீக்கி, தமிழ் மக்களுக்கு அச்சமின்றி அடக்குமுறையின்றி, அடவாடித்தனமின்றி, கௌரவமாக,...

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பல்கலைக்கழக வாகன சாரதிகளின் கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்கத்திடம் சாரதிகள் புதன்கிழமை (06) முறையிட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து 5 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும்;, தங்களுடைய கொடுப்பனவை வழங்காது...

வடமாகாணத்திலுள்ள சுண்டிக்குளம், மடு மற்றும் நெடுந்தீவு ஆகிய காடுகளை தேசிய சரணாலயங்களாக மாற்றுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தேசிய சரணாலயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்துக்கமையவே வடக்கில் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்குரிய சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், வடமாகாண காடுகளில் காணப்படுகின்ற வன...

"இராணுவத்தின் பிடியிலிருக்கும் சம்பூர் கிராமம் மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்பட்டது என்ற செய்தியை (நாளை) இன்று வியாழக்கிழமை கேட்பீர்கள்." - இவ்வாறு சம்பூர் மக்களிடம் உறுதி தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன். அனல் மின் நிலையம் அமைப்பதற்காக திருகோணமலையின் சம்பூர் கிராமத்தை உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவம் அபகரித்துள்ளது. இதனால் 818...

இலங்கையில் அடுத்துவரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை மைத்திரிபால தரப்பினர் நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் ஜனாதிபதிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் இந்தக் கோரிக்கை பிரதானமாக...

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரிடம் பெறப்பட்ட கையொப்பத்தினை வைத்து மோசடி செய்துள்ளதாக அப் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக பேரவையிடம் இன்று புதன்கிழமை (06) யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய பேரவை இன்று (06)...

எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் விலை குறைத்த போதும் அதற்கு அறவிடப்படும் வரி குறைக்கப்படாததால் எரிபொருள் கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் எரிபொருள் கூட்டுத்தாபனம் 4 பில்லியன் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 21...

விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியின் மகள் விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்கியிருப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (06) அனுமதியளித்தார். பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்று...

யாழ். மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலி (ஆடு வெட்டுதல்) தொடர்பான விடயத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தனுக்கும் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பா.நந்தகுமாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றது. யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (05) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதே, இந்தச்...

வைத்தியசாலைக்கான வருகையை தவிர்த்து, ஆயருக்காக பிரார்த்தனை செய்யுமாறு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் மக்களை கோரியுள்ளார். திடீர் சுகவீனமுற்ற நிலையில், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஆயரின் உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் வைத்தியசாலையில் அவருக்கு இடையூறு இல்லாதிருக்க வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை...

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் கைது செய்யப்படும் குழுக்களுக்கு பெயர்கள் சூட்டவேண்டாம் என்று வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பிரதிநிதிகள் கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற போது, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமே பிரகாஸ் இவ்வாறு கூறினார். அவர்...

யாழ்ப்பாணம் நகரப் பகுதயில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலைகளின முன்பாக போதைப் பொருள் வியாபாரம் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலும் பாடசாலை முடிவடையும் நேரத்திலும் இடம்பெறுகின்றது. இதற்கெதிராக யாழ்ப்பாணப் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர். என யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் யாழ்ப்பாணப் பிரதேச செயலர் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்...

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் கன மழை (100 மி.மீ மேல்) பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வசாவிளான் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இருக்கும் பலாலி இராணுவமுகாமின் நுழைவு வாசலுக்கு முன்பாக வசாவிளான் மக்கள்கற்பூரமேற்றி வைரவக் கடவுளை வழிபட்ட சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (05.05.2015) நடைபெற்றுள்ளது. வசாவிளான் பலாலி இராணுவக்குடியிருப்பு என்று பொறிக்கப்பட்ட வளைவில் இருந்து உள்நோக்கி சுமார் 200 மீற்றர் தூரத்தினுள்வசாவிளான் ஞானவைரவர் ஆலயம் உள்ளது. பெரிய வைரவர் ஆலயங்களில் ஒன்று...

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள போதைப்பாவனை, வாள்வெட்டுக் கலாசாரம் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். குடாநாட்டு நிலைமைகளை ஆராயும் விசேட கூட்டம் யாழ். அரச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத்...

All posts loaded
No more posts