இலங்கைக்கு போதைப் பொருள் கொண்டுவரும் நபர்களில் பிரதானமாக அரச நிறுவனங்கள் இரண்டின் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் தகவல் கிடைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வர்த்தக சபை அதிகாரிகளை சந்தித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
வர்த்தகர்களுக்கு இடையூறு இன்றி தமது வர்த்தகத்தை செய்துகொண்டுச் செல்ல ஏதுவான சூழ்நிலை ஏற்படுத்துவது அரசின் கொள்கை என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
வௌிநாடுகளில் இருந்து தற்போது அதிக பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் எதிர்வரும் காலத்தில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் என்றும் அதற்கான திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.