Ad Widget

வலி.வடக்கு, கிழக்கில் குடியமர 1087 குடும்பங்கள் பதிவு!

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மீளக்குடியமர ஆயிரத்து 87 குடும்பங்கள் கிராம சேவையாளர்களிடம் பதிவு செய்துள்ளனர்.

வலி.வடக்குப் பிரதேசத்தில் மீளக்குடியமர 795 குடும்பங்களும், வலி.கிழக்குப் பிரதேசத்தில் மீளக்குடியமர 292 குடும்பங்களும் இவ்வாறு பதிவு செய்துள்ளன என தெல்லிப்பழை, கோப்பாய் பிரதேச செயலக தகவல்கள் தெரிவித்தன.

தற்போது இப்பிரதேசங்களில் குடியேறிய 170 குடும்பங்களுக்கு அரைநிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 200 அரைநிரந்தர வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகன்றன.

இந்த அரைநிரந்தர வீடுகளை வழங்க யூ.என்.எச்.சி.ஆர். போன்ற அமைப்புக்ள சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கான பணம் கிடைத்ததும் பதிவு செய்யப்பட்ட ஒழுங்குவரிசையின்படி ஒரு குடும்பத்துக்கு அரைநிரந்தர வீடமைக்க ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Posts